Thursday, March 31, 2011

திருமண சடங்குகள் -5

நிச்சயதார்த்த சடங்கு : -

ஒரு தாம்பாளத்தில் நிச்சயதார்த்தத்துக்குறிய பொருட்களை வைத்து , பெண்ணை , விளக்கிற்கு வடபுறம் கிழக்கு முகமாக அமரச்செய்து தீப பூசை செய்தல் வேண்டும். பின் பெண்ணிற்கு மாப்பிள்ளையின் சகோதரி பன்னீர் ,சந்தனம் , குங்குமம் அளித்தி பெண் கையில் மேற்படி தாம்பாளத்தைக் கொடுக்கவேண்டும் .பிறகு சேலையைக் கட்டிவரச் செய்து மீண்டும் கிழக்கு முகமாக அமர்த்தி , விரவிய பாக்கு , மஞ்சளை இருமுறை கையால் எடுத்துப் போட்டு , மூன்றாம் முறை கையில் வைத்துக் கொள்ள அத்ன் மேல் வெற்றிலை , பாக்கு , 2 பழம் மஞ்சள் தடவிய தேங்காயை வைத்து மாப்பிள்ளை வீட்டாருக்கு இருபங்கும் , அவ்வாறே பெண் வீட்டாருக்கு ஒரு பங்கும் கொடுக்க வேண்டும் .

கலப்பரப்பு : -

மணப்பெண் புத்தாடையும் மாலையும் அணிவித்து கலப்பரப்பிடும் போது , மாப்பிள்ளை வீட்டார் கொடுக்கும் சேலையை களத்தில் ( தரையில் விரித்து ) பரப்பி அதி அமர்ந்து மங்களப் பொருட்களை இருவீட்டாருக்கும் கொடுக்கவேண்டும் . நிச்சயார்த்த சடங்கின் போது மாப்பிள்ளை வீட்டாருக்கு 2 பங்கு கொடுத்திருந்தால் , இப்பொழுது மாப்பிள்ளை வீட்டாருக்கு ஒரு பங்கும் , பெண் வீட்டாருக்கு 2 பங்கும் கொடுக்கவேண்டும் . கலப்பரப்பு சேலை மணமகளின் தங்கைக்கு கொடுக்கவேண்டும் .

மணமேடையில் வழிபாடுகள் : -

மணவறை இடத்தைப் பெருக்கி , பசுவின் சாணத்தால் மெழுகி , அத் உல்ர்ந்த பின் மாக்கோலம் போடவேண்டும் ..
ஆசான் இருக்கைக்கு மேல்புறம் தென்வடலாக ஒரு வாழையிலையைக் கிழக்கு நோக்கி விரித்து, அத்ன் மேல் தென்கோடியில் மஞ்சளால் ஆன பிள்ளையார் , நிறை நாழி , நெல் , திருவிளக்கு இவைகளை கிலக்குமுகமாக வைக்க வேண்டும் . அவற்றிற்குத் திருனீரு , சந்தனம் , க்ங்குமம் , பூச்சரம் சாத்தவேண்டும் .

வழிபாடுகள் விபரம் : - 1 ) வினாயகர் பூசை , 2 ) திருவிளக்கு பூசை , 3 ) புனித நீர்க்கலசபூசை , 4 )பஞ்ச கவ்விய பூசை , 5 ) சந்திர கும்ப பூசை , 6 ) முளைப்பாலிகை பூசை , 7 ) சிவகும்பபூசை, சக்தி பூசை , 8 ) நவக்கிரக பூசை , 9 ) திருமாங்கல்ய பூசை , 10 ) அழல் ஒம்பல் ( தீ வளர்த்தல் ) , 11 ) அழலில் சுள்ளியிடல் (ஒமம் )
முன்னதாக கும்பங்களில் ஆவாகணம் செய்யப்பட்ட தேவதைகட்கும் , உமா மகேஸ்வரர்கட்கும் , நவக்கிரகங்கட்கும்

Thursday, March 24, 2011

திருமண சடங்குகள் -4

மாப்பிள்ளை அழைப்பு : -

மாப்பிள்ளை வெளியூரில் இருப்பினும் , உள்ளுரில் இருப்பினும் அவரை , அவர் இல்லத்தில் இருந்து திருமணம் நிகழும் ஊரில் திருமண நாள்வரை அவ்ர் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இடத்திற்கு அல்லது திருமண வீட்டிற்கு அழைத்து வர பெண்வீட்டிலிருந்து பெண்ணும் ஆணும் போவது வழக்கம் .மாப்பிள்ளையை அழைத்துவரப் பிரயாணத்திற்குரிய ஏற்பாடுகளை முன்பாகவே செய்து கொண்டு , மாப்பிள்ளை அழைப்புச்சுருள் , தாம்பூலம் முதலியவுடன் இவற்றிற்குரிய பணத்துடனும் , ஒரு பாத்திரத்தில் லட்டு அல்லது மைசூர்பாகு அல்லது பாதூஸா போன்ற இனிப்பு பண்டங்களில் ஒன்றுடன் செல்லவேண்டும் .

