Tuesday, October 15, 2019

                                       சஷ்டியப்த பூர்த்தி  /  மணிவிழா

          ஒருவருக்கு 60 வயது முடிந்து 61 வது வயது ஆரம்பம் ஆகும் பொழுது அவர் பிறந்த நட்சத்திரதன்று மணிவிழா கொண்டாடுவது வழக்கம் .தஞ்சாவூர் பக்கம் திருக்கடையூர் சிவன் கோவிலில் வைத்து மணிவிழா கொண்டாடுவது  மிகவும் சிறப்பு . திருக்கடையூர் கோவில் விலாசம்
                              
                           அருள்மிகு அமிர்த கடைஸ்வரர் திருக்கோவில் ,
                            திருக்கடையூர் , நாகை மாவட்டம் ,
                           போன் நம்பர்  : - 04364 - 287429
சிறந்த குருக்களைய்யாவை நியமித்து இல்லத்தில் வைத்து அவரின் ஆலோசனைப்படி விமரிசையாக  நடத்திடலாம்  மிகவும் எளிமையாக அருகில் உள்ள சிவன் கோவிலிலும் வைத்து செய்யலாம். ஒரு மனிதரின் பிறந்த தினத்தன்று ஜாதகத்தில் கிரக அமைப்புகள் எப்படி இருந்ததோ அறுபது வருடம் கழிந்த பின்பும் மீண்டும் அதே கிரக நிலை 61 வது வருடம் அமைகின்றது . சஷ்டியப்த பூர்த்தி விழாவில் சிவலிங்கம் வடிவம் கொண்ட தாலியை திருமாங்கல்ய தாரனையாக செய்ய வேண்டும் மணிவிழா காணும் தம்பதியர் தங்களை விட வயது கூடியவர்களிடம்  ஆசிவாதம் பெறவேண்டும். அவர்கள் வயது குறைந்தவர்களுக்கு  ஆசி வழங்க வேண்டும்  ஆயுஸ்ஹோமம் செய்வது  சிறப்பு  ஹோமம் நடத்தி குடங்களில் புனித நீர் நிறைத்து மந்திரங்கள் சொல்லி முடிவில் அந்த குடங்களில் உள்ள நீரால் சஷ்டியப்த பூர்த்தி தம்பதியரை  அமரச் செய்து  அபிஷேகம் செய்வார்கள்  அபிஷேகம் முடிந்தபின் புத்தாடை அணிந்து  சிவலிங்க வடிவம் கொண்ட தாலியை திருமாங்கல்யமாக அணிவர் .. சஷ்டியப்த பூர்த்தி கண்ட தம்பதியருக்கு வீட்டு மாப்பிள்ளை பெளத்திர முடிச்சு மோதிரம் அணிவிப்பது வழக்கம் .. வயதில் சிறியவர்கள் ஆசீர்வாதம் வாங்கும் பொழுது  வெள்ளி / தங்கம் ஆகிய வற்றுள் பூக்கள் செய்து  தம்பதியரின் பாதத்தில் இட் டு வணக்குவர். சஷ்டியப்த பூர்த்தி விழாவை தம்பதியரின் மகன்கள் , மகள்கள் சேர்ந்து செய்வது வழக்கம் .

                                               சதாபிஷேக விழா

           ஒருவர் எண்பது  வயது நிறைந்து 81 வது வயது துவங்கும் பொழுது , ( 1001
பிறைகளை கண்டவர் ) நடத்தும் விழாவிற்கு சதாபிஷேக விழா என்று பெயர்.
சதாபிஷேக விழாவை சிறந்த குருக்களைய்யாவை கொண்டு செய்யலாம் .சிலர் அருகில் உள்ள ஆலயத்தில் வைத்தோ அல்லது திருக்கடையூர் கோவிலில் வைத்தோ நடந்தலாம் . ஆயுஸ்ஹோமம் நடத்தி , ஸ்ரீருத்ரஜபம்  செய்து தம்பதியருகு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் . சிவவடிவம் / குண்டுமனி கொண்ட தாலியை செய்து திருமாங்கல்ய தாரணை செய்ய வேண்டும் . சதாபிஷேகம் கண்ட தம்பதியரிடம் ஆசீர்வாதம் வாங்குவது மிகவும் சிறப்பு .ஆசீர்வாதம் வாங்கும் நபர்கள் வெள்ளி / தங்கம் ஆகியவற்றால்
செய்த பூக்களை தம்பதியரின் பாதத்தில் இடுவர் . மலர்களை தம்பதியரின் பாதத்தில் இட்டும் ஆசீர்வாதம் வாங்குவர் . சதாபிஷேகவிழாவை தம்பதியரின் மகன்கள் , மகள்கள் சேர்ந்து செய்வர்

Wednesday, May 22, 2013

குறுந் தகவல்கள்

பரிட்சை முடிவைப்பார்த்து அப்பா மகனிடம் : -என்னடா மார்க் குறைய வாங்கியிருக்கிறாய் ?
மகன் அப்பாவிடம் : -விற்கிற விலைவாசியில் எதுவுமே அதிகமாக வாங்கமுடியவில்லை அப்பா !

