Friday, April 8, 2011

திருமண சடங்குகள் -11

திருமணத்திற்கு மறுநாள் காலை நிகழ்ச்சி : - அதிகாலையில் மணப்பெண் நீராடி பொங்கல் இட்டுத் தீப பூசை செய்து காகத்திற்கு சாதம் வைக்க வேண்டும் .
மணவறையில் மாப்பிள்ளை விளக்கின் அருகிலும் மாப்பிள்ளைக்கு இடது புறம் பெண்ணும் கிழக்கு முகமாக அமர , பெரியவர் ஒருவர் தட்டிலுள்ள புழுங்கலரிசியை மாப்பிள்ளை கையால் இருமுறை எடுத்துப் போடச் செய்து , மூன்றாம்முறை எடுத்த அரிசியை கையில் வைத்துக் கொண்டு அரிசியின் மேல் ஒரு வாழைக்காயை வத்து , முதல் நாள் கட்டிய காப்பினை கத்திரியால் அறுக்க வேண்டும் . இவ்வாறே பெண்ணுக்கும் செய்து பெண் கையில் கட்டியுள்ள காப்பினை அறுக்க வேண்டும் .

பிள்ளை மாத்து : - ஒரு தாம்பாளத்தில் பட்டுத் துணியை மடித்து விரித்து அ தன் மேல் பிள்ளையை ( பித்தளை அல்லது வெள்ளி )வைத்து நகை அணிந்து ,பெண் மாப்பிள்ளையிடமும் மாப்பிள்ளை பெண்ணிடமும் மூன்று முறை கொடுத்து வாங்க வேண்டும் .

மாப்பிள்ளையும் பெண்ணும் மூன்று முறை மாலை மாற்றிக் கொள்ள வேண்டும் .

மாப்பிள்ளையின் சகோதரி மணவறையில் ஏறி ஏற்றி இறக்க வேண்டும் .ஒரு சகோதரி மணமக்கள் பின் நின்று கொள்ள வேண்டும் .சந்தணகும்பா , குங்குமம் இருகைகளிலும் வைத்துக் கொண்டு ஏற்றி இறக்க வேண்டும் . இதே போல் பன்னீர் செம்பும் நிறை நாழியும், பின் தேங்காயும் விளக்கையும் தொட்டுக் கொண்டு ஏற்றி இறக்க வேண்டும் . அடை பொரியை மணமக்களை மூன்றுமுறை சுற்றி கிழக்கு , தெற்கு , மேற்கு , வடக்கு ஆகிய நான்கு திசைகளிலும் போட வேண்டும் . அதன்பின் பெரியவர்கள் திறுனீறு பூசி ஆசீர்வதம் செய்ய வேண்டும் .பிள்ளை மாற்றுச் சுருள் கொடுக்க வேண்டும் .ஏழாம் நீர்ச் சுருள் கொடுக்க வேண்டும் .பின் ஆரத்தி எடுக்க வேண்டும் .

மணமக்கள் மணவறையை மூன்று முறை வல்ம் வந்தபின் . மஞ்சள் . சுண்ணாம்பு ,வெற்றிலை கலந்த நீர்க்கொப்பரையில் , ஒருவர் ஒரு மோதிரத்தையும் , மடக்குக் கத்தியையும் போட்டு மணமக்களை எடுக்கச் செய்ய வேண்டும் .பின் மணமக்களை மனையினுள் அழைத்துச் சென்று ,பாலும் ப்ழமும் கொடுக்க வேண்டும் .

மாப்பிள்ளைஉடன் பிறந்த சகோதரிகளுக்கு பலகாரங்களும் , சுருளும் வழங்கிய பின் பலகாரப்பந்தி நடத்த வேண்டும் . மதிய உணவிற்குப் பின் , மாலைகள் ,முளைப்பாலிகைகள் ஆகியவற்றை ஒரு தாம்பாளத்தில் வைத்து அருகிலுள்ள நீர் நிலைகளில் ( வாய்க்கால் , ஆறு , தெப்பக்குளம் ) முளைப்பாலிகைகளுக்குப் பூசைசெய்து விட வேண்டும் . வந்துள்ள மகளிருக்குச் சந்தனம் , குங்குமம் , பூ ஆகியன கொடுக்க வேண்டும் .

அன்று மாலை மணமக்கள் பெற்றோர்களுடன் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள திருக்கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்து வர வேண்டும் .

மறு வீடு , மனை புகுதல் , தாலி பெருக்குதல் , இரண்டாம் மறுவீடு : - முகூர்த்தப் பட்டோலையில் குறித்துள்ள நேரத்தில் மணமக்கள் மறுவீடு செல்ல வேண்டும் .மாப்பிள்ளையின் சகோதரி தம்பதியரை அழைத்துச் செல்ல வேண்டும் .மாப்பிள்ளை வீட்டில் புது மணதம்பதிகளுக்கு வீட்டு வாசலில் ஆரத்தி எடுத்து மறுவீடு புக வேண்டும் .வீட்டில் திருவிளக்கு முன்பு தம்பதியரை அமர்த்தி பாலும் பழமும் கொடுக்க வேண்டும். பின் மணப்பெண்ணை சமையல் அறைக்கு அழைத்துச் சென்று மணப்பெண் உப்பு பாணையை தொட வேண்டும் .

