Wednesday, March 23, 2011

திருமண சடங்குகள் -3

திருமாங்கல்யத்திற்கு பொன் உருக்கி விடுதல் : -

குறிப்பிட்ட நான்னாளில் மணமகன் வீட்டில் திருமாங்கல்யத்திற்குப் பொன் உருக்கும் நிகழ்ச்சி நடைபெற வேண்டும் . இதற்குறிய தங்கத்தை மணமகனின் சாகோதரிகள் வழங்கவேண்டும்.
திருமாங்கல்யத்திற்கு புதிய பொன் தான் பயன்படுத்த வேண்டும் . ஒரு பொற்கொல்லரைச் சாதனங்களுடன் வரவழைத்து , நல்வேளையில் நாட்கால் நடுவதற்கு கூறியவிதமே வழிபாடு செய்து பொற்கொல்லருக்கு தேங்காய் ,பழங்கள் ,வெற்றிலை , பாக்கு ,ஆகியவற்றுடன் பணம் வைத்து நன்கொடையாக கொடுக்கவேண்டும் . பின் பொன்னை உருக்கச்சொல்லவேண்டும். குறித்த தேதிக்குள் திருமாங்கல்யத்தை ஒப்படைக்குமாறு கவனமாக பார்த்து கொள்ள் வேண்டும் .

முகூர்த்தக்கால் நாட்டல் : -

முகூர்த்தக்கால் குறிப்பிட்ட நாளில் நல்வேலையில் நாட்ட வேண்டும் .

நாட்கால் : - அரசு , மா , பலா , மரத்தின் கம்பு 5 அட் நீளத்தில் செம்மண் , சுண்ணாம்பு பட்டைகள் மாறி மாறி அடித்ததாக இருக்கவேண்டும் .

ம்ஞ்சள் நீரில் நனைத்துக் காயவைத்த புது துணியில் நவதானியம் , பருத்திக்கொட்டை , நாணயம் இவற்றை வைத்து ஒரு கிழியாக மஞ்சள் நூல் கயிற்றால் கட்டி , அத்துடன் மாவிலைக் கொத்து சேர்த்து வைத்து ஒரு மஞ்சள் கயிற்ரால் நாட்காலின் உச்சியில் கட்ட வேண்டும் .கன்னி மூலையில் ( தென்மேற்கு மூலை) குறிப்பிட்ட இடத்தில் குழிதோண்டி அதில் பால் , நவதானியம் , சந்தனம் ,பணம் ( காசுகள் ) போடவேண்டும் .
பின் ஒரு வாழையிலையில் மஞ்சள் பிள்ளையார் , நிறை நாழி , மாவிலையுடன் நிறைகுடம் , திருவிளக்கு ,தேங்காய் , பழங்கள் , தாம்பூலம் ( வெற்றிலை ,பாக்கு ) வைத்து தூபதீபம் கற்பூரம் காட்டி வழிபாடு செய்து , பந்தல்காரருக்கு திருனீறு ,சந்தனம் , தேங்காய் , பழங்கள் , வெற்றிலை , பாக்கு , ஆகியவற்றுடன் பணமும் கொடுத்து நாட்காலை மேற்படி குழியில் நட வேண்டும் .

No comments:

Post a Comment