Saturday, November 24, 2012

தெய்வத் தமிழ்த் திருமுறைத் திருமண நூல்

மணமக்கள் தம் தம் அறைக்குச் சென்று புத்தாடையுடுத்தி மணமகள் கலபரப்புச் செய்து மீண்டும் மணவறைக்குத் திரும்பும் முன்னர் குருக்கள் செய்து முடிக்கும் சடங்குகள் :

             திருமங்கல நாணை , பால் , புனித நீர் , சந்தனம் முதலான கொண்டு திருமுழுக்காட்டி , கற்பூர ஒளி காண்பித்து ஒரு தாம்பாளத்தில் தேங்காய் , வெற்றிலை , பழங்கள் , பாக்கு , பூமாலையுடன் வைத்து  , மண்டபத்தில் பெரியோர்களின் வாழ்த்துப் பெற்று வருமாறு அனுப்பிவைப்பார்கள்

அழல் ஓம்பல் ( ஹோமம் வளர்த்தல் ) : -

          அழற்குண்டத்தில் முறைப்படி அழல் உருவாக்குதல் : - குண்டத்தின் எட்டுப் பக்கங்களிலும் திக்குப் பாலகர் எழுந்தருளியிருப்பதாகப் பாவித்து அங்கேயெல்லாம் வெற்றிலையில் மலர் வைத்து வழிபாடு செய்ய வேண்டும் .

ஒத வேண்டிய திருமுறைப்பாடல்கள் : -

அ ) வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிக நல்ல வீணை தடவி
        மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
        ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனி பாம்பிரண்டு      
                                                                                                                             முடனே  
         ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே .

ஆ ) நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே
        ஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே அரன் நாமம்
        கேளாய் நம்கிளை கிளைக்கும் கேடுபடாத்திற மருளிக்
        கோளாய் நீக்கும் அவன் கோளிலி எம்பெருமானே .      -  சம்பந்தர்
இ ) இருநிலனாய்த் தீயாகி நீருமாகி இயமானனாய் எறியும் காற்றுமாகி
       அருநிலைய திங்களாய் ஞாயிறாகி ஆகாசமாய் அட்ட மூர்த்தியாகி
       பெருநலமும் சுற்றமும் பெண்ணும் ஆணும் பிற உருவும் தம்முருவும்   
                                                                                                                  தாமேயாகி
      நெருநலையாய் இன்றாகி நாளையாகி நிமிர்புன் சடையடிகள்    
                                                                    நின்றவாறே  .          அப்பர்
                                                                                                                   
ஈ ) எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி
       எரிசுடராய் நின்ற இறைவா போற்றி
       கொல்லார் மழுவாட் படையாய் போற்றி
       கொல்லும் கூற்றொன்றை யுதைத்தாய் போற்றி      
       கல்லாதார் காட்சிக்கு அரியாய் போற்றி
       கற்றார் இடும்பை களைவாய் போற்றி
       வில்லால் வியன் அரணம் எய்தாய் போற்றி
       வீரட்டங்காதல் விமலா போற்றி  .                          - அப்பர்

உ ) வணங்கத் தலைவைத்து வார்கழல் வாய் வாழ்த்த வைத்து
       இணங்கத் தன்சீரடியார் கூட்டமும் வைத்து , எம்பெருமான்
       அணங்கொடு அணிதில்லை அம்பலத்தே ஆடுகின்ற
       குணங்கூரப் பாடி , நாம் பூவல்லி கொய்யாமோ .  -   வதவூரர் .

 ஊ ) ஒளிவளர் விள்க்கே உலப்பிலா ஒன்றே உணர்வுசூழ் கடந்தோர்                                                                                           
                                                                                                       உணர்வே
          தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே சித்தத்துள் தித்திக்கும்  
                                                                                                                  தேனே
         அளிவளர் உள்ளத்து ஆனந்தக்கனியே அம்பலம் ஆடரங்காக
         வெளிவளர் தெய்வக் கூத்துகந்தாயைத் தொண்டனேன் விளம்புமா 
                                                                                              விளம்பே .   - திருவிசைப்பா 

எ ) குழலொலி , யாழொலி ,கூத்தொலி , ஏத்தொலி , எங்கும் குழாம் பெருகி
      விழவொலி விண்ணளவும் சென்று விம்மிமிகு திருவாரூரில்
      மழவிடையார்க்கு வழிவழியாளாய் மணம் செய்குடிப் பிறந்த 
      பழ அடியாரொடும் கூடி எம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே . 
                                                                                                திருபல்லாண்டு .

