Thursday, August 11, 2011

சீமந்தம் - 5 ம் மாதம் சடங்கு

5 ம் மாதம் சடங்கு : - பெண் கருவுற்று 5 மாதங்கள் நிறைந்த பின்பு பெண்ணின் பெற்றோர் , பெண்ணிற்கு 5 வகை பழங்களும் ( திராட்சை , கொய்யா , பேரீட்சை , வாழைப்பழம் , ஆரஞ்சு ) கருப்பு சேலை , ரவிக்கையும் , கருப்பு வளையல்களும் கொண்டு சென்று பெண்ணை பார்த்து வருவது மரபு .

சீமந்தம் ( வளைகாப்பு )

கருவுற்ற பெண்ணை ஏழாவது மாதத்தில் பிரசவத்திற்கு தாய்வீட்டிற்கு அழைத்து செல்வதற்கு முன் செய்ய வேண்டிய வைபவம் . ஒரு சுபதினத்தை தேர்ந்தெடுத்து ( ஒரு கன்னிப் பெண்ணிற்கு வளையல் , வஸ்தரம் ,தானம் கொடுப்பது மரபு ) பூஜை செய்து பின்பு பெண்ணை அந்த சுபவேளையில் விளக்கு பக்கத்தில் மாப்பிள்ளையுடன் இருத்தி தாய் வீட்டிலிருந்து கொண்டு வந்த புத்தாடைகளை அணிவித்து , பின்னர் ஊரில் உள்ள கோவில் அம்பாளுக்கு அணிவிப்பதற்கு கருப்பு வளையல்கள் எடுத்து வைத்து விட்டு பிறகு ஒரு சிறுமியை முன் இருத்தி அவளுக்கு வளையல்கள் அணிவித்து சிறப்புச் செய்துவிட்டு அதன் பின் பெண்ணுக்கு தாய் , தகப்பனார் அய்ம்பொன் சூல் வளையல்களையும் , மெழுகு வைத்த தங்கம் , வெள்ளி செய்த வளையல்களையும் அணிவித்து பி மாப்பிள்ளை வீட்டார் உறவினர்கள் போன்றவர்கள் பெண்ணிற்கு கண்ணாடி வளையல்கள் அணிவித்து பெரியவர்கள் ஆசிர்வதிக்கவேண்டும் . இந்த வைபவத்திற்கு வருகை தந்தவர்களுக்கும் உறவினர்களுக்கும் பெண்வீட்டிலிருந்து கொண்டு வந்த சீமந்த பலகாரங்கள் விநியோகிக்கப்படவேண்டும் . பெண் குழந்தைகளுக்கும் , பெண்களுக்கும் கண்ணாடி வளையல்கள்அணிய கொடுககவேண்டும் . பிறகு நல்ல நேரம் பார்த்து பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள் . அப்படி பெண் போகும் பொழுது , பெண்ணை கணவன் பார்ப்பது கிடையாது .

No comments:

Post a Comment