Tuesday, March 22, 2011

திருமண சடங்குகள் - 2

திருமணம் உறுதி செய்து கொண்டபின்பு கூடிய விரைவில் இரு வீட்டாரும் தத்தம் உடன்பிறந்தோர் , மைத்துனர் , மாப்பிள்ளைகள் , அவர்கள் சம்பந்திகள் போன்ற நெருங்கிய உறவினர்களுக்கும் , மிகவும் வேண்டியவர்கட்க்கும் முன் அறிவிப்புச் செய்வது வழக்கம்.
அறிவிப்பு கடிதம் மாதிரி

அன்புடையீர் ,
என்னுடைய மகள் / மகன் ----------செல்வி / செல்வன் திரு-----அவர்கள்
மகன் / மகள் ---------செல்வன் / செல்வி------க்கு திருமணம் செய்ய --------தேதி உறுதி செய்யப்பட்டது. திருமணம்---------ஊர்--------இடத்தில்----மீ ( மாதம் )---ஆம்
நாள் --------( ஆங்கில்தேதி ) காலை மணி ---க்கு மேல் ----க்குள் நடைபெற இருக்கிறது. அச்சிட்ட அழைப்பிதழ் பின்னர் அனுப்பி வைகிகின்றேன் . முன் அறிவிப்பாக இக் கடிதம் அனுப்பியுள்ளேன்.
ஆதலின் தாங்கள் முன்னதாகக் குடும்பத்துடன் வந்து திருமணத்தை சிறப்பித்து மணமக்களை வாழ்த்துமாறு வேண்டிக் கொள்கிறேன் .

தங்களன்புள்ள,
( ஒப்பம் ) -------------
நல்ல ஒரு நாள் பார்த்து திருமண அழைப்பிதழ் அச்சுக்கு கொடுப்பது வழக்கம்.

திருமண் அழைப்பிதழ் மாதிரி
சிவமயம்

அன்புடையீர் ,

எல்லாம் வல்ல இறைவன் திருவருளால் நிகழும் மங்கள்கரமான கொல்லம் ஆண்டு--------ம்ளு--ஆண்டு-------ம் நாள்--------கிழமை----திதியும்-----
நட்சத்திரமும் கூடிய சுபதினத்தில்-------மணிக்கு மேல் ----மணிக்குள்------லக்கணத்தில்


மணமகன் பெயர் --------------------மணமகள் பெயர்
த/பெ-------------------------------------------த /பெ
ஆகியேர்ர்கள் திருமணம் பெரியேர்ர்களால் நிச்சயித்த வண்ணம் ( நடத்தும் இடம் )------------------- நடைபெறும் . திருமணத்திற்கும் மற்றும் அதைச் சார்ந்த சகல் வைபவங்களுக்கும் தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து மணமக்களை ஆசிர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ( ம் ) .

அவ்வண்ணமே விரும்பும்-----------------------------இங்ஙனம் . ,



தங்கள் நல்வரவை விரும்பும் உற்றார் உறவினர்


கடவுள் வழிபாடு

குலதெய்வம் , இஸ்ட தெய்வங்கட்குக் கானிக்கை ;-
திருமணம் உறுதி செய்யப்பட்ட பின் , இதர திருமண காரியங்கள் தொடங்கு முன் , இறையருள் வேண்டித் தத்தம் குல தெய்வம் இஸ்ட தெய்வங்கட்கு விருப்பம் போல் தொகை காணிக்கையாகப் போட ஒதுக்கி வைப்பது அல்லது உண்டியலில் சேர்ப்பது தெய்வ பக்தியுள்ல குடும்பங்களின் மரபு .

இறைவனுக்கு முதன்முதல் திருமண அழைப்பிதழ் சமர்ப்பணம் :-
திருமண அழைப்பிதழ் அச்சாகி வந்ததும் , அவற்றை மக்களுக்கு அனுப்பும் முன் , இறைவன் பாதத்தில் அழைப்பிதழ் ஒன்றை தேங்காய் , பழங்கள் ,வெற்றிலை , பாக்கு , பூ ,இவற்றுடன் வைத்து , அர்ச்சனை வழிபாடு செய்தல் மரபு.

அழைப்பிதழ் கொடுப்பது, ம்ஞ்சள் முதலிய மங்கலப்பொருட்கள் வாங்குதல்:-

முதல் அழைப்பிதழ் கோவிலுக்கு சமர்ப்பித்தபின்பு அழைப்பிதழ்களை மற்றவர்களுக்கும் , உறவினர்களுக்கும் கொடுக்கலாம். வீட்டு மாப்பிள்ளைகளுக்கு ம்ஞ்சள் தடவிய தெங்காய் , பழங்கள் , வெற்றிலை , பாக்கு ,விரலி ம்ஞ்சள் ஆகியவற்றுடன் அழைப்புச் சுருள் கொடுப்பது வழக்கம் . பின் மற்றவர்களை ஆணும் பெண்ணும் சேர்ந்து சென்று திருமணத்திற்கு அழைப்பது வழக்கம் .
முகூர்தபட்டோலையில் குறிக்கப்பட்ட நாளில் நல்வேளையில் விரலி ம்ஞ்சள் ,குங்குமுகம்,சந்தனம்,வெற்றிலை,பாக்கு,பழம்,தேங்காய் ,மல்லிகைசரம்,கல்கண் டு ஆகியவைகளை முதலில் வாங்கிய பின் பிற பொருட்களை வாங்குவார்கள்.

No comments:

Post a Comment