ஏ ) என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் 
       ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
       மன்றுளார் அடியாரவர் வான்புகழ்
       நின்றதெங்கும் நிலவி உலகெலாம் .               - சேக்கிழார்

                          மணமகன் புத்தாடையணிந்து அழைத்து வரப்பெற்று மேடையின் எதிர்புறம் மேற்கு நோக்கி நாற்காலியில் அமரவைக்க வேண்டும் .
                        மணப்பெண் புத்தாடையணிந்து அழைத்து வரப்பெற்று மேடையின் பின்புறம் கிழக்கு நோக்கி நாற்காலியில் அமரவைக்க வேண்டும் .
                      மேளம் வாசிப்பவருக்கு தேங்காய் , பழம் , வெற்றிலை , பாக்கு இவைகளுடன் சன்மானம் வைத்து ஊஞ்சல் பாட்டு வாசிக்கச் சொல்லவேண்டும் .

அ ) ஊஞ்சல் பாட்டு : -

      சீரார் பவளங்கால் , முந்தங் காயிறாக
      ஏராரும் பொற்பலகை ஏறி இனிது அமர்ந்து
      நாராயணன் அறியா நாண் மலர்த்தாள் நாயடியேற்கு
      ஊராகத் தந்தருளும் உத்தரகோசமங்கை
     ஆராவமுதின் அருட்தாள் இணைபாடி
     போரார் வேற்கண் மடவீர் பொன்னூசல் ஆடாமோ !        - வாதவூரர்

தெய்வத் தமிழ்த் திருமறைத் திருமண நூல்

தாய்மாமனுடன்  சடங்கு  : -

அ . அம்மையப்பர் : 

விண்ணாளும் தேவர்க்கும் மேலான வேதியனை
மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்
தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டானைப்
பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற்
கண்ணார்கழல் காட்டி நாயேனையாட் கொண்ட 
அண்ணாமலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்  - மணிவாசகர்

ஆ . காப்பணிதல் :

ஆர்வம் மிக்கெழும் அன்பினால் மலரயன் அனைய
சீர்மறைத் தொழிற் சடங்குசெய் திருந்துநூல் முனிவர்
பார்வழிபட்ட வரும் இரு வினைகளின் பந்தச்
சார் பொழிப்பவர் திருக்கையில் காப்பு நாண்  சாத்த .    - சேக்கிழார்

இ . முளைபாலிகை தெளித்தல் :

வித்தாம் முளையாகும் வேரேதானாம் வேண்டும் உருவமாம் விரும்பிநின்ற
பத்தாம் அடியார்க்கோர் பாங்கனு மாம் பால்நிறமுமாம் பரஞ்சோதி தானாம்
தொத்தாம் அமரர் கணஞ்சூழ்ந்து போற்றத் தோன்றாது என் உள்ளத்தின் உள்ளெநின்ற
கத்தாம் அடியேற்குக் காணா காட்டும் கண்ணாம் கருகாவூர் எந்தை தானே .    -  அப்பர் 

புத்தாடையளித்தல் : 

வேண்டத் தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற்கு அரியோய் நீ
வேண்டியென்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயாது அருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டினல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே .                     -    வாதவூரர்

மணமகனுக்கு செய்தது போல் மணமகளுக்கும் காப்பு கட்டுதல் , முளைபாலிகை தெளித்தல் ஆகியவை முடிந்தபின் மணமகளுக்கு புத்தாடைகள் வழங்குவார்கள் .

