Sunday, March 20, 2011

ருது தின சடங்கு - பூப்புனித நீராட்டு விழா

பெண்குழந்தை பருவம் அடைந்த நேரத்தையும் , அன்றைய தின நட்சத்திரத்தையும் குறித்து வைக்கவும் . அன்றையதினமே நல்ல நேரம் பார்த்து உறவு முறையில் எல்லோருக்கும் சொல்லி , தகப்பனாரின் சகோதரி குழந்தைக்கு தலைக்கு தண்ணிர் ஊற்றவும். ( முடியும் என்றால் ஆண் குழந்தையை தலைமகனாகப்பெற்றவர்களை கொண்டு தண்ணிர் விடுவது சிறப்பு . தவறும் பட்சத்தில் 3 வது தின்ம் தலைக்கு தண்ணிர் விடவேண்டும் .அதன்பின் பெண்ணுக்கு புத்தாடை, கழுத்துக்கு பூமாலை, புதுபாவாடை , தாவணி உடுத்தவும். குழந்தைக்கு நல்லெண்ணெயும் கீரை விதையும் கொடுக்கவும்.
ஆரோக்கியத்தை கருதி , உளுத்தம் களி , உளுத்தம் பருப்பு சாதம் போன்றவை செய்து கொடுக்கவும். பருவம் அடைந்த பெண்ணை சடங்கு ( ருது மங்கள ஸ்நாணம் ) முடியும் வரை வெளியில் நடமாட விடுவதில்லை. பாதத்தில் ஒரு விரலில் இரும்பு மெட்டி அணிவது மரபு.
ருதுவான 16ம் நாள் பூப்புனித நீராட்டு செய்வது உத்தமம்.தவறும் பட்சத்தில் ருது மங்கள ஸ்நாணம் நடத்திட ஒரு சுபதினத்தை தேர்ந்தெடுத்து செய்யவேண்டும். அன்றைய தினம் ஒரு குருக்களைய்யாவை நியமித்து வீட்டில் கிரக சுத்தி செய்து கும்பம் வைத்து , ஹோமம் வளர்த்த்ய் பூஜைகள் செய்ய வேண்டும்.
சுபவேளையில் பெண்குழந்தைக்கு கும்ப நீரை அபிசேகம் செய்யவேண்டும். பின் தாய் மாமன் கொண்டுவந்த புத்தாடைகளை அணிவித்து , நல்ல பூமாலைகளை அணிவித்து , சீர்வரிசை பொருட்களுடன் விளக்கின் முன் இருத்தி பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெறவேண்டும் .அழைப்பிற்கு இணங்கி வருகை தந்திருக்கும் உறவினர்களையும் , விருந்தினர்களையும் உபசரித்து விருந்து நடத்திட வேண்டும்

No comments:

Post a Comment