7 ) மணமகன் மணவறையில் தந்தையுடன் அமர்ந்து வழிபாடு : -
மணமகனுக்கும் ,பெற்றோர் ஒவ்வொருவருக்கும் இரண்டு மாலைகள் அணிவித்து ,புனித நீர் , பால் , திருநீறு
அளித்தல் . மணமகனின் தாய்க்கு பூ கொடுக்கவேண்டும் .
அ ) குரு வழிபாடு : - ( உள்ளத்துள் குருவை நினைத்து )
தெளிவு குருவின் திருமேனி
காண்டல்
தெளிவு குருவின் திரு
நாமம் செப்பல்
தெளிவு குருவின்
திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரு
சிந்தித்தல் தானே . ( திருமந்திரம் )
ஆ ) மணமகனுக்கு ஜந்தெழுத்தோதுதல் : -
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம் அரனஞ்சாடுதல்
கோவினுக் கருங்கலம் கோட்டமில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சிவாயவே . ( அப்பர் )
இ ) பிள்ளையார்
ஜந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேன் . ( திருமூலர் )
ஈ ) திருவிளக்கு
சோதியே சுடரே சூள்ஒளி விளக்கே
சுரிகுழல் பனைமுலை மடந்தை
பாதியே பரனே பால்கொள் வெண்ணீற்றாய்
பங்கயத்து அயனும் மால் அறியா
நீதியே ! செல்வத் திருப்பெருந்திறையில்
நிறைமலர்க் குருந்தம் மேவியசீர்
ஆதியே அடியேன் ஆதரித்தழைத்தால்
அதெந்துவே என்றருளாயே . ( வாதவூரர் )
உ ) தான்ய லட்சுமி - நிறை
நாழி : -
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்குமாறு கண்டு இன்புற
இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே . ( அப்பர் )
ஊ ) அம்மையப்பர் வழிபாடு
: -
நன்றுடையானைத் தீயதி லானை நரை வெள்ளேறு
ஒன்றூடையானை உமையொருபாகம் உடையானைச்
சென்று அடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்று உடையானைக் கூற என்னுள்ளம் குளிரும்மே . ( சம்பந்தர் )
சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி
பொங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி
அங்கமலத் தயனோடு மாலும் காணா
அனலுருவா நின்பாதம் போற்றி போற்றி
செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி
திருமூலட்டானே போற்றி போற்றி . ( அப்பர் )
பொங்குருவச் செல்வம் கல்வி பொருவில்லா வாய்மை தூய்மை
இங்கெமக்கு அருளவல்ல இணையில்லா எம்பிராட்டி
பங்கயத்தஞ்சூழ் கூடற்பவளமால் வரையை நீங்கா
அங்கயற்கண்ணி மங்கை அடிக்கமலங்கள் போற்றி .
அரசாணிக்கால் நாட்டல் : - கன்னி மூலையில் -
யோகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையவன் கோவண ஆடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே ! ( சம்பந்தர் )
தாய்மாமனுடன் சடங்கு : -
அ . அம்மையப்பர் வழிபாடு : -
முன்னியா நின்ற முதல்வா போற்றி
மூவாத மேனியுடையாய் போற்றி
என்னியாய் எந்தை பிரானே போற்றி
ஏழின் இசையே உகப்பாய் போற்றி
மன்னிய மங்கை மணாளா போற்றி
மந்திரமும் தந்திரமும் ஆனாய் போற்றி
கன்னியர் கங்கைத் தலைவா போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி . ( அப்பர் )
வேத நாயகன் வேதியர் நாயகன்
மாதின் நாயகன் மாதவர் நாயகன்
ஆதி நாயகன் ஆதிரை நாயகன்
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே . ( அப்பர் )
காப்பணிதல் : - ( வலக்கையில் ) தாய்மாமன் மணமகனின் வலது கையில்
காப்பு கட்டவேண்டும் . மஞ்சள் நூலில் விரலி மஞ்சள் ,வெற்றிலை வைத்து கட்டியுள்ளதே காப்பு ஆகும் .
மாறிலா நிறை வளந்தரு புகலியின் மணமீக்
கூறுநாளின் முன்னாளினில் வேதியர் குழாமும்
நீறு சேர் திருத் தொண்டரும் நிகரிலாதவருக்கு
ஆறு சூடினார் அருட் திருக்காப்பு நாண் அணிவார் . ( சேக்கிழார் )
முளைப்பாலிகை தெளித்தல் : -
பின்பு ஒரு சிறிய குழந்தையின் கையில் ஊற வைத்த நவதானியங்களை கொடுத்து , தாய்மாமன் கையில் கொடுத்து , மணமகன் கையில் கொடுத்து முளைப்பாலிகையில் வைக்கச் சொல்லுவார்கள் .இதே முறையில் அங்கு உள்ள 7 அல்லது 9 முளைப்பாலிகைகளில் ஊறவைத்த நவதானியம் நிரப்ப வேண்டும் .
பாரவன்காண் பாரதனிற் பயிரானவன்காண்
பயிர் விளைக்கும் துளியவன்காண் துளியில் நின்ற
நீரவன்காண் நீர் சடைமேல் நிகழ்வித்தான் காண்
நிலவேந்தர் பரிசாக நினைவுற்று ஓங்கும்
பேரவன்காண் பிறையெ யிற்று வெள்ளைப் பன்றி
பிரியாது பலநாளும் வழிபட்டு ஏத்தும்
சீரவன்காண் சீருடைத் தேவர்க்கெல்லாம்
சிவனவன் காண் சிவபுரத்தெம் செல்வன் தானே . ( அப்பர் )
முளைப்பாலிகை தெளித்தவுடன் மணமகனுக்கு புத்தாடைகள் வழங்க வேண்டும் . அப்புதிய ஆடைகளை அணிந்தே மணமகன் திருமாங்கல்ய தாரணத்திற்கு வரவேண்டும் .
ஈ ) புத்தாடையளித்தல் : -
பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப்
போகமும் திருவும் புணர்ப்பானைப்
பின்னையென் பிழையைப் பொறுப்பானைப்
பிழையெலாந் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையன் என்றறியொண்ணா
எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயற்பழனத்து அணி
ஆருரானை மறக்கலுமாமே . ( சுந்தரர் )
மணமகள் மேடைக்கு வருகை : -
பெற்றோர் வழிபாடு : - மணமகன் போன்று மணமகளும் அவரது தாய் தந்தையருக்கு பாதபூசை செய்யவேண்டும் .
திருமகட்குச் செந்தாமரையாம் அடி
சிறந்தவர்க்குத் தேனாய் விளைக்கும் அடி
பொருளவர்க்குப் பொன்னுரையாய் நின்ற அடி
புகழ்வார் புகழ்ந்தகைய வல்ல அடி
உருவிரண்டும் ஒன்றோடு ஒன்று ஒவ்வா அடி
உருவென்று உணரப் படாத அடி
திருவதிகைத் தென்கெடிலநாடன் அடி
திருவீரட்டானத்தெம் செல்வன் அடி . ( அப்பர் )