Tuesday, October 23, 2012

தெய்வத்திருமுறைத் திருமண நூல் தொடர்ச்சி


               தெய்வத் திருமுறைத் திருமண நூல்
மணமகள் மணவறையில் தந்தையுடன் அமர்ந்து வழிபாடு : -
அ ) ஐந்தெழுத்து ஓதுவித்தல் : -
இருந்து சொல்லுவன் கேண்மிஙள் ஏழைகாள்
அருந்தவம்தரும் அஞ்செழுத்து ஓதினால்
பொருந்து நோய்பிணி போகத் துரப்பதோர்
மருந்தும் ஆகுவர் மன்னுமாற் பேறரே !    ( அப்பர் )
ஆ ) பிள்ளையார் வழிபாடு : -
மண்ணுல கத்தினில் பிறவி மாசற
எண்ணிய பொருளெல்லாம் எளிதின் முற்றுற
கண்ணுத நுடையதோர் களிற்று மாமுகப்
பண்ணவ்ன் மலரடி பணிந்து போற்றுவோம் ..
இ ) திருவிளக்கு வழிபாடு : -
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
 நல்லக விளக்கது நமச்சிவாயவே .    ( அப்பர் )
ஈ ) அம்மையப்பர் வழிபாடு : -
மனத்துள் மாயனை மாசறு சோதியைப்
புனிற்றுப் பிள்ளை வெள்ளைமதி சூடியை
எனக்குத் தாயை எம்மான் இடைமருதனை
 நினைந்திட்டு ஊறி நிறைந்தது என்னுள்ளமே . ( அப்பர் )
மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமாதேவி பணிசெய்து நாள் தொறும் பரவ
பொங்கு அழல் உருவன் பூத நாயகன் நால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணிதன்னோடும் அமர்ந்த ஆலவாயாவதும் இதுவே .(சம்பந்தர் )
மலையான் மடந்தை மணாளா போற்றி
மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி
நிலையாக என் நெஞ்சில் நின்றாய் போற்றி
நெற்றிமேல் ஒற்றைக் கண்ணுடையாய் போற்றி
இலையார்ந்த மூவிலைமேல் ஏந்தீ போற்றி
ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனாய் போற்றி
சிலையால் அன்று எயில் எரித்த சிவனே போற்றி
திருமூலட்டான்னே போற்றி போற்றி .    ( அப்பர் )

Tuesday, August 21, 2012

தெய்வத் தமிழ்த் திருமுறைத் திருமண நூல்- தொடர்ச்சி


7 ) மணமகன் மணவறையில் தந்தையுடன் அமர்ந்து வழிபாடு : - 
                           மணமகனுக்கும் ,பெற்றோர் ஒவ்வொருவருக்கும் இரண்டு மாலைகள் அணிவித்து ,புனித நீர் , பால் , திருநீறு அளித்தல் . மணமகனின் தாய்க்கு பூ கொடுக்கவேண்டும் .  
  அ ) குரு வழிபாடு : - ( உள்ளத்துள் குருவை நினைத்து ) 
          தெளிவு குருவின் திருமேனி காண்டல்
          தெளிவு குருவின் திரு நாமம் செப்பல்
          தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
          தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே .                 ( திருமந்திரம் ) 
 ஆ ) மணமகனுக்கு ஜந்தெழுத்தோதுதல் : - 
       பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
      ஆவினுக் கருங்கலம் அரனஞ்சாடுதல்
      கோவினுக் கருங்கலம் கோட்டமில்லது
      நாவினுக் கருங்கலம் நமச்சிவாயவே .              ( அப்பர் ) 
இ ) பிள்ளையார் 
     ஜந்து கரத்தனை ஆனை முகத்தனை
     இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
     நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
     புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேன் .        ( திருமூலர் ) 
 ஈ ) திருவிளக்கு  
      சோதியே சுடரே சூள்ஒளி விளக்கே
      சுரிகுழல் பனைமுலை மடந்தை
      பாதியே பரனே பால்கொள் வெண்ணீற்றாய்
     பங்கயத்து அயனும் மால் அறியா
     நீதியே ! செல்வத் திருப்பெருந்திறையில்
     நிறைமலர்க் குருந்தம் மேவியசீர்
     ஆதியே அடியேன் ஆதரித்தழைத்தால்
     அதெந்துவே என்றருளாயே .                          ( வாதவூரர் ) 
உ )  தான்ய லட்சுமி - நிறை நாழி : - 
     அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
     பொன்னம் பாலிக்கும் மேலுமிப் பூமிசை
     என்னம் பாலிக்குமாறு கண்டு இன்புற
     இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே  .             ( அப்பர் ) 
ஊ ) அம்மையப்பர் வழிபாடு : -      
     நன்றுடையானைத் தீயதி லானை நரை வெள்ளேறு
     ஒன்றூடையானை உமையொருபாகம் உடையானைச்
     சென்று அடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
     குன்று உடையானைக் கூற என்னுள்ளம் குளிரும்மே .   ( சம்பந்தர் )

     சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
     சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி
    பொங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
    புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி
    அங்கமலத் தயனோடு மாலும் காணா
    அனலுருவா நின்பாதம் போற்றி போற்றி
    செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி
    திருமூலட்டானே போற்றி போற்றி  .                ( அப்பர் )

  பொங்குருவச் செல்வம் கல்வி பொருவில்லா வாய்மை தூய்மை
  இங்கெமக்கு அருளவல்ல இணையில்லா எம்பிராட்டி
  பங்கயத்தஞ்சூழ் கூடற்பவளமால் வரையை நீங்கா
  அங்கயற்கண்ணி மங்கை அடிக்கமலங்கள் போற்றி .

அரசாணிக்கால் நாட்டல் : - கன்னி மூலையில் - 

 யோகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
 பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
 ஆகமார்த்த தோலுடையவன் கோவண ஆடையின்மேல்
 நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே !                    ( சம்பந்தர் )

தாய்மாமனுடன் சடங்கு : -

அ . அம்மையப்பர் வழிபாடு : -

முன்னியா நின்ற முதல்வா போற்றி
            மூவாத மேனியுடையாய் போற்றி
என்னியாய் எந்தை பிரானே போற்றி
           ஏழின் இசையே உகப்பாய் போற்றி
மன்னிய மங்கை மணாளா போற்றி
          மந்திரமும் தந்திரமும் ஆனாய் போற்றி
கன்னியர் கங்கைத் தலைவா போற்றி
         கயிலை மலையானே போற்றி போற்றி .     ( அப்பர் )

வேத நாயகன் வேதியர் நாயகன்
மாதின்  நாயகன் மாதவர் நாயகன்
ஆதி நாயகன் ஆதிரை நாயகன்
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே .                 ( அப்பர் )

காப்பணிதல் : - ( வலக்கையில் ) தாய்மாமன் மணமகனின் வலது கையில்
காப்பு கட்டவேண்டும் . மஞ்சள் நூலில் விரலி மஞ்சள் ,வெற்றிலை வைத்து கட்டியுள்ளதே காப்பு ஆகும் .

மாறிலா நிறை வளந்தரு புகலியின் மணமீக்
கூறுநாளின் முன்னாளினில் வேதியர் குழாமும்
நீறு சேர் திருத் தொண்டரும் நிகரிலாதவருக்கு
ஆறு சூடினார் அருட் திருக்காப்பு நாண் அணிவார் .     ( சேக்கிழார் )

முளைப்பாலிகை தெளித்தல் : - 
                        பின்பு ஒரு சிறிய குழந்தையின் கையில் ஊற வைத்த நவதானியங்களை கொடுத்து , தாய்மாமன் கையில் கொடுத்து , மணமகன் கையில் கொடுத்து முளைப்பாலிகையில் வைக்கச் சொல்லுவார்கள் .இதே முறையில் அங்கு உள்ள 7 அல்லது 9 முளைப்பாலிகைகளில் ஊறவைத்த நவதானியம் நிரப்ப வேண்டும் .