நீ கேட்கின்ற விசயங்களில் பாதியை நம்பினால் நீ புத்திசாலி !
அனால் கேட்கின்ற விசயங்களில் எதை நம்புவது என் தீர்மானித்தால் நீ அதி புத்திசாலி !

மரனமென்பது மண்ணில் வாழும் மனிதர்களுக்கு மட்டும் தான்
மனதில் வாழும் என்னிடம் உள்ள உன் நினைவுகளுக்கு இல்லை !

புனிதமான இதயம் என்பது உலகத்தில் உள்ள பெரிய கோவில் !
முகத்தில் மட்டும் அன்புகாட்டுபவரை நம்பாதே !
ஆனால் இதயத்தில் அன்பு காட்டுபவரை நம்பு !
ஏனென்றால் அவர்கள் உலகத்தில் குறைவு !

எந்த நாட்களையும் குறை சொல்லாதே !
நல்ல நாட்கள் உனக்கு மகிழ்ச்சியை தரும் !
சில நாட்கள் உனக்கு துன்பத்தை தந்தாலும் ,உனக்குஎக்ஸ்பிரியன்சை தரும் !
எனவே இரு வகை நாட்களும் வாழ்க்கைக்குத் தேவை !


தெய்வத் தமிழ்த் திருமுறைத் திருமண நூல் - தொடர்ச்சி


          தெய்வத் தமிழித் திருமுறைத் திருமண நூல் - தொடர்ச்சி
ஆ. பெண் வலமாக வந்து மணமகனுக்கு மாலையணிவித்தலும் , மோதிரம் மாற்றிக் கொள்ளுதலும் : -
பூந்தார் நறுங்கொன்றை மாலை சடைக்கணிந்து
கூர்ந்தார் விடையினை ஏறிப்பல் பூதப்படை நடுவே
போந்தார் புற இசைபாடவும் ஆடவும் கேட்டருளிச்
சேர்ந்தார் உமையவளோடு நெயந்தானத் திருந்தவனே .
14 ) தாரை வார்த்தல் : -மணமகள் ஊஞ்சல் பாட்டு முடிந்த்தும் மணமேடை சுற்றி மணமகன் அருகில் வந்து , மணமகனுக்கு மாலை அணிவித்து , மோதிரம் அணிவிக வேண்டும் . இந்த இட்த்தில் மணமகன் மணமகளுக்கு மாலை அணிவிக்க கூடாது .மணமகன் மணமகளுக்கு மோதிரம் அணிவிக்கவேண்டும் . இருவரும் மணமேடைக்கு வந்து அமரவேண்டும் .மாப்பிள்ளையின் பெற்றோர் மாப்பிள்ளையின் பக்கமும் , பெண்ணின் பெற்றோர் பெண்ணின் பக்கமும் நிற்க வேண்டும் .மாப்பிள்ளையின் பெற்றோர் கையின் மேல் மாப்பிள்லையின் கையைவைத்து , அதன் மேல் மணமகளின் கையை வைத்து , அதில் தேங்காய் , பழம் , வெற்றிலை பாக்கு வைத்து , மணமகளின் தந்தையும் , தாயாரும் சேர்ந்து தேங்காயின் மேல் பால் ஊற்றிக் கன்னிகாதானம் செய்ய வேண்டும் .
பெருகொளி ஞானமுண்ட பிள்ளையார் மலர்க்கதைதன்னில்
மருவு மங்கலநீர் வாசக்கரக முன்னேந்தி வார்ப்பார்
தருமுறைக் கோத்திரத்தின் தங்குலம் செப்பி என்றன்
அருநிதிப் பாவையாரைப் பிள்ளையார்க் களித்தேன் .     ( சேக்கிழார் )
15  ) திருமங்கல நாண் அணிவித்தல் : - கன்னிகாதானம் செய்தபின் , அனைவரும் சிவன் நாமாவளி கூறவேண்டும் , கேட்டி மேளம் ஒலிக்க வேண்டும் .பின் திருமுறை
வாழ்த்து ஒதவேண்டும் .
மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணிய நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை யிருந்ததே .     ( திருஞானசம்பந்தர் )
மணமகன் மணமகளுக்கு மங்கலநாண் அணிவித்தபின் , 3 முறை மாலை மாற்றி ,  பாலும் பழமும் கொடுத்து , இருவரும் இடம் மாறி , மணப்பெண் மாப்பிள்ளையின் இடப்பாகம் அமரவேண்டும் .