மாப்பிள்ளை அழைப்பிற்கு பெண்வீட்டார் கொண்டு செல்ல வேண்டியவை :-

விளக்கு ஆரம் 1 , மஞ்சள் பூசிய தேங்காய் 3 , விளக்கிற்கு ட்ய்ஹேங்காய் 1 ,பழங்கள் , வெற்றிலை , பாக்கு ,விரலி மஞ்சள் 100 கிராம் ,பாக்கு 100 கிராம் ,மாப்பிள்ளைக்கு ஆரம் 2 , இனிப்புப் பொருள் , சரப்பந்து , விடலைத் தேங்காய்கள் , சுருள் பணம் .

பெண் அழைப்பு ஆயின் , நிச்சய தாம்பூலம் செய்து அழைக்க மாப்பிள்ளை வீட்டார் கொண்டு செல்லவேண்டிய பொருட்கள் ; _

விளக்கு ஆரம் 1 , மஞ்சள் பூசிய தேங்காய் 3 ,விளக்கிற்கு தேங்காய் 1 ,வெற்றிலை , பாக்கு , பழங்கள் ,சூடன் , பத்தி , சந்தணம் , குங்குமம் ,.
வெற்றிலைகட்டு ,பழம் 1 சீப்பூ ,விரலி மஞ்சள் 100 கிராம் , பாக்கு 100 கிராம் ,
பெண்ணிற்குஆரம் 2, தலைக்குப் பூத்துண்டு, பூச்சரப்பந்து.
மரகுங்குமச் செப்பு 2 ( நிச்சய தாம்பூலத்திற்கு 1 , திருமாங்கல்யம் வைக்க 1 )
பெண்ணீற்கு சேலை , சட்டை .

மாப்பிள்ளை வீட்டார் பெண்ணிற்கும் , அவ்ள் தம்பிக்கும் செய்ய வேண்டியவை : -
திருமாங்கல்யம் , தங்க மோதிரம் , தாலிச்செயின் .
தங்க மோதிரம் , புத்தாடை ( பெண்ணின் தப்பிக்கு )
நிச்சயார்த்த சேலை , முகூர்த்தச் சேலை , கலப்பரப்பு சேலை .

மாப்பிள்ளை புறப்பட வேண்டிய நல்ல வேளையில் , ஒரு தாம்பாளத்தில் தேங்காய் 3 ( மஞ்சள் பூசியது ), வாழைப்பழம் 3 சீப்பு ,வெற்றிலை ,பாக்கு , விரலி மஞ்சள் , சந்தணம், பன்னிர் ,பூமாலை 2 ,பூச்சரப்பந்து 1 , இவற்ருடன் மாப்பிள்ளை அழைப்புச் சுருளையும் வைத்து , மாப்பிள்ளைக்குப் பன்னிர் தெளித்து , சந்தனம் குங்குமம் வழங்கி , இரு பூமாளைகளையும் அணிவித்து , பெண்களுக்குப் பூச்சரம் கொடுத்து , மாப்பிள்ளையிடம் தாம்பாலத்தை எடுத்துக் கொடுக்க வேண்டும் . பின் பெரியவர்களிடம் திருனீறு பூசுவித்து மாப்பிள்ளையை அழைத்து வருவது மரபு .
முன்னதாகவே மாப்பிள்ளை அழைத்து வரப்ப்ட்டு வேறிடத்தில் தங்க வைத்திருந்தால் , திருமணத்தன்று காலை நல்வேளையில் திருமணம் நடைபெறும் இடத்திற்கு அழைத்து வரும் பொழுது , இரு மாலைகள் அணிவித்தும் , தாம்பூலம் கொடுத்தும் மரியாதை செய்து மேளதாளத்துடன் அழைத்து வர வேண்டும் . அப்போது மீண்டும் அழைபுச்சுருள் கொடுக்க வேண்டுவது .

