Friday, July 29, 2011

திருமண சடங்குகளும் - விளக்கமும்

1 ) நாட்கால் நடல் : - கொட்டைகைகாலில் உபயோகிக்கும் மாவிலை , நவதானியம் , பருத்திக்கொட்டை , வெள்ளி நாணயம் , பூ , சிவப்புத்துணி , தீய சக்திகளை உள்வாங்கிக் கொள்ளும் . பிரபஞ்சத்தில் உள்ள பஞ்சபூதங்களுக்கும் அறிவிக்கை செய்து ஆசி பெறுதல் .

2 ) பொண்ணுருக்கி விடுதல் : - திருமாங்கல்யம் சுமங்கலியின் சின்னம் . போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவைகளில் ஒன்று . எனவே நல்ல நாளில் தீர்க்க சுமங்கலியாக வாழ்வதற்கு மாப்பிள்ளை வீட்டில் வைத்து உரிய நபரிடம் ( பொற்கொல்லர் ) புதிய பொன் கொடுத்து திருமாங்கல்யம் செய்யும் பணியைத் துவக்குதல் .

3 ) கலப்பரப்பு : - மாப்பிள்ளை வீட்டார் கொடுக்கும் சேலையை களத்தில் பரப்பி ( தரையில் விரித்து ) மணப்பெண் அமர்ந்து மங்களப் பொருட்களை இரு வீட்டாருக்கும் வழங்குதன் மூலம் இருவீட்டாரும் கலந்து ஒன்றாகிவிட்டதற்கான அடையாள நிகழ்ச்சி ( கலம் என்பது பாத்திரம் ) பாத்திரத்தில் மங்கலப்பொருட்களை ( மஞ்சள் கலவை, வெற்றிலை , பாக்கு , தெங்காய் , பழக்கள் பூச்சரம் , ) நிரப்புதல் கலப்பரப்பு ஆகும் .

4 ) காப்புக் கட்டுதல் : - கப்பு என்பது அரண் போன்றது . மங்களகரமான சக்தி வாய்ந்த மங்கள் உரு வாய்ந்த மஞ்சள் கயிற்றை காப்பாக கட்டுவது . திருஸ்டி . மற்றும் அசுர சக்திகளால் இடையூறுகள் வராமல் தடுப்பதற்கு . காப்புக்கட்டுவதில் இருந்து மறு நாள் காப்பு அவிழ்க்கும் வரை திருமணம் சம்பந்தமாஅனைத்து நிகழ்ச்சிகளையும் தடையின்றி செய்வேன் என்பதை உறுதி செய்யும் சடங்காகும் . அனைத்து நிகழ்ச்சிகளும் தடையின்றி நடைபெறும் வண்ணம் இடையூறு வராமல் காக்குமாறு தெய்வத்தை வேண்டிக் கட்டப்படுவது.

5 ) முளைப்பாலிகை : - நவதானியத்தின் மூலம் நவக்கிரகங்களை சாந்தி செய்வது . முளைப்பாலிகையில் இடப்படும் நவதானியங்கள் வளர்வது போல் குடும்பமும் செழித்து வளரட்டும் என்பதற்கான அடையாளச்சடங்கு . கள்ளங்கபடமற்ற குழந்தைகளின் உள்ளம் தெய்வீக பண்பின் உறைவிடம் . என்வே சிறுமியர் மூலம் இச்சடங்கு நடத்தப்படுகின்றது .

6 ) தாரை வார்த்தல் : - தாரை என்றால் நீர் என பொருள் . நீருக்குத் தீட்டில்லை . நீர் மந்திர நாத ஒலியின் அதிர்வை ஏற்கக்கூடியது . இப்படி தெய்வத்தன்மை வாய்ந்த நீரை இதற்கு பயன்படுத்துகின்றனர் . திருமணச் சடங்குகளில் மிகமுக்கியமானது தாரை வார்த்தல் . தாரை வார்த்தபின்பு தான் மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டும் உரிமையை அடைகின்றான் .
" என் மகளை தெய்வங்களின் சாட்சியாக உனக்கு மனைவியாக கொடுக்கின்றேன் “ என மணமகளின் பெற்றோர் , தாரை வார்த்து கொடுக்க மணமகனின் பெற்றோர் உங்கள் மகளை இனி எங்களது மறு - மகள் ( மருமகள் ) ஆக ஏற்றுக் கொள்கின்றோம் என்பதற்கான உறுதிமொழி . எனவே தான் மாப்பிள்ளையின் தாயார் கை ஏற்றுக்கொள்ளும் விதமாக அடியில் இருக்க , அதற்கு மேல் மணமகனின் தந்தையின் கை , மணமகனின் கை , மணப்பெண்ணின் கை , மணப்பெண்ணின் தந்தையின் கை , எல்லாவற்றிற்கும் மேலாக மணப்பெண்ணின் தாயாரின் கை . இந்தவெரிசையில் கைகளை வத்து இச்சடங்கு நடைபெறும் . உரிமையை விட்டுக்கொடுப்பதற்கு அடையாளமாக செஉயப்படும் சாஸ்திரப்பூர்வமான சடங்கு தாரை வார்த்தல் என்ப்படும் .