திருமுறை : -
மாதினுக்கு உடம்பு இடம் கொடுத்தானை
மணியினைப் பணிவார் வினை கெடுக்கும்
வேதனை வேத வேள்வியர் வணங்கும்
விமலனை அடியேற்கு எளிவந்த
தூதனைத் தன்னைத் தோழமையருளித்
தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும்
நாதனை  நள்ளாறனை அமுதை நாயினேன்
மறந்து என் நினைக்கேனே .
ஆ ) ஏற்றி இறக்கி கண்ணேறு கழித்துப் பொரியிடல் : -
மாப்பிள்ளையின் சகோதரி மணமக்களுக்கு ஏற்றி இறக்கி கண்ணேறு கழிப்பதற்காக
அடைபொரியினை கையில் எடுத்து மணமக்களை சுற்றி நான்கு திசைகளிலும்
போடவேண்டும் . அதன்வகைக்கு பாடவேண்டிய பாடல்
 1 ) பொள்ளலாக்கை அகத்திலைம் பூதங்கள்
கள்ளமாக்கிக் கலக்கிய காரிருள்
விள்ளலாக்கி விசயமங்கைப் பிரான்
உள்ளம் நோக்கி என்னுள்ளுள் உறையுமே . ( அப்பர் )
 2 ) விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளங்கும் விளக்குடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே .
3 ) வேட்டவியுண்ணும் விரிசடை ந்ந்திக்குக்
காட்டவும் நாமிலங் காலையும் மாலையும்
ஊட்ட வியாவன உள்ளம் குளிர்விக்கும்
பாட்டவி காட்டுதும் பாலவியாமே .         ( திருமூலர் )
மணமக்கள் உறுதி மொழி எடுக்க வேண்டும் .
மணமகன் எடுக்க வேண்டிய உறுதி மொழி : -
சிவத்திரு -----------( மாப்பிள்ளையின் தந்தை பெயர் )
சிவத்திரு -----------( மாப்பிள்ளையின் தாயார் பெயர் )
ஆகியோரின் மகனான ----------( மணமகன் பெயர்  )
ஆகிய நான் , ஆதியும் அந்தமும் இல்லாஎம் மிறை சிவபெருமான் திருவருளால்
இன்று ------தேதி--------கிழமை  சிவத்திரு ---------( மணமகள் தந்தை பெயர் )
சிவத்திரு --------( மணமகள் தாயார் பெயர் )  ஆகியோரின் மகளான செல்வி --------( மணமகள் பெயர் ) யை என் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டுள்ளேன் எனவும் , தெய்வப்பலவர் திருக்குறள் நெறி நின்று இருவரும் இணைந்து இல்லறம் ஆகிய நல்லறத்தை இனிது நடத்துவோம் என்று உறுதி கூறுகிறேன் .
மணமகள் எடுக்க்க வேண்டிய உறுதிமொழி : -
      எம்மிறை சிவபெருமான் திருவருளுடன் இன்று என்னைத் தமது இல்லத் துணைவியாக ஏற்றுக் கொண்டுள்ள திருமிகு ------( மணமகன் பெயர் ) ஆகிய என் கணவருடன் திருக்குறள் நெறியில் இனிய இல்லறம் நட்த்திட இவருடன் என்றும் துணையாயிருப்பேன் என்று உறுதி கூறுகிறேன் .
மணமக்கள் உறுதி மொழி எடுத்தபின் , அவர்களுக்கு திருமணத்திற்கு வந்து உள்ள பெரியவர்கள் திருநீறு பூசி ஆசிர்வதிக்க வேண்டும் .
ஆசிர்வதிக்கும்போது பாடவேண்டிய பாடல்கள் : -
1 ) ஆறுலவு செய்ய சடை அய்யர் அருளாலே
    பேறுலகினுக்கு எனவரும் பெரியவர்க்கு
    வேறு பல காப்பு மிகை என்றவை விரும்பார்
    திருநீறு நெற்றியில் நிறுத்தி நிறைத்தார் .
2 ) ஞானம் காட்டுவர் நன்னெறி காட்டுவர்
    தானங் காட்டுவர் த்ம்மடைந்தார்க் கெல்லாம்