திருமண இல்லத்தில் மாப்பிள்ளைக்கு வரவேற்பு : -

மாப்பிளை தங்குவதற்கு திருமண அறையில் முன்கூட்டியே கிழக்கு நோக்கி ஒரு வாழையிலையில் முறையே மஞ்சள் பிள்ளையார் , நிறை நாழி , ஆரம் சாத்திய திருவிளக்கு , அவற்ரின் முன் உடைத்த தேங்காய், பழங்கள் ,வெற்றிலை , பாக்கு ,சந்தனம் , பன்னீர் , பத்தி , சூடன் , பூச்சரம் ,இவற்ரை வைத்திருக்கவேண்டும் .அடுத்து ஒரு நாற்காலி இட்டுத் தயாராக் இருக்கவேண்டும் .மாப்பிள்ளை திருமண இல்லத்திற்கு வந்ததும் ,வாசலில் மாப்பிள்ளையை கிழக்கு முகமாக் நிற்கவைத்து , இரு சுமங்கலிப்பெண்கள் , ஆரத்தி எடுக்கவேண்டும் .அத்ன்பின் மாப்பிள்ளையை அவ்ர் தங்கும் அறைக்கு அழைத்துச் சென்று நாற்காலியில் அமர்த்தியதும் , அங்குள்ள பிள்ளையார் , திருவிள்க்கு ஆகியவற்றுக்கு தூபதீபம் காட்டி மாப்பிள்ளைக்கு பெரியோர்கள் திருனீறு பூசிய பின் சிறிது பாலும் பழமும் மாப்பிள்ளைக்கு கொடுக்கவேண்டும் .

Wednesday, March 23, 2011

திருமண சடங்குகள் -3

திருமாங்கல்யத்திற்கு பொன் உருக்கி விடுதல் : -

குறிப்பிட்ட நான்னாளில் மணமகன் வீட்டில் திருமாங்கல்யத்திற்குப் பொன் உருக்கும் நிகழ்ச்சி நடைபெற வேண்டும் . இதற்குறிய தங்கத்தை மணமகனின் சாகோதரிகள் வழங்கவேண்டும்.
திருமாங்கல்யத்திற்கு புதிய பொன் தான் பயன்படுத்த வேண்டும் . ஒரு பொற்கொல்லரைச் சாதனங்களுடன் வரவழைத்து , நல்வேளையில் நாட்கால் நடுவதற்கு கூறியவிதமே வழிபாடு செய்து பொற்கொல்லருக்கு தேங்காய் ,பழங்கள் ,வெற்றிலை , பாக்கு ,ஆகியவற்றுடன் பணம் வைத்து நன்கொடையாக கொடுக்கவேண்டும் . பின் பொன்னை உருக்கச்சொல்லவேண்டும். குறித்த தேதிக்குள் திருமாங்கல்யத்தை ஒப்படைக்குமாறு கவனமாக பார்த்து கொள்ள் வேண்டும் .

முகூர்த்தக்கால் நாட்டல் : -

முகூர்த்தக்கால் குறிப்பிட்ட நாளில் நல்வேலையில் நாட்ட வேண்டும் .

நாட்கால் : - அரசு , மா , பலா , மரத்தின் கம்பு 5 அட் நீளத்தில் செம்மண் , சுண்ணாம்பு பட்டைகள் மாறி மாறி அடித்ததாக இருக்கவேண்டும் .

ம்ஞ்சள் நீரில் நனைத்துக் காயவைத்த புது துணியில் நவதானியம் , பருத்திக்கொட்டை , நாணயம் இவற்றை வைத்து ஒரு கிழியாக மஞ்சள் நூல் கயிற்றால் கட்டி , அத்துடன் மாவிலைக் கொத்து சேர்த்து வைத்து ஒரு மஞ்சள் கயிற்ரால் நாட்காலின் உச்சியில் கட்ட வேண்டும் .கன்னி மூலையில் ( தென்மேற்கு மூலை) குறிப்பிட்ட இடத்தில் குழிதோண்டி அதில் பால் , நவதானியம் , சந்தனம் ,பணம் ( காசுகள் ) போடவேண்டும் .
பின் ஒரு வாழையிலையில் மஞ்சள் பிள்ளையார் , நிறை நாழி , மாவிலையுடன் நிறைகுடம் , திருவிளக்கு ,தேங்காய் , பழங்கள் , தாம்பூலம் ( வெற்றிலை ,பாக்கு ) வைத்து தூபதீபம் கற்பூரம் காட்டி வழிபாடு செய்து , பந்தல்காரருக்கு திருனீறு ,சந்தனம் , தேங்காய் , பழங்கள் , வெற்றிலை , பாக்கு , ஆகியவற்றுடன் பணமும் கொடுத்து நாட்காலை மேற்படி குழியில் நட வேண்டும் .