7 ) மூன்று முடிச்சு : - இறைவன் , தேவர்கள் மற்றும் விண்ணவர்களின் சாட்சியாக போடப்படுவது முதல் முடிச்சு . முன்னோர்களின் சாட்சியாக இரண்டாவது முடிச்சு .பெற்றோர்கள் , திருமணத்திற்கு வருகை தந்தவர்களின் சாட்சியாக கட்டப்படுவது மூன்றாம் முடிச்சு . அறம் , பொருள் , இன்பம் படி வாழ்க்கை நடத்துவோம் என்பதைக் குறிப்பதற்கு மூன்று முடிச்சு .பிரம்மா , விஸ்ணு , சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் பெயரால் உறவை உறுதிப்படுத்துவது . கணவன் , மூத்தோன் , இறைவன் ஆகிய மூவரின் சொற்படி நடக்க மூன்று முடிச்சு . நாம் எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதி உறுதியாக இருக்கிறோம் என்பதைக் கட்ட மூன்று முடிச்சு .

8 ) ஹோமம் வளர்த்தல் : - வேதங்களில் சொல்லப்பட்டப்படி அக்னிசாட்சியாக திருமணம் நடைபெற வேண்டும் . ஹோமத்தின் மூலம் நவக்கிரகங்களைத் திருப்தி படுத்த வேண்டும் . ஹோமத்தில் இடப்படும் பொருட்கள் சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்துகிறது . ஹோமப்புகை உடலுக்கும் , மனதுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கும் . எந்த ஒரு நிகழ்வும் அக்னி சாட்சியாக நடந்தால் தான் சாஸ்திரப்படி சரியாகும் .

9 ) கும்பம் வைத்தல் : - கும்பம் இறைவனது திரு உடம்பின் அடையாளம் . இறைவனின் வித்யா தேகமாகத் திகழ்வது கும்பம் . இறைவனது திருமேனி , கும்பத்தில் பாவிக்கப்படும் .

கும்பவஸ்திரம் ------------------- உடம்பின் தோல்
நூல்-------------------------------- நாட நரம்புகள்
குடம் ------------------------------ தசை
தண்ணீர் -------------------------- இரத்தம்
நவரத்தனங்கள் ------------------ எலும்பு
தேங்காய் ------------------------- தலை
மாவிலை ------------------------ தலைமயிர்
தருப்பை ------------------------- குடுமி
மந்திரம் -------------------------- உயிர்
ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது .

10 ) அம்மி மிதித்தல் : - கற்பிக்கப்படுவது கற்பு . கல்லானது எவ்வளவு பாரத்தையும் தாங்கும் . சக்திக்கு மீறினால் பிளந்து போகுமே தவிர வளையாது . வாழ்வில் எவ்வளவு சோதனை வந்தாலும் உறுதியுடன் இருக்க வேண்டும் என்பதர்கான நிகழ்ச்சி .

11 ) அருந்ததி பார்த்தல் : - வ்சிஸ்டரின் மனைவியாகிய அருந்ததி கற்பின் திறத்தல் , ஒர் நட்சத்திரத்திற்கு அதி தெய்வமாகி , அந்த நட்சத்திரம் அருந்ததி நட்சத்திரம் என்று சிறப்புப் பெற்றது . கற்பு நெறியில் சிறிது வழுவிய அகலிகை கல்லாகக் கிடக்குமாறு சாபம் பெற்றார் . இந்த உண்மையை உணர்த்துவதற்காக் அம்மி மிதித்து , அருந்ததி பார்க்கும் சடங்கு வைக்கப்பட்டுள்ளது .சைவ மரபில் கற்ப்புக்கு எடுத்துக்காட்டாக அருந்ததியை குறிப்பிடுகிறார்கள் .