பாரவன்காண் பாரதனிற் பயிரானவன்காண்
பயிர் விளைக்கும் துளியவன்காண் துளியில் நின்ற
நீரவன்காண் நீர் சடைமேல் நிகழ்வித்தான் காண்
நிலவேந்தர் பரிசாக நினைவுற்று ஓங்கும்
பேரவன்காண் பிறையெ யிற்று வெள்ளைப் பன்றி
பிரியாது பலநாளும் வழிபட்டு ஏத்தும்
சீரவன்காண் சீருடைத் தேவர்க்கெல்லாம்
சிவனவன் காண் சிவபுரத்தெம் செல்வன் தானே .     ( அப்பர் )

முளைப்பாலிகை தெளித்தவுடன் மணமகனுக்கு புத்தாடைகள் வழங்க வேண்டும் . அப்புதிய ஆடைகளை அணிந்தே மணமகன் திருமாங்கல்ய தாரணத்திற்கு வரவேண்டும் .

ஈ ) புத்தாடையளித்தல் : - 

பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப்
     போகமும் திருவும் புணர்ப்பானைப்
பின்னையென் பிழையைப் பொறுப்பானைப்
    பிழையெலாந் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையன் என்றறியொண்ணா
    எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயற்பழனத்து அணி
    ஆருரானை மறக்கலுமாமே .                           ( சுந்தரர் )

மணமகள் மேடைக்கு வருகை : -

பெற்றோர் வழிபாடு : - மணமகன் போன்று மணமகளும் அவரது தாய் தந்தையருக்கு பாதபூசை செய்யவேண்டும் .

திருமகட்குச் செந்தாமரையாம் அடி
சிறந்தவர்க்குத் தேனாய் விளைக்கும் அடி
பொருளவர்க்குப் பொன்னுரையாய் நின்ற அடி
புகழ்வார் புகழ்ந்தகைய வல்ல அடி
உருவிரண்டும் ஒன்றோடு ஒன்று ஒவ்வா அடி
உருவென்று உணரப் படாத அடி
திருவதிகைத் தென்கெடிலநாடன் அடி
திருவீரட்டானத்தெம் செல்வன் அடி .                         ( அப்பர் )



















  

தெய்வத் தமிழ்த் திருமுறைத் திருமணச் சடங்கு நூல்

                   நமது இல்லங்களில் நடைபெறும் திருமணங்களில் மந்திரங்கள் சொல்லப்படுகின்றன , ஆனால் அந்த மந்திரங்களின் பொருள் நமக்கு தெரிவதில்லை .காரணம் அந்த மந்திரங்கள் வடமொழியில் இருப்பதால் . திருமணச் சடங்குகளில் சொல்லப்படும் மந்திரங்களுக்கு இணையான பொருள் உள்ள தமிழ் பாடல்கள் நமது பன்னிரு திருமுறைகளில் உள்ளன .
          திருமணச் சடங்குகளில் அதற்குப் பொருத்தமான பாடல்களைச் சொல்லி நடத்துவது பொருத்தமாக இருக்கும் என்ற கருத்து உணர்ந்து பரவியதால் இப்பொழுது திருமணங்களில் இந்த முறை செயல்பட ஆரம்பித்து உள்ளது . இந்த நடைமுறையை சைவ அன்பர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் வடமொழி தெரியாதவர்களும் நடைமுறைப்படுத்தினால் , அனைவருக்கும் பாடல்களைச் செவிமடுத்து அதன் பொருள் உணர்ந்து கொள்வதற்கு வசதியாக இந்த தெய்வத் தமிழ்த் திருமுறைத் திருமண  நூல் வெளியிடப்படுகின்றது .

திருமணச் சடங்கு வரிசை முறையும் , அந்தந்தச் சடங்குகளின் ஓதும் திருமுறைப் பாடல்களும்  : -

             மண விழாவிற்குக் குறித்த நேரத்திற்கு ஒரு மணி முன்னதாகவே குருக்கள் மேடையில் வேண்டியவற்றை முறைப்படுத்தி வைக்க வேண்டும் .