Tuesday, March 22, 2011

திருமண சடங்குகள் - 2

திருமணம் உறுதி செய்து கொண்டபின்பு கூடிய விரைவில் இரு வீட்டாரும் தத்தம் உடன்பிறந்தோர் , மைத்துனர் , மாப்பிள்ளைகள் , அவர்கள் சம்பந்திகள் போன்ற நெருங்கிய உறவினர்களுக்கும் , மிகவும் வேண்டியவர்கட்க்கும் முன் அறிவிப்புச் செய்வது வழக்கம்.
அறிவிப்பு கடிதம் மாதிரி

அன்புடையீர் ,
என்னுடைய மகள் / மகன் ----------செல்வி / செல்வன் திரு-----அவர்கள்
மகன் / மகள் ---------செல்வன் / செல்வி------க்கு திருமணம் செய்ய --------தேதி உறுதி செய்யப்பட்டது. திருமணம்---------ஊர்--------இடத்தில்----மீ ( மாதம் )---ஆம்
நாள் --------( ஆங்கில்தேதி ) காலை மணி ---க்கு மேல் ----க்குள் நடைபெற இருக்கிறது. அச்சிட்ட அழைப்பிதழ் பின்னர் அனுப்பி வைகிகின்றேன் . முன் அறிவிப்பாக இக் கடிதம் அனுப்பியுள்ளேன்.
ஆதலின் தாங்கள் முன்னதாகக் குடும்பத்துடன் வந்து திருமணத்தை சிறப்பித்து மணமக்களை வாழ்த்துமாறு வேண்டிக் கொள்கிறேன் .

தங்களன்புள்ள,
( ஒப்பம் ) -------------
நல்ல ஒரு நாள் பார்த்து திருமண அழைப்பிதழ் அச்சுக்கு கொடுப்பது வழக்கம்.

திருமண் அழைப்பிதழ் மாதிரி
சிவமயம்

அன்புடையீர் ,

எல்லாம் வல்ல இறைவன் திருவருளால் நிகழும் மங்கள்கரமான கொல்லம் ஆண்டு--------ம்ளு--ஆண்டு-------ம் நாள்--------கிழமை----திதியும்-----
நட்சத்திரமும் கூடிய சுபதினத்தில்-------மணிக்கு மேல் ----மணிக்குள்------லக்கணத்தில்


மணமகன் பெயர் --------------------மணமகள் பெயர்
த/பெ-------------------------------------------த /பெ
ஆகியேர்ர்கள் திருமணம் பெரியேர்ர்களால் நிச்சயித்த வண்ணம் ( நடத்தும் இடம் )------------------- நடைபெறும் . திருமணத்திற்கும் மற்றும் அதைச் சார்ந்த சகல் வைபவங்களுக்கும் தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து மணமக்களை ஆசிர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ( ம் ) .

அவ்வண்ணமே விரும்பும்-----------------------------இங்ஙனம் . ,



தங்கள் நல்வரவை விரும்பும் உற்றார் உறவினர்


கடவுள் வழிபாடு

குலதெய்வம் , இஸ்ட தெய்வங்கட்குக் கானிக்கை ;-
திருமணம் உறுதி செய்யப்பட்ட பின் , இதர திருமண காரியங்கள் தொடங்கு முன் , இறையருள் வேண்டித் தத்தம் குல தெய்வம் இஸ்ட தெய்வங்கட்கு விருப்பம் போல் தொகை காணிக்கையாகப் போட ஒதுக்கி வைப்பது அல்லது உண்டியலில் சேர்ப்பது தெய்வ பக்தியுள்ல குடும்பங்களின் மரபு .

இறைவனுக்கு முதன்முதல் திருமண அழைப்பிதழ் சமர்ப்பணம் :-
திருமண அழைப்பிதழ் அச்சாகி வந்ததும் , அவற்றை மக்களுக்கு அனுப்பும் முன் , இறைவன் பாதத்தில் அழைப்பிதழ் ஒன்றை தேங்காய் , பழங்கள் ,வெற்றிலை , பாக்கு , பூ ,இவற்றுடன் வைத்து , அர்ச்சனை வழிபாடு செய்தல் மரபு.

அழைப்பிதழ் கொடுப்பது, ம்ஞ்சள் முதலிய மங்கலப்பொருட்கள் வாங்குதல்:-

முதல் அழைப்பிதழ் கோவிலுக்கு சமர்ப்பித்தபின்பு அழைப்பிதழ்களை மற்றவர்களுக்கும் , உறவினர்களுக்கும் கொடுக்கலாம். வீட்டு மாப்பிள்ளைகளுக்கு ம்ஞ்சள் தடவிய தெங்காய் , பழங்கள் , வெற்றிலை , பாக்கு ,விரலி ம்ஞ்சள் ஆகியவற்றுடன் அழைப்புச் சுருள் கொடுப்பது வழக்கம் . பின் மற்றவர்களை ஆணும் பெண்ணும் சேர்ந்து சென்று திருமணத்திற்கு அழைப்பது வழக்கம் .
முகூர்தபட்டோலையில் குறிக்கப்பட்ட நாளில் நல்வேளையில் விரலி ம்ஞ்சள் ,குங்குமுகம்,சந்தனம்,வெற்றிலை,பாக்கு,பழம்,தேங்காய் ,மல்லிகைசரம்,கல்கண் டு ஆகியவைகளை முதலில் வாங்கிய பின் பிற பொருட்களை வாங்குவார்கள்.

