Friday, April 8, 2011

திருமண சடங்குகள் -11

திருமணத்திற்கு மறுநாள் காலை நிகழ்ச்சி : - அதிகாலையில் மணப்பெண் நீராடி பொங்கல் இட்டுத் தீப பூசை செய்து காகத்திற்கு சாதம் வைக்க வேண்டும் .
மணவறையில் மாப்பிள்ளை விளக்கின் அருகிலும் மாப்பிள்ளைக்கு இடது புறம் பெண்ணும் கிழக்கு முகமாக அமர , பெரியவர் ஒருவர் தட்டிலுள்ள புழுங்கலரிசியை மாப்பிள்ளை கையால் இருமுறை எடுத்துப் போடச் செய்து , மூன்றாம்முறை எடுத்த அரிசியை கையில் வைத்துக் கொண்டு அரிசியின் மேல் ஒரு வாழைக்காயை வத்து , முதல் நாள் கட்டிய காப்பினை கத்திரியால் அறுக்க வேண்டும் . இவ்வாறே பெண்ணுக்கும் செய்து பெண் கையில் கட்டியுள்ள காப்பினை அறுக்க வேண்டும் .

பிள்ளை மாத்து : - ஒரு தாம்பாளத்தில் பட்டுத் துணியை மடித்து விரித்து அ தன் மேல் பிள்ளையை ( பித்தளை அல்லது வெள்ளி )வைத்து நகை அணிந்து ,பெண் மாப்பிள்ளையிடமும் மாப்பிள்ளை பெண்ணிடமும் மூன்று முறை கொடுத்து வாங்க வேண்டும் .

மாப்பிள்ளையும் பெண்ணும் மூன்று முறை மாலை மாற்றிக் கொள்ள வேண்டும் .

மாப்பிள்ளையின் சகோதரி மணவறையில் ஏறி ஏற்றி இறக்க வேண்டும் .ஒரு சகோதரி மணமக்கள் பின் நின்று கொள்ள வேண்டும் .சந்தணகும்பா , குங்குமம் இருகைகளிலும் வைத்துக் கொண்டு ஏற்றி இறக்க வேண்டும் . இதே போல் பன்னீர் செம்பும் நிறை நாழியும், பின் தேங்காயும் விளக்கையும் தொட்டுக் கொண்டு ஏற்றி இறக்க வேண்டும் . அடை பொரியை மணமக்களை மூன்றுமுறை சுற்றி கிழக்கு , தெற்கு , மேற்கு , வடக்கு ஆகிய நான்கு திசைகளிலும் போட வேண்டும் . அதன்பின் பெரியவர்கள் திறுனீறு பூசி ஆசீர்வதம் செய்ய வேண்டும் .பிள்ளை மாற்றுச் சுருள் கொடுக்க வேண்டும் .ஏழாம் நீர்ச் சுருள் கொடுக்க வேண்டும் .பின் ஆரத்தி எடுக்க வேண்டும் .

மணமக்கள் மணவறையை மூன்று முறை வல்ம் வந்தபின் . மஞ்சள் . சுண்ணாம்பு ,வெற்றிலை கலந்த நீர்க்கொப்பரையில் , ஒருவர் ஒரு மோதிரத்தையும் , மடக்குக் கத்தியையும் போட்டு மணமக்களை எடுக்கச் செய்ய வேண்டும் .பின் மணமக்களை மனையினுள் அழைத்துச் சென்று ,பாலும் ப்ழமும் கொடுக்க வேண்டும் .

மாப்பிள்ளைஉடன் பிறந்த சகோதரிகளுக்கு பலகாரங்களும் , சுருளும் வழங்கிய பின் பலகாரப்பந்தி நடத்த வேண்டும் . மதிய உணவிற்குப் பின் , மாலைகள் ,முளைப்பாலிகைகள் ஆகியவற்றை ஒரு தாம்பாளத்தில் வைத்து அருகிலுள்ள நீர் நிலைகளில் ( வாய்க்கால் , ஆறு , தெப்பக்குளம் ) முளைப்பாலிகைகளுக்குப் பூசைசெய்து விட வேண்டும் . வந்துள்ள மகளிருக்குச் சந்தனம் , குங்குமம் , பூ ஆகியன கொடுக்க வேண்டும் .