தாலி பெருக்கம் ; - ஒரு நல்ல நாளில் நல்ல நேரம் பார்த்து பெண்ணை திருவிள்க்கின்முன் அமர்த்தி , ம்ஞ்சள் நூலில் கோர்த்து இருக்கும் திருமாங்கல்யத்தை மாப்பிள்ளைவீட்டார் அணிவித்த தாலிசங்கிலியில் தாலியை மாற்றி கோர்க்க வேண்டும் . இந்த சடங்கை முதிர்ந்த சுமங்கலி பெண் செய்து கொடுப்பது உத்தமம் . தாலி பெருக்கம் செய்யும் பொழுது மாப்பிள்ளை முன் இருக்கக்கூடாது .

ஒரு நல்ல நாள் நல்ல நேரம் பார்த்து தம்பதியர் மாப்பிள்ளை வீட்டில் இருந்து பெண்வீட்டிற்கு செல்ல வேண்டும் . பெண்வீட்டில் மாப்பிள்ளைக்கு விருந்து கொடுத்து சுருளும் கொடுக்க வேண்டும் .

மாப்பிள்ளை அழைப்பு முதல் ஒரு வருடம் முடியும் வரை கொடுக்க்க வேண்டிய சுருள் விபரங்கள் ; -

சுருள் விபரம் ******தொகை*****பெறவேண்டியவர் **கொடுக்க வேண்டிய சமயம்

மாப்பிள்ளை
அழைப்பு*********தகுதிக்கு ஏற்ப***மாப்பிள்ளை **மாப்பிள்ளை அழைப்பின் போது

திரு நாண்******ரூ 51/= தகுதிக்கு ***மாப்பிள்ளையின் *****மணவறையில்
பூட்டு***********ஏற்ப ****************சாகோதரி

கைப்பிடி *****தகுதிக்கு ஏற்ப*****மாப்பிள்ளை சகோதரிஅந்த நிகழ்ச்சியின் போது

சட்டரசம் ***தகுதிக்குஏற்ப***மாப்பிள்ளை சகோதரி**அந்த நிகழ்ச்சியின்போது

விநாயகச் சுருள் கணிசமான தொகை ***மாப்பிள்ளை***திருமண நாள் இரவு
**********************************************************ஒலிசை வைக்கும் போது

ஆனந்த சுருள்**தகுதிக்கு ஏற்ப*மாப்பிள்ளையின் சகோதரி**மறு நாள் அதிகாலை

பலகாரச்சுருள் ===சிறியதொகை +இனிப்பு,காரப்பலகாரங்களுடன் மாப்பிள்ளையின் சகோதரிக்கு கொடுக்கவேண்டும் ==மாப்பிள்ளை சகோதரி

பிள்ளை மாற்றுச் சுருள் ==சிறிய தொகை == மாப்பிள்ளையின் சகோதரி

ஏழாம் நீர்ச்சடங்கு == சிறிய தொகை == மாப்பிள்ளையின் சகோதரி

மறுவீடு ===கணிசமான தொகை / பெண்வீட்டார் சர்க்கரைபொங்கல் கொண்டுபோகவேண்டும் == மாப்பிள்ளை க்கு = மறுவீடு மனைபுகும் சமயம்.

நல்லமாதம் பழம் போட ==தேவையான பணம் வேண்டும் ==மாப்பிள்ளையின் தந்தையிடம் ==மறுவீடு சமயம் .

இரண்டாம் மறுவீடு ==கணிசமான தொகை (மறுவீட்டிற்கு கொடுத்ததைவிட குறைவாக )== மாப்பிள்ளையிடம் == இரண்டாம் மறுவீடு வந்த சமயம் .

சித்திரைச் சுருள் == சிறிய தொகை ==மாப்பிள்ளையிடம் == சித்திரை மாதம் பிறக்கும் முன் பங்குனியில் .

ஆடிச்சுருள் ==சிறிய தொகை == மாப்பிள்ளையிடம் ==ஆனி மாத கடைசியில் .

புரட்டாசி == சிறிய தொகை == மாப்பிள்ளையிடம் == நவராத்திரிக்கு முன்னதாக .

தீபாவளி ==மணமக்களுக்கு புத்தாடையுடன் கணிசமான தொகையும் ==மாப்பிள்ளையிடம் == தீபாவளிக்கு முன்பாக .

கார்த்திகை ==பொரி,வெல்லம்,கர்த்திகை விளக்கு புதுசேலையுடன் சிறிய தொகை ==மாப்பிள்ளையிடம் == திருக்கார்த்திகைக்கு முன்பாக .

தைப்பொங்கல் == வெங்கலப்பானை,சருவச்சட்டி,அகப்பை,குத்துவிளக்கு,மணமக்களுக்கு புத்தாடை, பச்சரிசி,வெல்லம்.கரும்பு,காய்கறிகளுடன் சுருள்==மாப்பிள்ளையிடம்== தைப்பொங்களுக்கு முன்பாக .

மாசிச்சுருள் == சிறிய தொகை == மாப்பிள்ளயிடம் == சிவராத்திரிக்கு முன்பாக .

தீபாவளி . பொங்கல் சுருள் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு கொடுப்பது மரபு .
சுருள் பெறும் பொழுது பெற்றோரின் அனுமதியைப்பெற்று மணமகன் சுருளை ஏற்றுக் கொள்ள வேண்டும் .

No comments:

Post a Comment