Tuesday, April 5, 2011

திருமண சடங்குகள் - 10

எண்ணெய் சடங்கு ; - இரு கிண்ணங்களில் எண்ணெய , சீயக்காய்ப்பொடி , மஞ்சள் பொடி , இவற்றை ஒரு தட்டில் வைத்து மணவறையில் வைக்க வேண்டும் .பின் மணமக்கள் இருவரும் மாலைகள் அணிந்து வந்து பெண் வலப்புறமும் , மாப்பிள்ளை இடப்புறமும் மணவறையில் அமர வேண்டும் .மணமகளின் தம்பி , ஆட்காட்டி விரலால் மாப்பிள்ளை தலையில் மூன்று முறை எண்ணெய் தொட்டு வைக்க வேண்டும் .பின் சீயக்காய்ப்பொடியை மும்முறை தொட்டு வைக்க வேண்டும் .இதே போல் மணமகளுக்கும் எண்ணெய் மூன்று முறையும் , சீயக்காய்ப்பொடி மூன்று முறையும் , ம்ஞ்சள் பொடி மூன்று முறையும் தொட்டு வைக்க வேண்டும் .
மாப்பிள்ளை தன் மைத்துனருக்குத் தங்க மோதிரம் , புத்தாடைகள் , தேங்காய் ,பழங்கள் , வெற்றிலை ,பாக்கு வைத்து கொடுக்க வேண்டும் .அத்ன் பின் மணமகள் ஆட்காட்டி விரலால் மாப்பிள்ளை தலையில் எண்ணெய் மூன்று முறை , சீயக்காய்ப்பொடி மூன்று முறை தொட்டு வைக்க வேண்டும் .அடுத்து மாப்பிள்ளை பெண்ணுக்கு எண்ணெய மூன்றுமுறையும் , சீயக்காய்ப்பொடி மூன்றுமுறையும் ,மஞ்சள் பொடி மூன்றுமுறையும் தொட்டு வைக்க வேண்டும் .
பின்பு மணமக்களை நீராட அழைத்துச் செல்ல வேண்டும் .

நீராடியபின் மாப்பிள்ளையை மட்டும் ஆடைகள் மாற்றி இரு மாலைகள் அணிவித்து , மணவறைக்கு அழைத்து வர வேண்டும் .இதற்கு முன் பெண்ணின் தந்தையார் தமக்கு மூத்த மருமகஙள் இருப்பின் அவர்களுக்கு சுருள் வைத்துக் கொடுக்க வேண்டும் . மருமகனை மணவறையில் உட்கார வைத்து பன்னீர் தெளித்து ,சந்தனம் , குங்குமம் கொடுத்து மஞ்சள் தடவிய தேங்காய் , வெற்றிலை ,பழங்கள் , பாக்கு முதலியனவற்றுடன் சுருள் வைத்து கொடுக்க வேண்டும் .அத்ன் பின்பே மாப்பிள்ளைக்கு விநாயகச்சுருள் வைத்துக் கொடுக்க வேண்டும் .

முன்னதாக மணவறைக்கு முன்பு ஒலிசைச் சாமாகளை அழகுற வைத்துக் கொள்ள வேண்டும் . இப்பொழுது ஒலிசை சாமான்கள் அடுக்கி வைப்பதற்குப் பதில் இன்ன இன்ன சாமான்கள் இருக்கின்றன என எழுதி வாசித்து விடுகின்றனர் .
மணமக்களுக்க்றிய ஒலிசை ஜவுளிகளை மாப்பிள்ளையின் முன் ஒரு தாம்பாளத்தில் வைத்து , மாப்பிள்ளைக்கு பன்னீர் தெளித்து , சந்தனம் , குங்குமம் வழங்கி விநாயகச் சுருளை வைத்து கொடுக்க வேண்டும் .

வி நாயகச்சுருள் வகைச் சாமான் கள் : - விரலி ம்ஞ்சள் , மஞ்சள் பூசிய தேங்காய் 3 ,வெற்றிலை , பாக்கு , ஒரு சீப்பு பழம் , பூ ஆரம் 2 .

பின்பு மாப்பிள்ளையின் சகோதரியானவள் திருமாங்கல்யத்திற்குப் பொன் உருக்கும் போது தங்கம் / பணம் கொடுத்திருந்தால் , அவள் கணவரை மணவறையில் அமர்த்தி, மாப்பிள்ளை அவருக்கு மாலை அணிவித்து ,பன்னீர் தெளித்து , சந்தணம் , குங்குமம் வழங்கி அவர்கள் முன் கொடுத்த தங்கத்தின் விலைப் பணத்துடன் சுருளும் வைத்துக் கொடுக்க வேண்டும் . அதன் பின் மாப்பிள்ளையை உட்காரச் வைத்து சகோதரியின் கணவர் பன்னீர் தெளித்து , சந்தணம் , குங்குமம் வழங்கி மாப்பிள்ளைக்கு சுருள் கொடுக்க வேண்டும் .பின் அனைவருக்கும் தாம்பூலம் கொடுக்க வேண்டும் . பிறகு இரவு உணவு அருந்த வேண்டும் .

சாந்தி முகூர்த்தம் : - மணமக்கள் தங்கும் அறையை நன்கு அலங்கரிக்கவும் . பால் , பழங்கள் , ம்ற்றும் இனிப்பு வகைகளுடன் திருவிளக்கு ஏற்றி வைக்கவும் . மணமகளை , மணமகனின் சகோதரி அழைத்து வருவாள் . மறு நாள் காலையில் அந்த சகோதரிக்கு ஆணந்தச் சுருள் கொடுக்க வேண்டும் .

No comments:

Post a Comment