12 ) ஏற்றி இறக்குதல் : - மணமக்களை பாதுகக்க இரு சுமங்கலிகள் மங்கலப் பொருட்களை ( திருவிளக்கு , நிறை நாழி , சந்தனக்கும்பா, பன்னீர்ச்செம்பு , தேங்காய் , பழம் , குங்குமச்சிமிழ் , மஞ்சள் பிள்ளையார் போன்றவை ) தொட்டுச் செய்யும் சடங்கு . மேலும் அருவ நிலையிலிருந்து மணமக்களை ஆசிர்வதிக்கும் தெய்வங்களுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் , முன்னோர்களுக்கும் காட்டும் மரியாதையான பாவனை, திருஸ்டி கழிப்பதற்காக செய்யப்படுவதும் உண்டு .

13 ) அடை பொரி : - பச்சரிசி மாவினால் செய்யப்படும் அடையும் .பல உருவத்தைக் கட்டும் வகையில் பொரிக்கப்படும் நெல் பொரியும் , திருமண நகழ்வுகளால் ஏற்ப்டும் பல்வேறு திருஸ்டி தோஸங்களை நீக்க வல்லது . இது அட்டத் திக்கு பாலகர்களுக்கு கொடுக்கப்படும் அவிர் பாகம் .

14 ) நிறை நாழி : - நித்தமும் திருவிளக்கருகே வைத்து வழிபட்டால் நற்பேறுகள் பெருகும் என்பது அய்தீகம் .

15 ) ஒலுசை : - மணமகள் அனைத்து வகைச் செல்வங்களுடன் கணவன் வீட்டிற்கு வருகிறாள் என்பதை அறிவிக்கும் நிகழ்ச்சி . சிறப்பான இல்லறவாழ்விற்கு அத்தியாவசியமான பொருட்களை பொறுப்புணர்ச்சியுடன் பெண்வீட்டார் கொடுப்பது . ஒலுசைப் பொருட்களைப் பட்டியலிட்டு சபையில் கொடுப்பது தற்சமயம் குறைந்து வருகிறது . இது வரவேற்கத்தற்கது .

16 ) மணமகள் பொங்கலிடுதல் : - முதல் நாள் திருமண நிகழ்ச்சிகள் அனைத்தையும் சிறப்பாக நடத்திக் கொடுத்த இறைவனுக்கும் , முன்னோர்களுக்கும் சூரியன் முதலான் தேவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நகழ்ச்சி . மணமகள் வீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள் என்பதைக் வெளிப்படுத்துவது . புதுப்பெண்ணின் சமையல் நளினம் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள உதவுவது . இதுதான் மணப்பெண்ணின் முதல் சமையல் . இன்று போல் என்றும் வாழ்க்கை பால்போல் பொங்கவேண்டும் என்பதற்கான அறிகுறி .

17 ) பிள்ளை மாற்றுவது : - எதிர்வரும் நிகழ்வுகளுக்கு அச்சாரம் . இனியும் நீங்கள் பச்சைக்குழந்தைகள் அல்ல என்பதை மணமக்களுக்கு உணர்த்தும் செயல்வடிவ உபதேசம் . பிறக்கப்போகும் குழ்ந்தைகள் நல்ல முறையில் சிறப்பாக இருக்க அனைவரும் ஒரு சேர வாழ்த்துவது . திருமணத்தின் பயனே நன்மக்கட்பேறு ” மங்கலமென்ப மனைமாட்சி ம்ற்று அத்ன் நஙலம் நன்மக்கட்பேறு “ - திருவள்ளுவர் . நன்மக்கட்பேறு பெறுவதற்காக செய்யப்படும் ஒரு சடங்கு .

18 ) மறுவீடு : - மணமகளின் பெற்றோரும் - உறவினரும் மாப்பிள்ளை வீட்டிற்கு முதன்முறையாக மணமகளுடன் சென்று - விருந்துண்ட் மகிழ்ந்து - உறவை வலுப்படுத்துவது . ஒரு பெண்ணிற்கு பிறந்தவீடு வாழ்க்கையும் , புகுந்த வீடு வாழ்க்கையும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்றது . மகளை வாழ்க்கையின் மறுபக்கத்தை காணச்செய்வதே - ம்றுவீடு .

19 ) கோவிலுக்கு அழைத்துச்செல்லல் : - நல்ல திருமண வாழ்க்கை வேண்டும் என்பது மணமக்களின் பிரார்த்தனைகளில் ஒன்றாக அமைந்திருக்கும் . வேண்டுதலை நிறைவேற்றிய இறைவனுக்கு நன்றி செலுத்துவதுடன் , இல்லற வாழ்க்கை வளம் பெற தெய்வங்களின் ஆசி பெறுவதற்கு தம்பதிகளைக் கோவிலுக்கு அழைதுதுச் செல்ல வேண்டும் .