அன்று மாலை மணமக்கள் பெற்றோர்களுடன் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள திருக்கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்து வர வேண்டும் .

மறு வீடு , மனை புகுதல் , தாலி பெருக்குதல் , இரண்டாம் மறுவீடு : - முகூர்த்தப் பட்டோலையில் குறித்துள்ள நேரத்தில் மணமக்கள் மறுவீடு செல்ல வேண்டும் .மாப்பிள்ளையின் சகோதரி தம்பதியரை அழைத்துச் செல்ல வேண்டும் .மாப்பிள்ளை வீட்டில் புது மணதம்பதிகளுக்கு வீட்டு வாசலில் ஆரத்தி எடுத்து மறுவீடு புக வேண்டும் .வீட்டில் திருவிளக்கு முன்பு தம்பதியரை அமர்த்தி பாலும் பழமும் கொடுக்க வேண்டும். பின் மணப்பெண்ணை சமையல் அறைக்கு அழைத்துச் சென்று மணப்பெண் உப்பு பாணையை தொட வேண்டும் .

தாலி பெருக்கம் ; - ஒரு நல்ல நாளில் நல்ல நேரம் பார்த்து பெண்ணை திருவிள்க்கின்முன் அமர்த்தி , ம்ஞ்சள் நூலில் கோர்த்து இருக்கும் திருமாங்கல்யத்தை மாப்பிள்ளைவீட்டார் அணிவித்த தாலிசங்கிலியில் தாலியை மாற்றி கோர்க்க வேண்டும் . இந்த சடங்கை முதிர்ந்த சுமங்கலி பெண் செய்து கொடுப்பது உத்தமம் . தாலி பெருக்கம் செய்யும் பொழுது மாப்பிள்ளை முன் இருக்கக்கூடாது .

ஒரு நல்ல நாள் நல்ல நேரம் பார்த்து தம்பதியர் மாப்பிள்ளை வீட்டில் இருந்து பெண்வீட்டிற்கு செல்ல வேண்டும் . பெண்வீட்டில் மாப்பிள்ளைக்கு விருந்து கொடுத்து சுருளும் கொடுக்க வேண்டும் .

மாப்பிள்ளை அழைப்பு முதல் ஒரு வருடம் முடியும் வரை கொடுக்க்க வேண்டிய சுருள் விபரங்கள் ; -

சுருள் விபரம் ******தொகை*****பெறவேண்டியவர் **கொடுக்க வேண்டிய சமயம்

மாப்பிள்ளை
அழைப்பு*********தகுதிக்கு ஏற்ப***மாப்பிள்ளை **மாப்பிள்ளை அழைப்பின் போது

திரு நாண்******ரூ 51/= தகுதிக்கு ***மாப்பிள்ளையின் *****மணவறையில்
பூட்டு***********ஏற்ப ****************சாகோதரி

கைப்பிடி *****தகுதிக்கு ஏற்ப*****மாப்பிள்ளை சகோதரிஅந்த நிகழ்ச்சியின் போது

சட்டரசம் ***தகுதிக்குஏற்ப***மாப்பிள்ளை சகோதரி**அந்த நிகழ்ச்சியின்போது

விநாயகச் சுருள் கணிசமான தொகை ***மாப்பிள்ளை***திருமண நாள் இரவு
**********************************************************ஒலிசை வைக்கும் போது

ஆனந்த சுருள்**தகுதிக்கு ஏற்ப*மாப்பிள்ளையின் சகோதரி**மறு நாள் அதிகாலை

பலகாரச்சுருள் ===சிறியதொகை +இனிப்பு,காரப்பலகாரங்களுடன் மாப்பிள்ளையின் சகோதரிக்கு கொடுக்கவேண்டும் ==மாப்பிள்ளை சகோதரி

பிள்ளை மாற்றுச் சுருள் ==சிறிய தொகை == மாப்பிள்ளையின் சகோதரி

ஏழாம் நீர்ச்சடங்கு == சிறிய தொகை == மாப்பிள்ளையின் சகோதரி

மறுவீடு ===கணிசமான தொகை / பெண்வீட்டார் சர்க்கரைபொங்கல் கொண்டுபோகவேண்டும் == மாப்பிள்ளை க்கு = மறுவீடு மனைபுகும் சமயம்.