    தானங் காட்டித்தன் தாளடைந்தார்க்கட்கு
    வானம் காட்டுவர் போல் வன்னியூரறே .        ( அப்பர் )
3 ) ஆனந்தவெள்ளத் தழுந்தும் ஒர் ஆருயிர் ஈருருக்கொண்டு
    ஆனந்த வெள்ளத்திடைத் திளைத்தால் ஒக்கும் அம்பலஞ்சேர்
    ஆனந்த வெள்ளத்தறை கழலோன் அருள் பெற்றவரின்
    ஆனந்த வெள்ளம் வற்றாது முற்றாது இவ்வணி நலமே .  ( திருக்கோவையார் )
4 ) துதி வாணிவீரம் விசயம் சந்தானம் துணிவு தனம்
    அதி தானியம் செளபாக்யம் போகம் அறிவு அழகு
    புதிதாம் பெருமை அறம் குலம் நோயின்மை பூண்வயது
    பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே .
மணமக்களை பெரியவர்கள் ஆசிர்வதித்தபின் மணமக்களின் வலக்கைச் சுண்டு விரல்களை இணைத்து , பட்டுத் துணி கொண்டு கட்டவேண்டும் .மணமக்கள் மணமேடையை 3 முறை சுற்றி வரவேண்டும் . அம்மி மிதித்து அருந்ததி நட்சத்திரத்தை பார்க்கவேண்டும் . சுண்டு விரல் இணைக்கும் பொழுது பாட வேண்டிய பாடல் : -
 சாற்றும் நான்மறைகள் ஆர்ப்பத்தூரியம் சங்கம் ஓங்கக்
  கற்ற நான்முகத்தோன் வேள்விச் சடங்குநூல் கரைந்த ஆற்றால்
  முற்ற மங்கல நாண்சாத்தி முழுதுலகீன்றாள் செங்கை
  பற்றின்ன் பற்றிலார்க்கே வீடருள் பரமயோகி .       ( பரஞ்சோதி முனிவர் )
மணமக்கள் மணவறையை வலம் வரும்பொழுது பாட வேண்டிய பாடல் : -
மாதர்பிறைக் கண்ணியனை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவார் அவர்பின் புகுவேன்
யாதுஞ்சுவடு படாமல் அய்யாறடை கின்றபோது
காதன் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்
கண்டேனவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் .
மணமக்கள் அம்மி மிதித்து அருந்த்தி நட்சத்திரம் பார்க்கும் போது பாடும் பாடல் : -
மங்கலம் மிகுந்த செம்பொன் அம்மிமேல் மணாட்டிபாத
பங்கய மலரைக் கையால் பரிபுரம் சிலம்பப் பற்றிப்
புங்கவன் மனுவால் ஏற்றிப் புண்ணிய வசிட்டன்தேவி
எங்கெனச் செங்கை கூப்பி எதிவர அருட்கண் சாத்தி .
வாழ்த்துப்பாடல் : -
1 ) வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
   வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
   ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே
   சூழ்க வையகமும் துயர் தீர்கவே .
2 ) வையம் நீடுக மாமழை மன்னுக
    மெய் விரும்பிய அன்பர் விளங்குக
    சைவ நன்னெறிதான் தழைத்தோங்குக
    தெய்வ வெண்ணீறு சிறக்கவே .
3 ) ஆறிரு தடந்தோள் வாழ்க ! அறுமுகம் வாழ்க ! வெற்பைக்
    கூறுசெய் தனிவேல் வாழ்க ! குக்கடம் வாழ்க ! செவ்வேள்
    ஏறிய மஞ்ஞை வாழ்க ! யானைதன் அணங்கு வாழ்க !
    மாறிலா வள்ளி வாழ்க ! வாழ்க சீர் அடியாரெல்லாம் !
பின்னர் மணமகனின் அறைக்கு இருவரும் அழைத்து வரப்பெற்று கைக்கட்டவிழ்த்து,
பால் , பழம் மணமக்களுக்கு கொடுக்க வேண்டும் .  