Monday, March 21, 2011

திருமண சடங்குகள்

திருமணம் உறுதி செய்து தாம்பூலம் மாற்றிக் கொள்ளும் முறை : -
தாம்பூலம் மாற்றும் விசேடத்திற்கு அது நிகழும் இடத்தில் வ்ழிபாட்டுப் பொருட்களை கிழக்கு முகமாக வைத்து, விருந்தினர்கள் அமர விரிப்புகளும் விரித்து தயாராக இருக்கவேண்டும். இரு வீட்டாரின் தாம்பூல்த் தட்டுக்களையும் வ்ழிபடு தெய்வ உருவங்கள் முன் வைக்கவேண்டும்.

தாம்பூலம் மாற்றி கொள்வதற்கு வேண்டிய பொருட்கள் :-

வழிபாட்டிற்கு - சுவாமி படம், குத்து விளக்கு ( ஆரத்துடன் ),மஞ்சள் பிள்ளையார் , நிறை நாழி ,வாழை இலை ,உடைத்த தேங்காய்,பழம் - 4 அல்லது 6 ,தாம்பூலம் (வெற்றிலை பாக்கு ),ஊதுவத்தி,திரு நீறு,சாம்பிராணி,தீபக்கால், சூடன்,சூடன் தட்டு,சந்தனம்,குங்குமுகம்,உதிரி பூக்கள் (விடு பூக்கள் ),பன்னீர்,பன்னீர்செம்பு,சந்தனக்கும்பா

பெண்வீட்டார் , மாப்பிள்ளை வீட்டார் தாம்பூலம் மாற்றிக் கொள்ளத் தனித்தனி தாம்பாளத்தில் வைக்கவேண்டியவை : -

மஞ்சள் பூசிய தேங்காய் 3, பழம் சீப்பு 3 ,ஆரஞ்சு 3 ,ஆப்பிள் 3,மாம்ப்ழம் 3,திராட்சை1/2 கிலோ,சீனாக்கல்கண்டு,விரலிமஞ்சள் 100 கிராம்,வெற்றிலை கட்டு 1,பாக்கு 100 கிராம்,குங்குமச்செப்பு ( மரத்தினால் ஆனது) 1,சந்தனம்,பூமாலை 2,தலைக்கு பூத்துண்டு 1, தலைக்கு பூச்சரப் ப்ந்து.

முகூர்த்தபட்டோலை எழுதுவதற்கு வெள்ளைத்தாள் 2 , சிகப்பு மை பேனா
குறித்த நல்வேளையில் திருவிளக்கு ஏற்றி ஒரு சுமங்கலிப் பொண்ணைக் கொண்டு தெய்வங்களுக்லு தூப தீபம் காட்டச் செய்து வ்ழிபட்டு பின் சிகப்பு மையினால் முகூர்த்தபட்டோலை இரு படிவங்கள் எடுக்கச்செய்து அவற்றில் மஞ்சள் பூசி இரு தாம்பாளங்களிலும் வைக்கவேண்டும்

தாம்பூலம் கைமாறும் முன்பு , மணமகன் தந்தையாரும் , மணமகள் தந்தையாரும் உறுதி செய்யும் நாள் ஞாயிறு,திங்கள்,வெள்ளி கிழமைகள் எனில் தெற்கு வடக்காகவும், புதன் ,வியாழன் எனில் கிழக்கு மேற்காகவும் அமர்ந்து கொள்ளவேண்டும். அதன் பின் மணமகன் தந்தையாருக்கு மணமகள் தந்தையார் மாலை 2 அணிவித்து,பன்னிர் தெளித்து சந்தனம், குங்குமுகம் கொடுத்து தாம்பூலத்தட்டை எடுத்து கொடுக்கவேண்டும் . அவ்வாறே மணமகன் தந்தையார் மணமகள் தந்தையாருக்குச் சிறப்புச்செய்த் தாம்பூலத்தட்டை எடுத்து கொடுக்கவேண்டும் .பின்னர் முகூர்த்தபட்டோலையை சபை அறிய வாசிக்கவேண்டும்.
அடுத்து மணமகளை அழைத்து வந்து திருவிள்க்கிற்கு வடபுறம் கிழக்குமுகமாக உட்கார வைத்து மாலை அனிவித்து எல்லோரும் திரு நீறு பூசி ஆசீர்வாதம் செய்யவேண்டும் . பிறகு விருந்தினர்களுக்கு பன்னிர், சந்தனம் முதலியன்கொடுத்து சிறப்பு செய்து விருந்தோம்பல் செய்ய வேண்டும் .

