Monday, April 4, 2011

திருமண சடங்குகள் -8

திரு நாண் பூட்டு : - மாப்பிள்ளையின் சகோதரி ( திருமணம் ஆனவள் ) மணவறையில் ஏறியதும் , அவளுக்குச் சந்தனம் , குங்குமம் ,பூ ஆகியன கொடுத்தல் வேண்டும் . அவள் பூவை தந்தாலியில் வைத்தபின் , திருமாங்கல்யத்தை தன் கழுத்தின் பின்புறம் மாற்றிக் கொண்டு , மணமகளுக்கு மணமகனுடன் சேர்ந்து
திருப்பூட்டி மூன்று முடிச்சுகள் போட வேண்டும் .
திருப்பூட்டியபின் மாப்பிள்ளையின் சகோதரி , தனது திருமாங்கல்யத்தைத் தனது கழுத்தின் முன்புறம் இட்டுக் கொண்டு , மணமகள் திருமாங்கல்யத்தில் சந்தனம் , குங்குமம் , பூ வைக்க வேண்டும் .அதன் பின் மணவறைக் கால் நான்கிற்கும் கன்னி மூலையில் இருந்து தொடங்கிச் சந்தனம் , குங்குமம் வைக்க வேண்டும் .

அடுத்து மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுத்து , மணமக்கள் மாலை மாற்றிக் கொள்ளச் செய்ய வேண்டும் .பின் மாப்பிள்ளையின் சகோதரிகள் ஏற்றி இறக்குதல் செய்ய வேண்டும் .பிறகு அடை பொரி சுற்றி நான்கு புறமும் இட வேண்டும் .

அதன்பின் மணமகன் சகோதரிக்கு , தேங்காய் , பழங்கள் , வெற்றிலை , பாக்கு , பூ இவற்றுடன் திருப்பூட்டுச் சுருள் கொடுக்க வேண்டும் .

பின் மணமக்கள் வலக்கைகளைச் சிவப்புப் பட்டுத் துணியால் கட்ட வேண்டும் .சிவப்புத் துணியை பெண்ணின் தகப்பனார் கட்டி விட வேண்டும் . குருக்களைய்யா அல்லது குடும்பத்தில் பெரியவர்கள் இதைச் செய்யலாம் .

பின் மணமக்கள் மணவறையைச் சுற்றி வலம் வருவார்கள் . அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல் நடைபெறும். ஒவ்வொரு சுற்றிலும் மணமகள் தன் வலது பாதத்தைத் தூக்கி அம்மி மீது வைக்க வேண்டும் .அவள் அந்த கல்லைப் போல் உறுதியான மனனிலையுடன் இருப்பதன் அடையாளம் அது . மணமகன் தன் பத்தினிக்கு அருந்ததி இருக்கும் திக்கைக் காட்டி அதனை தரிசிக்க செய்ய வேண்டும் .பெரியவர்களின் ஆசீர்வதம் , வாழ்த்துதல் ,திரு நீறு பூசுதல் ஆகியவை நிகழும் .முடிவில் ஆரத்தி எடுக்க வேண்டும் .

அதன்பின் மணமக்களை மனையினுள் ( மாப்பிள்ளையின் அறையினுள் ) அழைத்துச் செல்வர் .மணமகள் மாப்பிள்ளையின் ச்கோதரிக்கு கைப்பிடிச் சுருள் கொடுத்துக் கட்டை அவிழ்க்கச் செய்ய வேண்டும் .பாலும் பழமும் மணமக்களுக்கு கொடுக்க வேண்டும் .
குறித்த நேரத்தில் மாப்பிள்ளைக்குப் பெண் சட்டரசம் பரிமாற வேண்டும் . மாப்பிள்ளையின் சகோதரிக்கு சட்டரசச் சுருள் தேங்காய் , பழங்கள் , வெற்றிலை ,பாக்குடன் கொடுக்கவும் .பின் மணமக்களை மனையினுள் அழைத்துச் செல்வர் .

No comments:

Post a Comment