Saturday, November 24, 2012

தெய்வத் தமிழ்த் திருமுறைத் திருமண நூல்

மணமக்கள் தம் தம் அறைக்குச் சென்று புத்தாடையுடுத்தி மணமகள் கலபரப்புச் செய்து மீண்டும் மணவறைக்குத் திரும்பும் முன்னர் குருக்கள் செய்து முடிக்கும் சடங்குகள் :

             திருமங்கல நாணை , பால் , புனித நீர் , சந்தனம் முதலான கொண்டு திருமுழுக்காட்டி , கற்பூர ஒளி காண்பித்து ஒரு தாம்பாளத்தில் தேங்காய் , வெற்றிலை , பழங்கள் , பாக்கு , பூமாலையுடன் வைத்து  , மண்டபத்தில் பெரியோர்களின் வாழ்த்துப் பெற்று வருமாறு அனுப்பிவைப்பார்கள்

அழல் ஓம்பல் ( ஹோமம் வளர்த்தல் ) : -

          அழற்குண்டத்தில் முறைப்படி அழல் உருவாக்குதல் : - குண்டத்தின் எட்டுப் பக்கங்களிலும் திக்குப் பாலகர் எழுந்தருளியிருப்பதாகப் பாவித்து அங்கேயெல்லாம் வெற்றிலையில் மலர் வைத்து வழிபாடு செய்ய வேண்டும் .

ஒத வேண்டிய திருமுறைப்பாடல்கள் : -

அ ) வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிக நல்ல வீணை தடவி
        மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
        ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனி பாம்பிரண்டு      
                                                                                                                             முடனே  
         ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே .

ஆ ) நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே
        ஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே அரன் நாமம்
        கேளாய் நம்கிளை கிளைக்கும் கேடுபடாத்திற மருளிக்
        கோளாய் நீக்கும் அவன் கோளிலி எம்பெருமானே .      -  சம்பந்தர்
இ ) இருநிலனாய்த் தீயாகி நீருமாகி இயமானனாய் எறியும் காற்றுமாகி
       அருநிலைய திங்களாய் ஞாயிறாகி ஆகாசமாய் அட்ட மூர்த்தியாகி
       பெருநலமும் சுற்றமும் பெண்ணும் ஆணும் பிற உருவும் தம்முருவும்   
                                                                                                                  தாமேயாகி
      நெருநலையாய் இன்றாகி நாளையாகி நிமிர்புன் சடையடிகள்    
                                                                    நின்றவாறே  .          அப்பர்
                                                                                                                   
ஈ ) எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி
       எரிசுடராய் நின்ற இறைவா போற்றி
       கொல்லார் மழுவாட் படையாய் போற்றி
       கொல்லும் கூற்றொன்றை யுதைத்தாய் போற்றி      
       கல்லாதார் காட்சிக்கு அரியாய் போற்றி
       கற்றார் இடும்பை களைவாய் போற்றி
       வில்லால் வியன் அரணம் எய்தாய் போற்றி
       வீரட்டங்காதல் விமலா போற்றி  .                          - அப்பர்

உ ) வணங்கத் தலைவைத்து வார்கழல் வாய் வாழ்த்த வைத்து
       இணங்கத் தன்சீரடியார் கூட்டமும் வைத்து , எம்பெருமான்
       அணங்கொடு அணிதில்லை அம்பலத்தே ஆடுகின்ற
       குணங்கூரப் பாடி , நாம் பூவல்லி கொய்யாமோ .  -   வதவூரர் .

 ஊ ) ஒளிவளர் விள்க்கே உலப்பிலா ஒன்றே உணர்வுசூழ் கடந்தோர்                                                                                           
                                                                                                       உணர்வே
          தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே சித்தத்துள் தித்திக்கும்  
                                                                                                                  தேனே
         அளிவளர் உள்ளத்து ஆனந்தக்கனியே அம்பலம் ஆடரங்காக
         வெளிவளர் தெய்வக் கூத்துகந்தாயைத் தொண்டனேன் விளம்புமா 
                                                                                              விளம்பே .   - திருவிசைப்பா 

எ ) குழலொலி , யாழொலி ,கூத்தொலி , ஏத்தொலி , எங்கும் குழாம் பெருகி
      விழவொலி விண்ணளவும் சென்று விம்மிமிகு திருவாரூரில்
      மழவிடையார்க்கு வழிவழியாளாய் மணம் செய்குடிப் பிறந்த 
      பழ அடியாரொடும் கூடி எம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே . 
                                                                                                திருபல்லாண்டு .