1} மஞ்சள் பிள்ளையார்
2} நிறை நாழி
3}திருவிளக்கு
4} கலசகும்பங்கள்
அமைத்து அழல் ஓம்பத் தேவையான , அழல் குண்டமும் அமைத்து ஆயத்தமாகவேண்டும் .

1 } திருவிளக்கு ஏற்றுதல் : -

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே .           ( அப்பர் )

2} விநாயகர் துதி : -

பிடியதன் உருஉமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுரை இறையே .     ( சம்பந்தர் )

3}  நால்வர் துதி : - 

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
வாழிதிரு நாவலூர் வந்தொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி .


4} புனித நீர் வழிபாடு : -

களித்துக் கலந்ததோர் காதற்கசிவோடு காவிரிவாய்க்
குளித்துக் தொழுது முன் நின்ற இப்பத்தரை கோதில் செந்தேன்
தெளித்துச் சுவையமுது ஊட்டி அவர்கள் சூழிருப்ப
அளித்துப் பெருஞ்செல்வமாக்கும் ஜயாறன் அடித்தலமே .

கடல்களின் அரசே வருணா போற்றி
நன்னீர்ப் பெருங்கடல் பொன்னே போற்றி
நீருக்கதிபதி நிறைவே போற்றி
மகரவாகனம் மகிழ்ந்தாய் போற்றி
புனிதன் சடைஅமர் வனிதை போற்றி
கங்கையென்னும் மங்கை போற்றி
யமுனை நதியெனும் நல்லாய் போற்றி
நருமதை நதியாம் நல்லருள் போற்றி
சிந்து நதியின் சிறப்பே போற்றி
காவிரி நதியாய்க் காப்பாய் போற்றி
துங்கா நதி நங்கா போற்றி
ஆன் பொருனை அரசி போற்றி
தண் பொருனைத் தாயேபோற்றி .

5 } திருக்குட ( கலசம் ) வழிபாடு : -

                          திருக்குடங்களில் சிவனையும் உமையம்மையையும் எழுந்தருளச் செய்தல் ( ஆவாகனம் ) .மணவிழா நடத்தும் குருக்கள் தம்மிரு கைகள் நிறைய மலர் எடுத்துத் தலைக்குமேல் கைகுவித்து , இறைவனையும் ,
இறைவியையும் திருக்குடங்களில் எழுந்தருளுமாறு வேண்டிக் கைகளை தம் மார்புக்கு நேராகக் கொண்டு வந்து , கீழ்வரும் பாடல் பாடியவுடன்
   
        இடம் கொண்டருள்க இறைவா போற்றி
        வடிவத்துறை வள்ளலே போற்றி
        அருள் ஒளி தருக அம்மையே போற்றி

திருக்குடங்களின் மேல் தன்கையில் உள்ள மலரைத் தூவ வேண்டும் .


6 ) மணமகன் மேடைக்கு வருகை : -

                                தெய்வ வழிபாடு : ( மாதா , பிதா , குரு , தெய்வம் )

பெற்றோர் வழிபாடு : -

                                மேடைக்கு அருகில் வடபுறம் , இரு நாற்காலிகளில் தாயையும்  தந்தையையும் அமரச்செய்து , ஒரு தாம்பாளத்தில் தந்தையின் வலப்பாதமும்  
தாயின் இடப்பாதமும் வைத்து மணமகன் , அவர்களின் பாதங்களில் நீர் ஊற்றி நன்கு கழுவி , பால் ஊற்றி , மலர்தூவி , கற்பூர ஒளி காட்டவும் .

பாடல் :-

அரவனையான் சிந்தித்து அரற்றும் அடி
அருமறையான் சென்னிக்கு அணியாம் அடி
சரவணத்தான் கைதொழுது சாரும் அடி
சார்ந்தார்கட்கெல்லாம் சரணாம் அடி
பரவுவார் பாவம் பறைக்கும் அடி
பதினெண் கணங்களும் பாடும் அடி
திரைவிரவு தென்கெடில் நாடன் அடி
திரு வீரட்டானத்து எம்செல்வன் அடி .               ( அப்பர் )





Thursday, January 19, 2012