நல்லமாதம் பழம் போட ==தேவையான பணம் வேண்டும் ==மாப்பிள்ளையின் தந்தையிடம் ==மறுவீடு சமயம் .

இரண்டாம் மறுவீடு ==கணிசமான தொகை (மறுவீட்டிற்கு கொடுத்ததைவிட குறைவாக )== மாப்பிள்ளையிடம் == இரண்டாம் மறுவீடு வந்த சமயம் .

சித்திரைச் சுருள் == சிறிய தொகை ==மாப்பிள்ளையிடம் == சித்திரை மாதம் பிறக்கும் முன் பங்குனியில் .

ஆடிச்சுருள் ==சிறிய தொகை == மாப்பிள்ளையிடம் ==ஆனி மாத கடைசியில் .

புரட்டாசி == சிறிய தொகை == மாப்பிள்ளையிடம் == நவராத்திரிக்கு முன்னதாக .

தீபாவளி ==மணமக்களுக்கு புத்தாடையுடன் கணிசமான தொகையும் ==மாப்பிள்ளையிடம் == தீபாவளிக்கு முன்பாக .

கார்த்திகை ==பொரி,வெல்லம்,கர்த்திகை விளக்கு புதுசேலையுடன் சிறிய தொகை ==மாப்பிள்ளையிடம் == திருக்கார்த்திகைக்கு முன்பாக .

தைப்பொங்கல் == வெங்கலப்பானை,சருவச்சட்டி,அகப்பை,குத்துவிளக்கு,மணமக்களுக்கு புத்தாடை, பச்சரிசி,வெல்லம்.கரும்பு,காய்கறிகளுடன் சுருள்==மாப்பிள்ளையிடம்== தைப்பொங்களுக்கு முன்பாக .

மாசிச்சுருள் == சிறிய தொகை == மாப்பிள்ளயிடம் == சிவராத்திரிக்கு முன்பாக .

தீபாவளி . பொங்கல் சுருள் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு கொடுப்பது மரபு .
சுருள் பெறும் பொழுது பெற்றோரின் அனுமதியைப்பெற்று மணமகன் சுருளை ஏற்றுக் கொள்ள வேண்டும் .

Tuesday, April 5, 2011

திருமண சடங்குகள் - 10

எண்ணெய் சடங்கு ; - இரு கிண்ணங்களில் எண்ணெய , சீயக்காய்ப்பொடி , மஞ்சள் பொடி , இவற்றை ஒரு தட்டில் வைத்து மணவறையில் வைக்க வேண்டும் .பின் மணமக்கள் இருவரும் மாலைகள் அணிந்து வந்து பெண் வலப்புறமும் , மாப்பிள்ளை இடப்புறமும் மணவறையில் அமர வேண்டும் .மணமகளின் தம்பி , ஆட்காட்டி விரலால் மாப்பிள்ளை தலையில் மூன்று முறை எண்ணெய் தொட்டு வைக்க வேண்டும் .பின் சீயக்காய்ப்பொடியை மும்முறை தொட்டு வைக்க வேண்டும் .இதே போல் மணமகளுக்கும் எண்ணெய் மூன்று முறையும் , சீயக்காய்ப்பொடி மூன்று முறையும் , ம்ஞ்சள் பொடி மூன்று முறையும் தொட்டு வைக்க வேண்டும் .
மாப்பிள்ளை தன் மைத்துனருக்குத் தங்க மோதிரம் , புத்தாடைகள் , தேங்காய் ,பழங்கள் , வெற்றிலை ,பாக்கு வைத்து கொடுக்க வேண்டும் .அத்ன் பின் மணமகள் ஆட்காட்டி விரலால் மாப்பிள்ளை தலையில் எண்ணெய் மூன்று முறை , சீயக்காய்ப்பொடி மூன்று முறை தொட்டு வைக்க வேண்டும் .அடுத்து மாப்பிள்ளை பெண்ணுக்கு எண்ணெய மூன்றுமுறையும் , சீயக்காய்ப்பொடி மூன்றுமுறையும் ,மஞ்சள் பொடி மூன்றுமுறையும் தொட்டு வைக்க வேண்டும் .
பின்பு மணமக்களை நீராட அழைத்துச் செல்ல வேண்டும் .

