தெய்வத் தமிழித் திருமுறைத் திருமண நூல் - தொடர்ச்சி
ஆ.
பெண் வலமாக வந்து மணமகனுக்கு மாலையணிவித்தலும் , மோதிரம் மாற்றிக் கொள்ளுதலும் : -
பூந்தார்
நறுங்கொன்றை மாலை சடைக்கணிந்து
கூர்ந்தார்
விடையினை ஏறிப்பல் பூதப்படை நடுவே
போந்தார்
புற இசைபாடவும் ஆடவும் கேட்டருளிச்
சேர்ந்தார்
உமையவளோடு நெயந்தானத் திருந்தவனே .
14
) தாரை வார்த்தல் : -மணமகள் ஊஞ்சல் பாட்டு முடிந்த்தும் மணமேடை சுற்றி மணமகன்
அருகில் வந்து , மணமகனுக்கு மாலை அணிவித்து , மோதிரம் அணிவிக வேண்டும் . இந்த
இட்த்தில் மணமகன் மணமகளுக்கு மாலை அணிவிக்க கூடாது .மணமகன் மணமகளுக்கு மோதிரம்
அணிவிக்கவேண்டும் . இருவரும் மணமேடைக்கு வந்து அமரவேண்டும் .மாப்பிள்ளையின்
பெற்றோர் மாப்பிள்ளையின் பக்கமும் , பெண்ணின் பெற்றோர் பெண்ணின் பக்கமும் நிற்க
வேண்டும் .மாப்பிள்ளையின் பெற்றோர் கையின் மேல் மாப்பிள்லையின் கையைவைத்து , அதன்
மேல் மணமகளின் கையை வைத்து , அதில் தேங்காய் , பழம் , வெற்றிலை பாக்கு வைத்து ,
மணமகளின் தந்தையும் , தாயாரும் சேர்ந்து தேங்காயின் மேல் பால் ஊற்றிக்
கன்னிகாதானம் செய்ய வேண்டும் .
பெருகொளி
ஞானமுண்ட பிள்ளையார் மலர்க்கதைதன்னில்
மருவு
மங்கலநீர் வாசக்கரக முன்னேந்தி வார்ப்பார்
தருமுறைக்
கோத்திரத்தின் தங்குலம் செப்பி என்றன்
அருநிதிப்
பாவையாரைப் பிள்ளையார்க் களித்தேன் . (
சேக்கிழார் )
15 ) திருமங்கல நாண் அணிவித்தல் : - கன்னிகாதானம்
செய்தபின் , அனைவரும் சிவன் நாமாவளி கூறவேண்டும் , கேட்டி மேளம் ஒலிக்க வேண்டும்
.பின் திருமுறை
வாழ்த்து
ஒதவேண்டும் .
மண்ணில்
நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில்
நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணிய
நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில்
நல்லாளொடும் பெருந்தகை யிருந்ததே . (
திருஞானசம்பந்தர் )
மணமகன்
மணமகளுக்கு மங்கலநாண் அணிவித்தபின் , 3 முறை மாலை மாற்றி , பாலும் பழமும் கொடுத்து , இருவரும் இடம் மாறி ,
மணப்பெண் மாப்பிள்ளையின் இடப்பாகம் அமரவேண்டும் .
திருமுறை
: -
மாதினுக்கு
உடம்பு இடம் கொடுத்தானை
மணியினைப்
பணிவார் வினை கெடுக்கும்
வேதனை
வேத வேள்வியர் வணங்கும்
விமலனை
அடியேற்கு எளிவந்த
தூதனைத்
தன்னைத் தோழமையருளித்
தொண்டனேன்
செய்த துரிசுகள் பொறுக்கும்
நாதனை நள்ளாறனை அமுதை நாயினேன்
மறந்து
என் நினைக்கேனே .
ஆ
) ஏற்றி இறக்கி கண்ணேறு கழித்துப் பொரியிடல் : -
மாப்பிள்ளையின்
சகோதரி மணமக்களுக்கு ஏற்றி இறக்கி கண்ணேறு கழிப்பதற்காக
அடைபொரியினை
கையில் எடுத்து மணமக்களை சுற்றி நான்கு திசைகளிலும்
போடவேண்டும்
. அதன்வகைக்கு பாடவேண்டிய பாடல்
1 ) பொள்ளலாக்கை அகத்திலைம் பூதங்கள்
கள்ளமாக்கிக்
கலக்கிய காரிருள்
விள்ளலாக்கி
விசயமங்கைப் பிரான்
உள்ளம்
நோக்கி என்னுள்ளுள் உறையுமே . ( அப்பர் )
2 ) விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கின்
முன்னே வேதனை மாறும்
விளக்கை
விளங்கும் விளக்குடையார்கள்
விளக்கில்
விளங்கும் விளக்கவர் தாமே .
3
) வேட்டவியுண்ணும் விரிசடை ந்ந்திக்குக்
காட்டவும்
நாமிலங் காலையும் மாலையும்
ஊட்ட
வியாவன உள்ளம் குளிர்விக்கும்
பாட்டவி
காட்டுதும் பாலவியாமே . (
திருமூலர் )
மணமக்கள்
உறுதி மொழி எடுக்க வேண்டும் .
மணமகன்
எடுக்க வேண்டிய உறுதி மொழி : -
சிவத்திரு
-----------( மாப்பிள்ளையின் தந்தை பெயர் )
சிவத்திரு
-----------( மாப்பிள்ளையின் தாயார் பெயர் )
ஆகியோரின்
மகனான ----------( மணமகன் பெயர் )
ஆகிய
நான் , ஆதியும் அந்தமும் இல்லாஎம் மிறை சிவபெருமான் திருவருளால்
இன்று
------தேதி--------கிழமை சிவத்திரு
---------( மணமகள் தந்தை பெயர் )
சிவத்திரு
--------( மணமகள் தாயார் பெயர் ) ஆகியோரின்
மகளான செல்வி --------( மணமகள் பெயர் ) யை என் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக்
கொண்டுள்ளேன் எனவும் , தெய்வப்பலவர் திருக்குறள் நெறி நின்று இருவரும் இணைந்து
இல்லறம் ஆகிய நல்லறத்தை இனிது நடத்துவோம் என்று உறுதி கூறுகிறேன் .
