Thursday, March 31, 2011

திருமண சடங்குகள் -5

நிச்சயதார்த்த சடங்கு : -

ஒரு தாம்பாளத்தில் நிச்சயதார்த்தத்துக்குறிய பொருட்களை வைத்து , பெண்ணை , விளக்கிற்கு வடபுறம் கிழக்கு முகமாக அமரச்செய்து தீப பூசை செய்தல் வேண்டும். பின் பெண்ணிற்கு மாப்பிள்ளையின் சகோதரி பன்னீர் ,சந்தனம் , குங்குமம் அளித்தி பெண் கையில் மேற்படி தாம்பாளத்தைக் கொடுக்கவேண்டும் .பிறகு சேலையைக் கட்டிவரச் செய்து மீண்டும் கிழக்கு முகமாக அமர்த்தி , விரவிய பாக்கு , மஞ்சளை இருமுறை கையால் எடுத்துப் போட்டு , மூன்றாம் முறை கையில் வைத்துக் கொள்ள அத்ன் மேல் வெற்றிலை , பாக்கு , 2 பழம் மஞ்சள் தடவிய தேங்காயை வைத்து மாப்பிள்ளை வீட்டாருக்கு இருபங்கும் , அவ்வாறே பெண் வீட்டாருக்கு ஒரு பங்கும் கொடுக்க வேண்டும் .

கலப்பரப்பு : -

மணப்பெண் புத்தாடையும் மாலையும் அணிவித்து கலப்பரப்பிடும் போது , மாப்பிள்ளை வீட்டார் கொடுக்கும் சேலையை களத்தில் ( தரையில் விரித்து ) பரப்பி அதி அமர்ந்து மங்களப் பொருட்களை இருவீட்டாருக்கும் கொடுக்கவேண்டும் . நிச்சயார்த்த சடங்கின் போது மாப்பிள்ளை வீட்டாருக்கு 2 பங்கு கொடுத்திருந்தால் , இப்பொழுது மாப்பிள்ளை வீட்டாருக்கு ஒரு பங்கும் , பெண் வீட்டாருக்கு 2 பங்கும் கொடுக்கவேண்டும் . கலப்பரப்பு சேலை மணமகளின் தங்கைக்கு கொடுக்கவேண்டும் .

மணமேடையில் வழிபாடுகள் : -

மணவறை இடத்தைப் பெருக்கி , பசுவின் சாணத்தால் மெழுகி , அத் உல்ர்ந்த பின் மாக்கோலம் போடவேண்டும் ..
ஆசான் இருக்கைக்கு மேல்புறம் தென்வடலாக ஒரு வாழையிலையைக் கிழக்கு நோக்கி விரித்து, அத்ன் மேல் தென்கோடியில் மஞ்சளால் ஆன பிள்ளையார் , நிறை நாழி , நெல் , திருவிளக்கு இவைகளை கிலக்குமுகமாக வைக்க வேண்டும் . அவற்றிற்குத் திருனீரு , சந்தனம் , க்ங்குமம் , பூச்சரம் சாத்தவேண்டும் .

வழிபாடுகள் விபரம் : - 1 ) வினாயகர் பூசை , 2 ) திருவிளக்கு பூசை , 3 ) புனித நீர்க்கலசபூசை , 4 )பஞ்ச கவ்விய பூசை , 5 ) சந்திர கும்ப பூசை , 6 ) முளைப்பாலிகை பூசை , 7 ) சிவகும்பபூசை, சக்தி பூசை , 8 ) நவக்கிரக பூசை , 9 ) திருமாங்கல்ய பூசை , 10 ) அழல் ஒம்பல் ( தீ வளர்த்தல் ) , 11 ) அழலில் சுள்ளியிடல் (ஒமம் )
முன்னதாக கும்பங்களில் ஆவாகணம் செய்யப்பட்ட தேவதைகட்கும் , உமா மகேஸ்வரர்கட்கும் , நவக்கிரகங்கட்கும்

No comments:

Post a Comment