நீராடியபின் மாப்பிள்ளையை மட்டும் ஆடைகள் மாற்றி இரு மாலைகள் அணிவித்து , மணவறைக்கு அழைத்து வர வேண்டும் .இதற்கு முன் பெண்ணின் தந்தையார் தமக்கு மூத்த மருமகஙள் இருப்பின் அவர்களுக்கு சுருள் வைத்துக் கொடுக்க வேண்டும் . மருமகனை மணவறையில் உட்கார வைத்து பன்னீர் தெளித்து ,சந்தனம் , குங்குமம் கொடுத்து மஞ்சள் தடவிய தேங்காய் , வெற்றிலை ,பழங்கள் , பாக்கு முதலியனவற்றுடன் சுருள் வைத்து கொடுக்க வேண்டும் .அத்ன் பின்பே மாப்பிள்ளைக்கு விநாயகச்சுருள் வைத்துக் கொடுக்க வேண்டும் .

முன்னதாக மணவறைக்கு முன்பு ஒலிசைச் சாமாகளை அழகுற வைத்துக் கொள்ள வேண்டும் . இப்பொழுது ஒலிசை சாமான்கள் அடுக்கி வைப்பதற்குப் பதில் இன்ன இன்ன சாமான்கள் இருக்கின்றன என எழுதி வாசித்து விடுகின்றனர் .
மணமக்களுக்க்றிய ஒலிசை ஜவுளிகளை மாப்பிள்ளையின் முன் ஒரு தாம்பாளத்தில் வைத்து , மாப்பிள்ளைக்கு பன்னீர் தெளித்து , சந்தனம் , குங்குமம் வழங்கி விநாயகச் சுருளை வைத்து கொடுக்க வேண்டும் .

வி நாயகச்சுருள் வகைச் சாமான் கள் : - விரலி ம்ஞ்சள் , மஞ்சள் பூசிய தேங்காய் 3 ,வெற்றிலை , பாக்கு , ஒரு சீப்பு பழம் , பூ ஆரம் 2 .

பின்பு மாப்பிள்ளையின் சகோதரியானவள் திருமாங்கல்யத்திற்குப் பொன் உருக்கும் போது தங்கம் / பணம் கொடுத்திருந்தால் , அவள் கணவரை மணவறையில் அமர்த்தி, மாப்பிள்ளை அவருக்கு மாலை அணிவித்து ,பன்னீர் தெளித்து , சந்தணம் , குங்குமம் வழங்கி அவர்கள் முன் கொடுத்த தங்கத்தின் விலைப் பணத்துடன் சுருளும் வைத்துக் கொடுக்க வேண்டும் . அதன் பின் மாப்பிள்ளையை உட்காரச் வைத்து சகோதரியின் கணவர் பன்னீர் தெளித்து , சந்தணம் , குங்குமம் வழங்கி மாப்பிள்ளைக்கு சுருள் கொடுக்க வேண்டும் .பின் அனைவருக்கும் தாம்பூலம் கொடுக்க வேண்டும் . பிறகு இரவு உணவு அருந்த வேண்டும் .

சாந்தி முகூர்த்தம் : - மணமக்கள் தங்கும் அறையை நன்கு அலங்கரிக்கவும் . பால் , பழங்கள் , ம்ற்றும் இனிப்பு வகைகளுடன் திருவிளக்கு ஏற்றி வைக்கவும் . மணமகளை , மணமகனின் சகோதரி அழைத்து வருவாள் . மறு நாள் காலையில் அந்த சகோதரிக்கு ஆணந்தச் சுருள் கொடுக்க வேண்டும் .

Monday, April 4, 2011

திருமண சடங்குகள் - 9

நலுங்கு நிகழ்ச்சி : - மாலையில் மாப்பிள்ளை கிழக்கு முகமாகவும் , பெண் மேற்கு முகமாகவும் அமர்ந்து , தேங்காய் உருட்டலும் ,பூப்பந்து எறிதலும் , பல்லாங்குழி ஆடலும் செய்வர் . அதன் பி பெண் எழுந்து மாப்பிள்ளைக்கு பன்னீர் தெளித்து , வலது கால் பாதத்தில் சந்தனம் பூசிக் குங்குமம் இடல் வேண்டும் .