மணமகள்
எடுக்க்க வேண்டிய உறுதிமொழி : -
எம்மிறை சிவபெருமான் திருவருளுடன் இன்று
என்னைத் தமது இல்லத் துணைவியாக ஏற்றுக் கொண்டுள்ள திருமிகு ------( மணமகன் பெயர் )
ஆகிய என் கணவருடன் திருக்குறள் நெறியில் இனிய இல்லறம் நட்த்திட இவருடன் என்றும்
துணையாயிருப்பேன் என்று உறுதி கூறுகிறேன் .
மணமக்கள்
உறுதி மொழி எடுத்தபின் , அவர்களுக்கு திருமணத்திற்கு வந்து உள்ள பெரியவர்கள்
திருநீறு பூசி ஆசிர்வதிக்க வேண்டும் .
ஆசிர்வதிக்கும்போது
பாடவேண்டிய பாடல்கள் : -
1
) ஆறுலவு செய்ய சடை அய்யர் அருளாலே
பேறுலகினுக்கு எனவரும் பெரியவர்க்கு
வேறு பல காப்பு மிகை என்றவை விரும்பார்
திருநீறு நெற்றியில் நிறுத்தி நிறைத்தார் .
2
) ஞானம் காட்டுவர் நன்னெறி காட்டுவர்
தானங் காட்டுவர் த்ம்மடைந்தார்க் கெல்லாம்
தானங் காட்டித்தன் தாளடைந்தார்க்கட்கு
வானம் காட்டுவர் போல் வன்னியூரறே . ( அப்பர் )
3
) ஆனந்தவெள்ளத் தழுந்தும் ஒர் ஆருயிர் ஈருருக்கொண்டு
ஆனந்த வெள்ளத்திடைத் திளைத்தால் ஒக்கும்
அம்பலஞ்சேர்
ஆனந்த வெள்ளத்தறை கழலோன் அருள் பெற்றவரின்
ஆனந்த வெள்ளம் வற்றாது முற்றாது இவ்வணி நலமே
. ( திருக்கோவையார் )
4
) துதி வாணிவீரம் விசயம் சந்தானம் துணிவு தனம்
அதி தானியம் செளபாக்யம் போகம் அறிவு அழகு
புதிதாம் பெருமை அறம் குலம் நோயின்மை
பூண்வயது
பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே .
மணமக்களை
பெரியவர்கள் ஆசிர்வதித்தபின் மணமக்களின் வலக்கைச் சுண்டு விரல்களை இணைத்து ,
பட்டுத் துணி கொண்டு கட்டவேண்டும் .மணமக்கள் மணமேடையை 3 முறை சுற்றி வரவேண்டும் .
அம்மி மிதித்து அருந்ததி நட்சத்திரத்தை பார்க்கவேண்டும் . சுண்டு விரல் இணைக்கும்
பொழுது பாட வேண்டிய பாடல் : -
சாற்றும் நான்மறைகள் ஆர்ப்பத்தூரியம் சங்கம்
ஓங்கக்
கற்ற நான்முகத்தோன் வேள்விச் சடங்குநூல் கரைந்த
ஆற்றால்
முற்ற மங்கல நாண்சாத்தி முழுதுலகீன்றாள் செங்கை
பற்றின்ன் பற்றிலார்க்கே வீடருள் பரமயோகி . ( பரஞ்சோதி முனிவர் )
மணமக்கள்
மணவறையை வலம் வரும்பொழுது பாட வேண்டிய பாடல் : -
மாதர்பிறைக்
கண்ணியனை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு
நீர் சுமந்தேத்திப் புகுவார் அவர்பின் புகுவேன்
யாதுஞ்சுவடு
படாமல் அய்யாறடை கின்றபோது
காதன்
மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்
கண்டேனவர்
திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் .
மணமக்கள்
அம்மி மிதித்து அருந்த்தி நட்சத்திரம் பார்க்கும் போது பாடும் பாடல் : -
மங்கலம்
மிகுந்த செம்பொன் அம்மிமேல் மணாட்டிபாத
பங்கய
மலரைக் கையால் பரிபுரம் சிலம்பப் பற்றிப்
புங்கவன்
மனுவால் ஏற்றிப் புண்ணிய வசிட்டன்தேவி
எங்கெனச்
செங்கை கூப்பி எதிவர அருட்கண் சாத்தி .
வாழ்த்துப்பாடல்
: -
1
) வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே .
2
) வையம் நீடுக மாமழை மன்னுக
மெய் விரும்பிய அன்பர் விளங்குக
சைவ நன்னெறிதான் தழைத்தோங்குக
தெய்வ வெண்ணீறு சிறக்கவே .
3
) ஆறிரு தடந்தோள் வாழ்க ! அறுமுகம் வாழ்க ! வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க ! குக்கடம் வாழ்க !
செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க ! யானைதன் அணங்கு வாழ்க !
மாறிலா வள்ளி வாழ்க ! வாழ்க சீர்
அடியாரெல்லாம் !
பின்னர்
மணமகனின் அறைக்கு இருவரும் அழைத்து வரப்பெற்று கைக்கட்டவிழ்த்து,
பால்
, பழம் மணமக்களுக்கு கொடுக்க வேண்டும் .