முகூர்த்தபட்டோலை மாதிரி படிவம்

மாப்பிள்ளை பெயர் :
மாப்பிள்ளையின் தந்தை பெயர் :
மாப்பிள்ளையின் ஊர் :

பெண் பெயர் :
பெண்ணின் தந்தை பெயர் :
பெண்ணின் ஊர் :
இருபேர்களுக்கும் பொருந்திய முகூர்த்தபட்டோலை

எல்லாம் வல்ல இறைவனின் திருவருளை முன்னிட்டு நிகழும் மங்களகரமான----------ம்ளு-------வருடம்----மாதம்-----தேதி--------கிழமையும்---- நட்சத்திரமும் கூடிய சுபதினத்தில் அன்று மணி---க்கு மேல்-----க்குள்-----லக்னத்தில் திருமாங்கல்யதாரணம் செய்ய உத்தமம் .
சட்டரசம்

முகூர்த்தம் முடிந்ததும் ----மணிக்கு மேல்-----மணிக்குள் சட்டரசம் செய்ய உத்தமம்.
நிச்சய தம்பூலம்

----ம்ளு-----வருசம்------மாதம்----ம்தேதிக்கு (--------) கிழமை------ நட்சத்திரத்தில் ----மணிக்குமேல்----மணிக்குள் நிச்சயதாம்பூலம் செய்ய உத்தமம்.

நாள் கால் நடல் பொன் உருக்குதல்

----ம்ளு-------வருசம்----மாதம்----ம்தேதிக்கு கிழமை-------மணிக்குமேல்---மணிக்க்ள் திருமாங்கல்யதாரத்திற்கு பொன் உருக்கவும் ,கொட்டகை கால் நடவும் ,மணவறை , ஆக்குப் பிறை நாள் செய்யவும், ம்ஞ்சள் வாங்கவும் , கோவிலுக்கு பாக்கு வைக்கவும் மற்றும் சுபகாரியங்கள் செய்யவும் உத்தமம் .

மாப்பிள்ளை அழைப்பு அல்லது பெண் அழைப்பு

----ம்ளு-----வருசம்------மாதம்---ம்தேதிக்கு ( --------) கிழமை--------- நச்சத்திரத்தில்------மணிக்குமேல்-----மணிக்குள் அழைத்துவர உத்தமம் .

மறுவீடு

----ம்ளு-----வருசம்-------மாதம்---ம்தேதிக்கு (------- ) கிழமை------- நட்சத்திரத்தில் ----மணிக்குமேல்------மணிக்குள் அழைத்துவர உத்தமம் .

சாந்தி முகூர்த்தம்

------ம்ளு-------வருசம்------மாதம்----ம்தேதிக்கு (--------) கிழமை இரவு -----மணிக்குமேல் சாந்தி முகூர்த்தம் .

Sunday, March 20, 2011

ருது தின சடங்கு - பூப்புனித நீராட்டு விழா

பெண்குழந்தை பருவம் அடைந்த நேரத்தையும் , அன்றைய தின நட்சத்திரத்தையும் குறித்து வைக்கவும் . அன்றையதினமே நல்ல நேரம் பார்த்து உறவு முறையில் எல்லோருக்கும் சொல்லி , தகப்பனாரின் சகோதரி குழந்தைக்கு தலைக்கு தண்ணிர் ஊற்றவும். ( முடியும் என்றால் ஆண் குழந்தையை தலைமகனாகப்பெற்றவர்களை கொண்டு தண்ணிர் விடுவது சிறப்பு . தவறும் பட்சத்தில் 3 வது தின்ம் தலைக்கு தண்ணிர் விடவேண்டும் .அதன்பின் பெண்ணுக்கு புத்தாடை, கழுத்துக்கு பூமாலை, புதுபாவாடை , தாவணி உடுத்தவும். குழந்தைக்கு நல்லெண்ணெயும் கீரை விதையும் கொடுக்கவும்.
ஆரோக்கியத்தை கருதி , உளுத்தம் களி , உளுத்தம் பருப்பு சாதம் போன்றவை செய்து கொடுக்கவும். பருவம் அடைந்த பெண்ணை சடங்கு ( ருது மங்கள ஸ்நாணம் ) முடியும் வரை வெளியில் நடமாட விடுவதில்லை. பாதத்தில் ஒரு விரலில் இரும்பு மெட்டி அணிவது மரபு.
ருதுவான 16ம் நாள் பூப்புனித நீராட்டு செய்வது உத்தமம்.தவறும் பட்சத்தில் ருது மங்கள ஸ்நாணம் நடத்திட ஒரு சுபதினத்தை தேர்ந்தெடுத்து செய்யவேண்டும். அன்றைய தினம் ஒரு குருக்களைய்யாவை நியமித்து வீட்டில் கிரக சுத்தி செய்து கும்பம் வைத்து , ஹோமம் வளர்த்த்ய் பூஜைகள் செய்ய வேண்டும்.
சுபவேளையில் பெண்குழந்தைக்கு கும்ப நீரை அபிசேகம் செய்யவேண்டும். பின் தாய் மாமன் கொண்டுவந்த புத்தாடைகளை அணிவித்து , நல்ல பூமாலைகளை அணிவித்து , சீர்வரிசை பொருட்களுடன் விளக்கின் முன் இருத்தி பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெறவேண்டும் .அழைப்பிற்கு இணங்கி வருகை தந்திருக்கும் உறவினர்களையும் , விருந்தினர்களையும் உபசரித்து விருந்து நடத்திட வேண்டும்