அடுத்து மாப்பிள்ளை உட்கார்ந்தபடியே பெண் குனிந்து கொடுக்க அவளுக்குப் பன்னீர் தெளித்து , வலது கையின் பின்புறம் சந்தனம் பூசிக் குங்குமமும் இட வேண்டும் .பின் சுட்ட அப்பளங்கள் 12 தயாராக வைத்துக் கொண்டு , பெண் எழுந்து நின்று , 2 அப்பளங்களை மாப்பிள்ளையின் தலையைச் சுற்றி தட்ட வேண்டும் .இதே போல் மணமகள் 3 முறை செய்ய வேண்டும் . அவ்வாறே மாப்பிள்ளை கீழே அமர்ந்து கொண்டு பெண் குனிந்து கொடுக்க அவள்தலையைச்சுற்றி இரண்டிரண்டாகா அப்பளங்களைத் தட்ட வேண்டும் .பிறகு ஆரத்தி எடுத்து , மணமக்களை மனைக்குள் அழைதுதுச் செல்ல வேண்டும் .

திருமண சடங்குகள் -8

திரு நாண் பூட்டு : - மாப்பிள்ளையின் சகோதரி ( திருமணம் ஆனவள் ) மணவறையில் ஏறியதும் , அவளுக்குச் சந்தனம் , குங்குமம் ,பூ ஆகியன கொடுத்தல் வேண்டும் . அவள் பூவை தந்தாலியில் வைத்தபின் , திருமாங்கல்யத்தை தன் கழுத்தின் பின்புறம் மாற்றிக் கொண்டு , மணமகளுக்கு மணமகனுடன் சேர்ந்து
திருப்பூட்டி மூன்று முடிச்சுகள் போட வேண்டும் .
திருப்பூட்டியபின் மாப்பிள்ளையின் சகோதரி , தனது திருமாங்கல்யத்தைத் தனது கழுத்தின் முன்புறம் இட்டுக் கொண்டு , மணமகள் திருமாங்கல்யத்தில் சந்தனம் , குங்குமம் , பூ வைக்க வேண்டும் .அதன் பின் மணவறைக் கால் நான்கிற்கும் கன்னி மூலையில் இருந்து தொடங்கிச் சந்தனம் , குங்குமம் வைக்க வேண்டும் .

அடுத்து மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுத்து , மணமக்கள் மாலை மாற்றிக் கொள்ளச் செய்ய வேண்டும் .பின் மாப்பிள்ளையின் சகோதரிகள் ஏற்றி இறக்குதல் செய்ய வேண்டும் .பிறகு அடை பொரி சுற்றி நான்கு புறமும் இட வேண்டும் .

அதன்பின் மணமகன் சகோதரிக்கு , தேங்காய் , பழங்கள் , வெற்றிலை , பாக்கு , பூ இவற்றுடன் திருப்பூட்டுச் சுருள் கொடுக்க வேண்டும் .

பின் மணமக்கள் வலக்கைகளைச் சிவப்புப் பட்டுத் துணியால் கட்ட வேண்டும் .சிவப்புத் துணியை பெண்ணின் தகப்பனார் கட்டி விட வேண்டும் . குருக்களைய்யா அல்லது குடும்பத்தில் பெரியவர்கள் இதைச் செய்யலாம் .

பின் மணமக்கள் மணவறையைச் சுற்றி வலம் வருவார்கள் . அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல் நடைபெறும். ஒவ்வொரு சுற்றிலும் மணமகள் தன் வலது பாதத்தைத் தூக்கி அம்மி மீது வைக்க வேண்டும் .அவள் அந்த கல்லைப் போல் உறுதியான மனனிலையுடன் இருப்பதன் அடையாளம் அது . மணமகன் தன் பத்தினிக்கு அருந்ததி இருக்கும் திக்கைக் காட்டி அதனை தரிசிக்க செய்ய வேண்டும் .பெரியவர்களின் ஆசீர்வதம் , வாழ்த்துதல் ,திரு நீறு பூசுதல் ஆகியவை நிகழும் .முடிவில் ஆரத்தி எடுக்க வேண்டும் .

