Monday, April 4, 2011

திருமண சடங்குகள் - 9

நலுங்கு நிகழ்ச்சி : - மாலையில் மாப்பிள்ளை கிழக்கு முகமாகவும் , பெண் மேற்கு முகமாகவும் அமர்ந்து , தேங்காய் உருட்டலும் ,பூப்பந்து எறிதலும் , பல்லாங்குழி ஆடலும் செய்வர் . அதன் பி பெண் எழுந்து மாப்பிள்ளைக்கு பன்னீர் தெளித்து , வலது கால் பாதத்தில் சந்தனம் பூசிக் குங்குமம் இடல் வேண்டும் .

அடுத்து மாப்பிள்ளை உட்கார்ந்தபடியே பெண் குனிந்து கொடுக்க அவளுக்குப் பன்னீர் தெளித்து , வலது கையின் பின்புறம் சந்தனம் பூசிக் குங்குமமும் இட வேண்டும் .பின் சுட்ட அப்பளங்கள் 12 தயாராக வைத்துக் கொண்டு , பெண் எழுந்து நின்று , 2 அப்பளங்களை மாப்பிள்ளையின் தலையைச் சுற்றி தட்ட வேண்டும் .இதே போல் மணமகள் 3 முறை செய்ய வேண்டும் . அவ்வாறே மாப்பிள்ளை கீழே அமர்ந்து கொண்டு பெண் குனிந்து கொடுக்க அவள்தலையைச்சுற்றி இரண்டிரண்டாகா அப்பளங்களைத் தட்ட வேண்டும் .பிறகு ஆரத்தி எடுத்து , மணமக்களை மனைக்குள் அழைதுதுச் செல்ல வேண்டும் .

No comments:

Post a Comment