Thursday, March 24, 2011

திருமண சடங்குகள் -4

மாப்பிள்ளை அழைப்பு : -

மாப்பிள்ளை வெளியூரில் இருப்பினும் , உள்ளுரில் இருப்பினும் அவரை , அவர் இல்லத்தில் இருந்து திருமணம் நிகழும் ஊரில் திருமண நாள்வரை அவ்ர் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இடத்திற்கு அல்லது திருமண வீட்டிற்கு அழைத்து வர பெண்வீட்டிலிருந்து பெண்ணும் ஆணும் போவது வழக்கம் .மாப்பிள்ளையை அழைத்துவரப் பிரயாணத்திற்குரிய ஏற்பாடுகளை முன்பாகவே செய்து கொண்டு , மாப்பிள்ளை அழைப்புச்சுருள் , தாம்பூலம் முதலியவுடன் இவற்றிற்குரிய பணத்துடனும் , ஒரு பாத்திரத்தில் லட்டு அல்லது மைசூர்பாகு அல்லது பாதூஸா போன்ற இனிப்பு பண்டங்களில் ஒன்றுடன் செல்லவேண்டும் .

மாப்பிள்ளை அழைப்பிற்கு பெண்வீட்டார் கொண்டு செல்ல வேண்டியவை :-

விளக்கு ஆரம் 1 , மஞ்சள் பூசிய தேங்காய் 3 , விளக்கிற்கு ட்ய்ஹேங்காய் 1 ,பழங்கள் , வெற்றிலை , பாக்கு ,விரலி மஞ்சள் 100 கிராம் ,பாக்கு 100 கிராம் ,மாப்பிள்ளைக்கு ஆரம் 2 , இனிப்புப் பொருள் , சரப்பந்து , விடலைத் தேங்காய்கள் , சுருள் பணம் .

பெண் அழைப்பு ஆயின் , நிச்சய தாம்பூலம் செய்து அழைக்க மாப்பிள்ளை வீட்டார் கொண்டு செல்லவேண்டிய பொருட்கள் ; _

விளக்கு ஆரம் 1 , மஞ்சள் பூசிய தேங்காய் 3 ,விளக்கிற்கு தேங்காய் 1 ,வெற்றிலை , பாக்கு , பழங்கள் ,சூடன் , பத்தி , சந்தணம் , குங்குமம் ,.
வெற்றிலைகட்டு ,பழம் 1 சீப்பூ ,விரலி மஞ்சள் 100 கிராம் , பாக்கு 100 கிராம் ,
பெண்ணிற்குஆரம் 2, தலைக்குப் பூத்துண்டு, பூச்சரப்பந்து.
மரகுங்குமச் செப்பு 2 ( நிச்சய தாம்பூலத்திற்கு 1 , திருமாங்கல்யம் வைக்க 1 )
பெண்ணீற்கு சேலை , சட்டை .

மாப்பிள்ளை வீட்டார் பெண்ணிற்கும் , அவ்ள் தம்பிக்கும் செய்ய வேண்டியவை : -
திருமாங்கல்யம் , தங்க மோதிரம் , தாலிச்செயின் .
தங்க மோதிரம் , புத்தாடை ( பெண்ணின் தப்பிக்கு )
நிச்சயார்த்த சேலை , முகூர்த்தச் சேலை , கலப்பரப்பு சேலை .

மாப்பிள்ளை புறப்பட வேண்டிய நல்ல வேளையில் , ஒரு தாம்பாளத்தில் தேங்காய் 3 ( மஞ்சள் பூசியது ), வாழைப்பழம் 3 சீப்பு ,வெற்றிலை ,பாக்கு , விரலி மஞ்சள் , சந்தணம், பன்னிர் ,பூமாலை 2 ,பூச்சரப்பந்து 1 , இவற்ருடன் மாப்பிள்ளை அழைப்புச் சுருளையும் வைத்து , மாப்பிள்ளைக்குப் பன்னிர் தெளித்து , சந்தனம் குங்குமம் வழங்கி , இரு பூமாளைகளையும் அணிவித்து , பெண்களுக்குப் பூச்சரம் கொடுத்து , மாப்பிள்ளையிடம் தாம்பாலத்தை எடுத்துக் கொடுக்க வேண்டும் . பின் பெரியவர்களிடம் திருனீறு பூசுவித்து மாப்பிள்ளையை அழைத்து வருவது மரபு .
முன்னதாகவே மாப்பிள்ளை அழைத்து வரப்ப்ட்டு வேறிடத்தில் தங்க வைத்திருந்தால் , திருமணத்தன்று காலை நல்வேளையில் திருமணம் நடைபெறும் இடத்திற்கு அழைத்து வரும் பொழுது , இரு மாலைகள் அணிவித்தும் , தாம்பூலம் கொடுத்தும் மரியாதை செய்து மேளதாளத்துடன் அழைத்து வர வேண்டும் . அப்போது மீண்டும் அழைபுச்சுருள் கொடுக்க வேண்டுவது .

திருமண இல்லத்தில் மாப்பிள்ளைக்கு வரவேற்பு : -

மாப்பிளை தங்குவதற்கு திருமண அறையில் முன்கூட்டியே கிழக்கு நோக்கி ஒரு வாழையிலையில் முறையே மஞ்சள் பிள்ளையார் , நிறை நாழி , ஆரம் சாத்திய திருவிளக்கு , அவற்ரின் முன் உடைத்த தேங்காய், பழங்கள் ,வெற்றிலை , பாக்கு ,சந்தனம் , பன்னீர் , பத்தி , சூடன் , பூச்சரம் ,இவற்ரை வைத்திருக்கவேண்டும் .அடுத்து ஒரு நாற்காலி இட்டுத் தயாராக் இருக்கவேண்டும் .மாப்பிள்ளை திருமண இல்லத்திற்கு வந்ததும் ,வாசலில் மாப்பிள்ளையை கிழக்கு முகமாக் நிற்கவைத்து , இரு சுமங்கலிப்பெண்கள் , ஆரத்தி எடுக்கவேண்டும் .அத்ன்பின் மாப்பிள்ளையை அவ்ர் தங்கும் அறைக்கு அழைத்துச் சென்று நாற்காலியில் அமர்த்தியதும் , அங்குள்ள பிள்ளையார் , திருவிள்க்கு ஆகியவற்றுக்கு தூபதீபம் காட்டி மாப்பிள்ளைக்கு பெரியோர்கள் திருனீறு பூசிய பின் சிறிது பாலும் பழமும் மாப்பிள்ளைக்கு கொடுக்கவேண்டும் .

No comments:

Post a Comment