ஏ ) என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் 
       ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
       மன்றுளார் அடியாரவர் வான்புகழ்
       நின்றதெங்கும் நிலவி உலகெலாம் .               - சேக்கிழார்

                          மணமகன் புத்தாடையணிந்து அழைத்து வரப்பெற்று மேடையின் எதிர்புறம் மேற்கு நோக்கி நாற்காலியில் அமரவைக்க வேண்டும் .
                        மணப்பெண் புத்தாடையணிந்து அழைத்து வரப்பெற்று மேடையின் பின்புறம் கிழக்கு நோக்கி நாற்காலியில் அமரவைக்க வேண்டும் .
                      மேளம் வாசிப்பவருக்கு தேங்காய் , பழம் , வெற்றிலை , பாக்கு இவைகளுடன் சன்மானம் வைத்து ஊஞ்சல் பாட்டு வாசிக்கச் சொல்லவேண்டும் .

அ ) ஊஞ்சல் பாட்டு : -

      சீரார் பவளங்கால் , முந்தங் காயிறாக
      ஏராரும் பொற்பலகை ஏறி இனிது அமர்ந்து
      நாராயணன் அறியா நாண் மலர்த்தாள் நாயடியேற்கு
      ஊராகத் தந்தருளும் உத்தரகோசமங்கை
     ஆராவமுதின் அருட்தாள் இணைபாடி
     போரார் வேற்கண் மடவீர் பொன்னூசல் ஆடாமோ !        - வாதவூரர்

தெய்வத் தமிழ்த் திருமறைத் திருமண நூல்

தாய்மாமனுடன்  சடங்கு  : -

அ . அம்மையப்பர் : 

விண்ணாளும் தேவர்க்கும் மேலான வேதியனை
மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்
தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டானைப்
பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற்
கண்ணார்கழல் காட்டி நாயேனையாட் கொண்ட 
அண்ணாமலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்  - மணிவாசகர்

ஆ . காப்பணிதல் :

ஆர்வம் மிக்கெழும் அன்பினால் மலரயன் அனைய
சீர்மறைத் தொழிற் சடங்குசெய் திருந்துநூல் முனிவர்
பார்வழிபட்ட வரும் இரு வினைகளின் பந்தச்
சார் பொழிப்பவர் திருக்கையில் காப்பு நாண்  சாத்த .    - சேக்கிழார்

இ . முளைபாலிகை தெளித்தல் :

வித்தாம் முளையாகும் வேரேதானாம் வேண்டும் உருவமாம் விரும்பிநின்ற
பத்தாம் அடியார்க்கோர் பாங்கனு மாம் பால்நிறமுமாம் பரஞ்சோதி தானாம்
தொத்தாம் அமரர் கணஞ்சூழ்ந்து போற்றத் தோன்றாது என் உள்ளத்தின் உள்ளெநின்ற
கத்தாம் அடியேற்குக் காணா காட்டும் கண்ணாம் கருகாவூர் எந்தை தானே .    -  அப்பர் 

புத்தாடையளித்தல் : 

வேண்டத் தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற்கு அரியோய் நீ
வேண்டியென்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயாது அருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டினல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே .                     -    வாதவூரர்

மணமகனுக்கு செய்தது போல் மணமகளுக்கும் காப்பு கட்டுதல் , முளைபாலிகை தெளித்தல் ஆகியவை முடிந்தபின் மணமகளுக்கு புத்தாடைகள் வழங்குவார்கள் .

Tuesday, October 23, 2012

தெய்வத்திருமுறைத் திருமண நூல் தொடர்ச்சி


               தெய்வத் திருமுறைத் திருமண நூல்
மணமகள் மணவறையில் தந்தையுடன் அமர்ந்து வழிபாடு : -
அ ) ஐந்தெழுத்து ஓதுவித்தல் : -
இருந்து சொல்லுவன் கேண்மிஙள் ஏழைகாள்
அருந்தவம்தரும் அஞ்செழுத்து ஓதினால்
பொருந்து நோய்பிணி போகத் துரப்பதோர்
மருந்தும் ஆகுவர் மன்னுமாற் பேறரே !    ( அப்பர் )
ஆ ) பிள்ளையார் வழிபாடு : -
மண்ணுல கத்தினில் பிறவி மாசற
எண்ணிய பொருளெல்லாம் எளிதின் முற்றுற
கண்ணுத நுடையதோர் களிற்று மாமுகப்
பண்ணவ்ன் மலரடி பணிந்து போற்றுவோம் ..
இ ) திருவிளக்கு வழிபாடு : -
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
 நல்லக விளக்கது நமச்சிவாயவே .    ( அப்பர் )
ஈ ) அம்மையப்பர் வழிபாடு : -
மனத்துள் மாயனை மாசறு சோதியைப்
புனிற்றுப் பிள்ளை வெள்ளைமதி சூடியை
எனக்குத் தாயை எம்மான் இடைமருதனை
 நினைந்திட்டு ஊறி நிறைந்தது என்னுள்ளமே . ( அப்பர் )
மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமாதேவி பணிசெய்து நாள் தொறும் பரவ
பொங்கு அழல் உருவன் பூத நாயகன் நால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணிதன்னோடும் அமர்ந்த ஆலவாயாவதும் இதுவே .(சம்பந்தர் )
மலையான் மடந்தை மணாளா போற்றி
மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி
நிலையாக என் நெஞ்சில் நின்றாய் போற்றி
நெற்றிமேல் ஒற்றைக் கண்ணுடையாய் போற்றி
இலையார்ந்த மூவிலைமேல் ஏந்தீ போற்றி
ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனாய் போற்றி
சிலையால் அன்று எயில் எரித்த சிவனே போற்றி
திருமூலட்டான்னே போற்றி போற்றி .    ( அப்பர் )

