Saturday, April 2, 2011

திருமண சடங்குகள் - 7

கன்னி ஊஞ்சல்

கன்னி ஊஞ்சல் பாட்டுப் படும் வகைக்காக ஒதுவார் , நாதஸ்வர வித்துவான் இருவருக்கும் தேங்காய் , பழங்கள் , வெற்றிலை ,பாக்கு ,இவற்றுடன் தட்சணை (பணமும் ) கொடுத்துப் பாடச் செய்ய வேண்டும் .

கன்னி ஊஞ்சல் பாட்டு

சீரார் பவளங்கால் முத்த்ம் கயிறாக
ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
நாராயணன் அறியா நாள்மலர்த்தாள் நாயடியேற்கு
ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை
ஆரா அமுதின் அருள்தாள் இணைபாடிப்
போரார்வேல் கண்மடவீர் பொன்னுஞ்சல் ஆடாமோ .


மூன்றுஅங்கு இலங்கு நயனத்தான் மூவாத
வான்தங்கு தேவர்களும் காணா மலரடிகள்
தேன்தங்கித் தித்தித்து அமுதூறித் தாந்தெளிந்தாங்கு
ஊந்தங்கி நின்று உருக்கும் உத்தர கோசமங்கைக்
கோந்தங்கு இடைமருது பாடிக் குல்ம்ஞ்ஞை
போன்று அங்கு அன நடையீர் ! பொன்ணூஞ்சல் ஆடாமோ .

தெங்குலவு சோலைத் திருவுத்தர கோசமங்கை
தங்குலவு சோதித் தனி உருவம் வந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட்டு எந்தரமும் ஆட்கொள்வான்
பங்குலவு கோதையும் தானும் பணிகொண்ட
கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்
பொங்குலவு பூண்முலையீர் ! பொன்ணூஞ்சல் ஆடாமோ .

மேலே கண்ட மூன்று பாடல்களும் பாடியபின் , மணமகள் வலமாக வந்து
மணமகனுக்கு இரு மாலைகள் சூட்டி , மணமகன் வலக்கை மோதிர விரலில்
மோதிரம் போட வேண்டும் .(இந்த இடத்தில் மணமகள் மட்டுமே மணமகனுக்கு மாலை போடவேண்டும் . மணமகன் மணமகளுக்கு மாலை போடக்கூடாது . )பின்
மணமகன் , மணமகளுக்கு மோதிரம் அணிய வேண்டும் .அதன்பின் மணமக்கள்
மணவறைக்கு வரவும் , மணமகள் மணமகனுக்கு வலப்புறம் மணவறையில்
அமர்தல் வேண்டும் .

கன்னிகாதானம் -( தாரை வார்த்து கொடுக்கும் சடங்கு )
மணமகள் வலது கையின் அடியில் மணமகன் வலதுகையையும் , அவற்றிற்குக் கீழ் மணமகன் த்ந்தையார் , தாயார் கைகளும் இருக்கவேண்டும் .
மணமகள் கையில் வெற்றிலை ,பாக்கு , பழங்கள் ,தேங்காய் வைத்து , மணமள் தந்தையாரும் தாயாருமாகப் பால் ஊற்றி கன்னிகாதானம் செய்வது மரபு .

No comments:

Post a Comment