அதன்பின் மணமக்களை மனையினுள் ( மாப்பிள்ளையின் அறையினுள் ) அழைத்துச் செல்வர் .மணமகள் மாப்பிள்ளையின் ச்கோதரிக்கு கைப்பிடிச் சுருள் கொடுத்துக் கட்டை அவிழ்க்கச் செய்ய வேண்டும் .பாலும் பழமும் மணமக்களுக்கு கொடுக்க வேண்டும் .
குறித்த நேரத்தில் மாப்பிள்ளைக்குப் பெண் சட்டரசம் பரிமாற வேண்டும் . மாப்பிள்ளையின் சகோதரிக்கு சட்டரசச் சுருள் தேங்காய் , பழங்கள் , வெற்றிலை ,பாக்குடன் கொடுக்கவும் .பின் மணமக்களை மனையினுள் அழைத்துச் செல்வர் .

Saturday, April 2, 2011

திருமண சடங்குகள் - 7

கன்னி ஊஞ்சல்

கன்னி ஊஞ்சல் பாட்டுப் படும் வகைக்காக ஒதுவார் , நாதஸ்வர வித்துவான் இருவருக்கும் தேங்காய் , பழங்கள் , வெற்றிலை ,பாக்கு ,இவற்றுடன் தட்சணை (பணமும் ) கொடுத்துப் பாடச் செய்ய வேண்டும் .

கன்னி ஊஞ்சல் பாட்டு

சீரார் பவளங்கால் முத்த்ம் கயிறாக
ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
நாராயணன் அறியா நாள்மலர்த்தாள் நாயடியேற்கு
ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை
ஆரா அமுதின் அருள்தாள் இணைபாடிப்
போரார்வேல் கண்மடவீர் பொன்னுஞ்சல் ஆடாமோ .


மூன்றுஅங்கு இலங்கு நயனத்தான் மூவாத
வான்தங்கு தேவர்களும் காணா மலரடிகள்
தேன்தங்கித் தித்தித்து அமுதூறித் தாந்தெளிந்தாங்கு
ஊந்தங்கி நின்று உருக்கும் உத்தர கோசமங்கைக்
கோந்தங்கு இடைமருது பாடிக் குல்ம்ஞ்ஞை
போன்று அங்கு அன நடையீர் ! பொன்ணூஞ்சல் ஆடாமோ .

தெங்குலவு சோலைத் திருவுத்தர கோசமங்கை
தங்குலவு சோதித் தனி உருவம் வந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட்டு எந்தரமும் ஆட்கொள்வான்
பங்குலவு கோதையும் தானும் பணிகொண்ட
கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்
பொங்குலவு பூண்முலையீர் ! பொன்ணூஞ்சல் ஆடாமோ .

மேலே கண்ட மூன்று பாடல்களும் பாடியபின் , மணமகள் வலமாக வந்து
மணமகனுக்கு இரு மாலைகள் சூட்டி , மணமகன் வலக்கை மோதிர விரலில்
மோதிரம் போட வேண்டும் .(இந்த இடத்தில் மணமகள் மட்டுமே மணமகனுக்கு மாலை போடவேண்டும் . மணமகன் மணமகளுக்கு மாலை போடக்கூடாது . )பின்
மணமகன் , மணமகளுக்கு மோதிரம் அணிய வேண்டும் .அதன்பின் மணமக்கள்
மணவறைக்கு வரவும் , மணமகள் மணமகனுக்கு வலப்புறம் மணவறையில்
அமர்தல் வேண்டும் .

கன்னிகாதானம் -( தாரை வார்த்து கொடுக்கும் சடங்கு )
மணமகள் வலது கையின் அடியில் மணமகன் வலதுகையையும் , அவற்றிற்குக் கீழ் மணமகன் த்ந்தையார் , தாயார் கைகளும் இருக்கவேண்டும் .
மணமகள் கையில் வெற்றிலை ,பாக்கு , பழங்கள் ,தேங்காய் வைத்து , மணமள் தந்தையாரும் தாயாருமாகப் பால் ஊற்றி கன்னிகாதானம் செய்வது மரபு .