Tuesday, August 21, 2012

தெய்வத் தமிழ்த் திருமுறைத் திருமண நூல்- தொடர்ச்சி


7 ) மணமகன் மணவறையில் தந்தையுடன் அமர்ந்து வழிபாடு : - 
                           மணமகனுக்கும் ,பெற்றோர் ஒவ்வொருவருக்கும் இரண்டு மாலைகள் அணிவித்து ,புனித நீர் , பால் , திருநீறு அளித்தல் . மணமகனின் தாய்க்கு பூ கொடுக்கவேண்டும் .  
  அ ) குரு வழிபாடு : - ( உள்ளத்துள் குருவை நினைத்து ) 
          தெளிவு குருவின் திருமேனி காண்டல்
          தெளிவு குருவின் திரு நாமம் செப்பல்
          தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
          தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே .                 ( திருமந்திரம் ) 
 ஆ ) மணமகனுக்கு ஜந்தெழுத்தோதுதல் : - 
       பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
      ஆவினுக் கருங்கலம் அரனஞ்சாடுதல்
      கோவினுக் கருங்கலம் கோட்டமில்லது
      நாவினுக் கருங்கலம் நமச்சிவாயவே .              ( அப்பர் ) 
இ ) பிள்ளையார் 
     ஜந்து கரத்தனை ஆனை முகத்தனை
     இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
     நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
     புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேன் .        ( திருமூலர் ) 
 ஈ ) திருவிளக்கு  
      சோதியே சுடரே சூள்ஒளி விளக்கே
      சுரிகுழல் பனைமுலை மடந்தை
      பாதியே பரனே பால்கொள் வெண்ணீற்றாய்
     பங்கயத்து அயனும் மால் அறியா
     நீதியே ! செல்வத் திருப்பெருந்திறையில்
     நிறைமலர்க் குருந்தம் மேவியசீர்
     ஆதியே அடியேன் ஆதரித்தழைத்தால்
     அதெந்துவே என்றருளாயே .                          ( வாதவூரர் ) 
உ )  தான்ய லட்சுமி - நிறை நாழி : - 
     அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
     பொன்னம் பாலிக்கும் மேலுமிப் பூமிசை
     என்னம் பாலிக்குமாறு கண்டு இன்புற
     இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே  .             ( அப்பர் ) 
ஊ ) அம்மையப்பர் வழிபாடு : -      
     நன்றுடையானைத் தீயதி லானை நரை வெள்ளேறு
     ஒன்றூடையானை உமையொருபாகம் உடையானைச்
     சென்று அடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
     குன்று உடையானைக் கூற என்னுள்ளம் குளிரும்மே .   ( சம்பந்தர் )

     சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
     சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி
    பொங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
    புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி
    அங்கமலத் தயனோடு மாலும் காணா
    அனலுருவா நின்பாதம் போற்றி போற்றி
    செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி
    திருமூலட்டானே போற்றி போற்றி  .                ( அப்பர் )

  பொங்குருவச் செல்வம் கல்வி பொருவில்லா வாய்மை தூய்மை
  இங்கெமக்கு அருளவல்ல இணையில்லா எம்பிராட்டி
  பங்கயத்தஞ்சூழ் கூடற்பவளமால் வரையை நீங்கா
  அங்கயற்கண்ணி மங்கை அடிக்கமலங்கள் போற்றி .