வித்யாரம்பம் - ஏடு தொடங்குதல்

குழந்தைக்கு 3 வயதுக்குள் ஒரு நல்ல தினத்தில் ஒரு குருவை வைத்து ஏடு தொடங்கவேண்டும் .( எழுத படிக்க சொல்லிக் கொடுக்க வேண்டும் ). வழக்கமாக விஜயதசமி அன்று ஏடு தொடங்கவேண்டும். திருவிளக்கின் முன் ஒரு தாம்பாளத்தில் பச்சரிசியை பரப்பி , குழந்தையின் கையில் விரலி ம்ஞ்சளை கொடுத்து , குரு குழந்தையின் விரலை பிடித்து - வித்யா மந்திரத்தை 3 முறை எழுதி - எழுத்து ஆரம்பித்து வைக்கவேண்டும்,

Saturday, March 19, 2011

ஹோமத்திற்குறிய பொருட்கள்

விரலி மஞ்சள்,மஞ்சள் பொடி,திரவியம்,வாசனை சந்தனம்,குங்குமம்,ஜவ்வாது விபூதி,கட்டிசூடன்,சாம்பிராணி,அகர்பத்தி,புவனெஸ்வரி தசாங்கம்,பன்னீர், நெய், நல்லெண்ணை, தேன்,டைமன் கல்கண்டு,பேரீச்சம் பழம்,ஜவ்வாது,வெட்டிவேர்,விளாமிச்சைவேர்,பச்சை கற்பூரம்,ஏலாதி லவங்கம்,பஞ்சுதிரி,சிறிய கணபதி ஹோம திரவியம், நவதானியம், நவக்கிரஹ சமித்து, நீர் இல்லத தேங்காய்,வெற்றிலை,பாக்கு,அவல்,பொரி,கடலை, நெல்,பச்சரிசி,உமி,தெர்ப்பை முஸ்டி,சிசன் துண்டு,பூர்னாதி பட்டு 2 முழம் ( சிகப்பு, பச்சை ) ஒவ்வொன்றும், வெள்ளை பரிவட்டம்,கோஜலம் ( சாணம் ),கோமியம்,மணல்,செங்கல் 31 எண்ணம்,குத்து விளக்கு, நிறை நாழி,கிண்ணம் பெரியது,டம்ளர்,தாம்பாளம் 5 எண்,அரிவாள், ஆசனப்பலகை, சிறிய குத்து விளக்கு 2 எண்,பால்,தயிர்,வெண்ணெய்,தேங்காய் 7 எண்,வாழைப்பழம் 24எண்,வாழை இலை 15 எண்,எலுமிச்சை பழம் 5 எண்,ஆப்பிள் 3 எண்,ஆரஞ்சு 3 எண்,திராட்சை 1/4 கிலோ,சர்க்கரைப்பொங்கல் 1/4 படி,குடுமி தேங்காய் பெரியது 3 எண்,.
புஸ்பம் - விளக்கு ஆரம் 1 , சிறிய விளக்கு ஆரம் 2,கழுத்துக்கு மல்லி ஆரம் 2,கும்பத்திற்கு கட்டி ஆரம் 3, விடு ஆரம் 3,கதம்பச்சரம் 20 முழம்,அருகம்புல் மாலை 1, நிலை மாலை செட் , ஜான் துண்டு,மல்லி அல்லது பிச்சி பூ 1000 ,உதிரி பூ 2 கிலோ ( துளசி,கேந்தி பூ இல்லாமல் )

