தாய்மாமனுடன் சடங்கு : -
அ . அம்மையப்பர் :
விண்ணாளும் தேவர்க்கும் மேலான வேதியனை
மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்
தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டானைப்
பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற்
கண்ணார்கழல் காட்டி நாயேனையாட் கொண்ட
அண்ணாமலையானைப் பாடுதுங்காண் அம்மானாய் - மணிவாசகர்
ஆ . காப்பணிதல் :
ஆர்வம் மிக்கெழும் அன்பினால் மலரயன் அனைய
சீர்மறைத் தொழிற் சடங்குசெய் திருந்துநூல் முனிவர்
பார்வழிபட்ட வரும் இரு வினைகளின் பந்தச்
சார் பொழிப்பவர் திருக்கையில் காப்பு நாண் சாத்த . - சேக்கிழார்
இ . முளைபாலிகை தெளித்தல் :
வித்தாம் முளையாகும் வேரேதானாம் வேண்டும் உருவமாம் விரும்பிநின்ற
பத்தாம் அடியார்க்கோர் பாங்கனு மாம் பால்நிறமுமாம் பரஞ்சோதி தானாம்
தொத்தாம் அமரர் கணஞ்சூழ்ந்து போற்றத் தோன்றாது என் உள்ளத்தின் உள்ளெநின்ற
கத்தாம் அடியேற்குக் காணா காட்டும் கண்ணாம் கருகாவூர் எந்தை தானே . - அப்பர்
புத்தாடையளித்தல் :
வேண்டத் தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற்கு அரியோய் நீ
வேண்டியென்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயாது அருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டினல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே . - வாதவூரர்
மணமகனுக்கு செய்தது போல் மணமகளுக்கும் காப்பு கட்டுதல் , முளைபாலிகை தெளித்தல் ஆகியவை முடிந்தபின் மணமகளுக்கு புத்தாடைகள் வழங்குவார்கள் .
அ . அம்மையப்பர் :
விண்ணாளும் தேவர்க்கும் மேலான வேதியனை
மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்
தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டானைப்
பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற்
கண்ணார்கழல் காட்டி நாயேனையாட் கொண்ட
அண்ணாமலையானைப் பாடுதுங்காண் அம்மானாய் - மணிவாசகர்
ஆ . காப்பணிதல் :
ஆர்வம் மிக்கெழும் அன்பினால் மலரயன் அனைய
சீர்மறைத் தொழிற் சடங்குசெய் திருந்துநூல் முனிவர்
பார்வழிபட்ட வரும் இரு வினைகளின் பந்தச்
சார் பொழிப்பவர் திருக்கையில் காப்பு நாண் சாத்த . - சேக்கிழார்
இ . முளைபாலிகை தெளித்தல் :
வித்தாம் முளையாகும் வேரேதானாம் வேண்டும் உருவமாம் விரும்பிநின்ற
பத்தாம் அடியார்க்கோர் பாங்கனு மாம் பால்நிறமுமாம் பரஞ்சோதி தானாம்
தொத்தாம் அமரர் கணஞ்சூழ்ந்து போற்றத் தோன்றாது என் உள்ளத்தின் உள்ளெநின்ற
கத்தாம் அடியேற்குக் காணா காட்டும் கண்ணாம் கருகாவூர் எந்தை தானே . - அப்பர்
புத்தாடையளித்தல் :
வேண்டத் தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற்கு அரியோய் நீ
வேண்டியென்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயாது அருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டினல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே . - வாதவூரர்
மணமகனுக்கு செய்தது போல் மணமகளுக்கும் காப்பு கட்டுதல் , முளைபாலிகை தெளித்தல் ஆகியவை முடிந்தபின் மணமகளுக்கு புத்தாடைகள் வழங்குவார்கள் .
No comments:
Post a Comment