அரசாணிக்கால் நாட்டல் : - கன்னி மூலையில் - 

 யோகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
 பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
 ஆகமார்த்த தோலுடையவன் கோவண ஆடையின்மேல்
 நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே !                    ( சம்பந்தர் )

தாய்மாமனுடன் சடங்கு : -

அ . அம்மையப்பர் வழிபாடு : -

முன்னியா நின்ற முதல்வா போற்றி
            மூவாத மேனியுடையாய் போற்றி
என்னியாய் எந்தை பிரானே போற்றி
           ஏழின் இசையே உகப்பாய் போற்றி
மன்னிய மங்கை மணாளா போற்றி
          மந்திரமும் தந்திரமும் ஆனாய் போற்றி
கன்னியர் கங்கைத் தலைவா போற்றி
         கயிலை மலையானே போற்றி போற்றி .     ( அப்பர் )

வேத நாயகன் வேதியர் நாயகன்
மாதின்  நாயகன் மாதவர் நாயகன்
ஆதி நாயகன் ஆதிரை நாயகன்
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே .                 ( அப்பர் )

காப்பணிதல் : - ( வலக்கையில் ) தாய்மாமன் மணமகனின் வலது கையில்
காப்பு கட்டவேண்டும் . மஞ்சள் நூலில் விரலி மஞ்சள் ,வெற்றிலை வைத்து கட்டியுள்ளதே காப்பு ஆகும் .

மாறிலா நிறை வளந்தரு புகலியின் மணமீக்
கூறுநாளின் முன்னாளினில் வேதியர் குழாமும்
நீறு சேர் திருத் தொண்டரும் நிகரிலாதவருக்கு
ஆறு சூடினார் அருட் திருக்காப்பு நாண் அணிவார் .     ( சேக்கிழார் )

முளைப்பாலிகை தெளித்தல் : - 
                        பின்பு ஒரு சிறிய குழந்தையின் கையில் ஊற வைத்த நவதானியங்களை கொடுத்து , தாய்மாமன் கையில் கொடுத்து , மணமகன் கையில் கொடுத்து முளைப்பாலிகையில் வைக்கச் சொல்லுவார்கள் .இதே முறையில் அங்கு உள்ள 7 அல்லது 9 முளைப்பாலிகைகளில் ஊறவைத்த நவதானியம் நிரப்ப வேண்டும் .

பாரவன்காண் பாரதனிற் பயிரானவன்காண்
பயிர் விளைக்கும் துளியவன்காண் துளியில் நின்ற
நீரவன்காண் நீர் சடைமேல் நிகழ்வித்தான் காண்
நிலவேந்தர் பரிசாக நினைவுற்று ஓங்கும்
பேரவன்காண் பிறையெ யிற்று வெள்ளைப் பன்றி
பிரியாது பலநாளும் வழிபட்டு ஏத்தும்
சீரவன்காண் சீருடைத் தேவர்க்கெல்லாம்
சிவனவன் காண் சிவபுரத்தெம் செல்வன் தானே .     ( அப்பர் )

முளைப்பாலிகை தெளித்தவுடன் மணமகனுக்கு புத்தாடைகள் வழங்க வேண்டும் . அப்புதிய ஆடைகளை அணிந்தே மணமகன் திருமாங்கல்ய தாரணத்திற்கு வரவேண்டும் .

ஈ ) புத்தாடையளித்தல் : - 

பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப்
     போகமும் திருவும் புணர்ப்பானைப்
பின்னையென் பிழையைப் பொறுப்பானைப்
    பிழையெலாந் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையன் என்றறியொண்ணா
    எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயற்பழனத்து அணி
    ஆருரானை மறக்கலுமாமே .                           ( சுந்தரர் )

மணமகள் மேடைக்கு வருகை : -

பெற்றோர் வழிபாடு : - மணமகன் போன்று மணமகளும் அவரது தாய் தந்தையருக்கு பாதபூசை செய்யவேண்டும் .

திருமகட்குச் செந்தாமரையாம் அடி
சிறந்தவர்க்குத் தேனாய் விளைக்கும் அடி
பொருளவர்க்குப் பொன்னுரையாய் நின்ற அடி
புகழ்வார் புகழ்ந்தகைய வல்ல அடி
உருவிரண்டும் ஒன்றோடு ஒன்று ஒவ்வா அடி
உருவென்று உணரப் படாத அடி
திருவதிகைத் தென்கெடிலநாடன் அடி
திருவீரட்டானத்தெம் செல்வன் அடி .                         ( அப்பர் )