முதல் பிறந்த நாள்

குழந்தையின் முதல் வருட பிறந்த நாள் ஜென்ம நட்சத்திரத்தில் விழாவக கொண்டடுவது உண்டு.பிறந்த நாள் அன்று வீட்டில் கணபதி ஹோமம், ஆயுசு ஹோமம் செய்வித்தல் நல்லது.
பிறந்த நாள் அன்று கோவிலுக்கு அழைத்துச்சென்று குழந்தைக்கு புத்தாடை அணிவித்து நட்சததிரம், பெயர் சொல்லி அர்ச்சனை செய்வித்து வழிபாடு நடத்தவும்.
பிறந்த நாள் விழாவின் மறுதினம், குழந்தையை தாய்மாமன் மடியில் வைத்து குழந்தைக்கு முடி இறக்கி காது குத்த வேண்டும்( தேவைப்படும் பொருட்கள் தாயின் வீட்டிலிருந்து கொண்டு வருவார்கள்). இந்த சடங்கை ஏதாவது ஒரு கோவில் சன்னதியில் வைத்து செய்யவேண்டும்.ஏதாவது பிரார்த்தனை ( நேர்த்திக்கடன் ) செய்திருந்தால் அந்த ஆலயத்தில் வைத்து இந்த சடங்குகளை செய்திட வேண்டும்

Friday, March 18, 2011

பிறப்பு

குழந்தை பிறந்தஉடன் சரியான நேரத்தையும் ஆண்டு,மாதம்,தியதி, நட்சத்திரம், ஊர் போன்றவற்றை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். தமிழ்,ஆங்கில தேதி இரண்டையும் குறித்துக்கொள்ளுங்கள்.குழந்தை பிறந்து ஒரு வருடம் கழித்து ஜாதகம் கணீக்க வேண்டும் .
குழந்தை பிறந்ததினத்திலிருந்து , வீடு கூடுவதற்கு 16ம் நாளை தேர்ந்தெடுப்பது உத்தமம்.அல்லது அடுத்து வரும் நல்ல சுபதின்த்தில் குருக்களைய்யாவை அழைத்து கிரகசுத்தி சடங்கை செய்யவும். அன்றைய தின்மே சுபவேளையில் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்துவது நல்லது. அன்று முடியாவிட்டால் 3 மாதத்துக்குள் நடத்துவது நல்லது.
குழத்தைக்கு புது ஆடை அணிவித்து தாயாரின் மடியில் இருக்கும் குழந்தையை,
தாயும்,தந்தையும் 3 முறை மாற்றிக்கொண்டபின் தகப்பனார் மடியில் வைத்துக்கொண்டு,ஒரு தாம்பாளத்தில் புழுங்கலரிசியை நிரப்பி,அரிசியில் முனை பழுதுபடாத விரலி ம்ஞ்சள் கொண்டு, குழந்தைக்கு சூட்டப்பட உள்ள பெயரை தகப்பனார் 3 முறை எழுதவேண்டும். பின் குழந்தையின் வலது காதில் தகப்பனார் மெல்லிய குரலில் 3 முறை உச்சரிக்கவேண்டும். பின் சபை அறிய 3 முறை உரத்த குரலில் சொல்லவேண்டும். குழந்தையின் அத்தை ( குழந்தையின் தகப்பனாரின் சகோதரி ) குழந்தைக்கு (காப்பிடுவது ) வளையல் அணிவிப்பது, தண்டை அணிவிப்பதும்ரபு.குழந்தையின் தாயின் வ்ழியிலிருந்து அரைக்கு சலங்கையும், தந்தைவழியில் கழுத்துக்கு சங்கிலியும் அணிவிப்பதும்ரபு.அதன்பின் ம்ற்றோர் குழந்தையை ஆசீர்வதிப்பது வழக்கம். வந்திருப்பவர்களுக்கு பூந்தி,காப்பரிசி கொடுக்கவெண்டும்.
காப்பரிசி - களைந்து அரித்த பச்சரிசியுடன் வ்றுத்த சிறுபருப்பும், எள்ளும் சேர்த்து தேவைக்கு ஏற்ப சர்க்கரைப்பாகில் கலந்து கொடுப்பது.
குழந்தை பிறந்த 6 வது மாதத்தில் ஒரு சுபதினத்தில் முதல்முறையாக சர்க்கரை பாயாசம் ஊட்ட வேண்டும்.குழந்தைக்கு திருவமுது ஊட்டும் இந்த சடங்கினை ஆலயங்களில் வைத்தும் செய்வதும் உண்டு. அதன்பிறகு குழந்தைக்கு எல்லவித உணவுகளும் கொடுக்கலாம். குழந்தைக்கு திருவமுது ஊட்டுவதற்குரிய பொருட்கள் தாய் வீட்டிலிருந்து கொண்டுவருவார்கள்