Monday, March 21, 2011

திருமண சடங்குகள்

திருமணம் உறுதி செய்து தாம்பூலம் மாற்றிக் கொள்ளும் முறை : -
தாம்பூலம் மாற்றும் விசேடத்திற்கு அது நிகழும் இடத்தில் வ்ழிபாட்டுப் பொருட்களை கிழக்கு முகமாக வைத்து, விருந்தினர்கள் அமர விரிப்புகளும் விரித்து தயாராக இருக்கவேண்டும். இரு வீட்டாரின் தாம்பூல்த் தட்டுக்களையும் வ்ழிபடு தெய்வ உருவங்கள் முன் வைக்கவேண்டும்.

தாம்பூலம் மாற்றி கொள்வதற்கு வேண்டிய பொருட்கள் :-

வழிபாட்டிற்கு - சுவாமி படம், குத்து விளக்கு ( ஆரத்துடன் ),மஞ்சள் பிள்ளையார் , நிறை நாழி ,வாழை இலை ,உடைத்த தேங்காய்,பழம் - 4 அல்லது 6 ,தாம்பூலம் (வெற்றிலை பாக்கு ),ஊதுவத்தி,திரு நீறு,சாம்பிராணி,தீபக்கால், சூடன்,சூடன் தட்டு,சந்தனம்,குங்குமுகம்,உதிரி பூக்கள் (விடு பூக்கள் ),பன்னீர்,பன்னீர்செம்பு,சந்தனக்கும்பா

பெண்வீட்டார் , மாப்பிள்ளை வீட்டார் தாம்பூலம் மாற்றிக் கொள்ளத் தனித்தனி தாம்பாளத்தில் வைக்கவேண்டியவை : -

மஞ்சள் பூசிய தேங்காய் 3, பழம் சீப்பு 3 ,ஆரஞ்சு 3 ,ஆப்பிள் 3,மாம்ப்ழம் 3,திராட்சை1/2 கிலோ,சீனாக்கல்கண்டு,விரலிமஞ்சள் 100 கிராம்,வெற்றிலை கட்டு 1,பாக்கு 100 கிராம்,குங்குமச்செப்பு ( மரத்தினால் ஆனது) 1,சந்தனம்,பூமாலை 2,தலைக்கு பூத்துண்டு 1, தலைக்கு பூச்சரப் ப்ந்து.

முகூர்த்தபட்டோலை எழுதுவதற்கு வெள்ளைத்தாள் 2 , சிகப்பு மை பேனா
குறித்த நல்வேளையில் திருவிளக்கு ஏற்றி ஒரு சுமங்கலிப் பொண்ணைக் கொண்டு தெய்வங்களுக்லு தூப தீபம் காட்டச் செய்து வ்ழிபட்டு பின் சிகப்பு மையினால் முகூர்த்தபட்டோலை இரு படிவங்கள் எடுக்கச்செய்து அவற்றில் மஞ்சள் பூசி இரு தாம்பாளங்களிலும் வைக்கவேண்டும்

தாம்பூலம் கைமாறும் முன்பு , மணமகன் தந்தையாரும் , மணமகள் தந்தையாரும் உறுதி செய்யும் நாள் ஞாயிறு,திங்கள்,வெள்ளி கிழமைகள் எனில் தெற்கு வடக்காகவும், புதன் ,வியாழன் எனில் கிழக்கு மேற்காகவும் அமர்ந்து கொள்ளவேண்டும். அதன் பின் மணமகன் தந்தையாருக்கு மணமகள் தந்தையார் மாலை 2 அணிவித்து,பன்னிர் தெளித்து சந்தனம், குங்குமுகம் கொடுத்து தாம்பூலத்தட்டை எடுத்து கொடுக்கவேண்டும் . அவ்வாறே மணமகன் தந்தையார் மணமகள் தந்தையாருக்குச் சிறப்புச்செய்த் தாம்பூலத்தட்டை எடுத்து கொடுக்கவேண்டும் .பின்னர் முகூர்த்தபட்டோலையை சபை அறிய வாசிக்கவேண்டும்.
அடுத்து மணமகளை அழைத்து வந்து திருவிள்க்கிற்கு வடபுறம் கிழக்குமுகமாக உட்கார வைத்து மாலை அனிவித்து எல்லோரும் திரு நீறு பூசி ஆசீர்வாதம் செய்யவேண்டும் . பிறகு விருந்தினர்களுக்கு பன்னிர், சந்தனம் முதலியன்கொடுத்து சிறப்பு செய்து விருந்தோம்பல் செய்ய வேண்டும் .

முகூர்த்தபட்டோலை மாதிரி படிவம்

மாப்பிள்ளை பெயர் :
மாப்பிள்ளையின் தந்தை பெயர் :
மாப்பிள்ளையின் ஊர் :

பெண் பெயர் :
பெண்ணின் தந்தை பெயர் :
பெண்ணின் ஊர் :
இருபேர்களுக்கும் பொருந்திய முகூர்த்தபட்டோலை

எல்லாம் வல்ல இறைவனின் திருவருளை முன்னிட்டு நிகழும் மங்களகரமான----------ம்ளு-------வருடம்----மாதம்-----தேதி--------கிழமையும்---- நட்சத்திரமும் கூடிய சுபதினத்தில் அன்று மணி---க்கு மேல்-----க்குள்-----லக்னத்தில் திருமாங்கல்யதாரணம் செய்ய உத்தமம் .
சட்டரசம்

முகூர்த்தம் முடிந்ததும் ----மணிக்கு மேல்-----மணிக்குள் சட்டரசம் செய்ய உத்தமம்.
நிச்சய தம்பூலம்

----ம்ளு-----வருசம்------மாதம்----ம்தேதிக்கு (--------) கிழமை------ நட்சத்திரத்தில் ----மணிக்குமேல்----மணிக்குள் நிச்சயதாம்பூலம் செய்ய உத்தமம்.

நாள் கால் நடல் பொன் உருக்குதல்

----ம்ளு-------வருசம்----மாதம்----ம்தேதிக்கு கிழமை-------மணிக்குமேல்---மணிக்க்ள் திருமாங்கல்யதாரத்திற்கு பொன் உருக்கவும் ,கொட்டகை கால் நடவும் ,மணவறை , ஆக்குப் பிறை நாள் செய்யவும், ம்ஞ்சள் வாங்கவும் , கோவிலுக்கு பாக்கு வைக்கவும் மற்றும் சுபகாரியங்கள் செய்யவும் உத்தமம் .

மாப்பிள்ளை அழைப்பு அல்லது பெண் அழைப்பு

----ம்ளு-----வருசம்------மாதம்---ம்தேதிக்கு ( --------) கிழமை--------- நச்சத்திரத்தில்------மணிக்குமேல்-----மணிக்குள் அழைத்துவர உத்தமம் .

மறுவீடு

----ம்ளு-----வருசம்-------மாதம்---ம்தேதிக்கு (------- ) கிழமை------- நட்சத்திரத்தில் ----மணிக்குமேல்------மணிக்குள் அழைத்துவர உத்தமம் .

சாந்தி முகூர்த்தம்

------ம்ளு-------வருசம்------மாதம்----ம்தேதிக்கு (--------) கிழமை இரவு -----மணிக்குமேல் சாந்தி முகூர்த்தம் .

1 comment: