Tuesday, August 21, 2012

தெய்வத் தமிழ்த் திருமுறைத் திருமணச் சடங்கு நூல்

                   நமது இல்லங்களில் நடைபெறும் திருமணங்களில் மந்திரங்கள் சொல்லப்படுகின்றன , ஆனால் அந்த மந்திரங்களின் பொருள் நமக்கு தெரிவதில்லை .காரணம் அந்த மந்திரங்கள் வடமொழியில் இருப்பதால் . திருமணச் சடங்குகளில் சொல்லப்படும் மந்திரங்களுக்கு இணையான பொருள் உள்ள தமிழ் பாடல்கள் நமது பன்னிரு திருமுறைகளில் உள்ளன .
          திருமணச் சடங்குகளில் அதற்குப் பொருத்தமான பாடல்களைச் சொல்லி நடத்துவது பொருத்தமாக இருக்கும் என்ற கருத்து உணர்ந்து பரவியதால் இப்பொழுது திருமணங்களில் இந்த முறை செயல்பட ஆரம்பித்து உள்ளது . இந்த நடைமுறையை சைவ அன்பர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் வடமொழி தெரியாதவர்களும் நடைமுறைப்படுத்தினால் , அனைவருக்கும் பாடல்களைச் செவிமடுத்து அதன் பொருள் உணர்ந்து கொள்வதற்கு வசதியாக இந்த தெய்வத் தமிழ்த் திருமுறைத் திருமண  நூல் வெளியிடப்படுகின்றது .

திருமணச் சடங்கு வரிசை முறையும் , அந்தந்தச் சடங்குகளின் ஓதும் திருமுறைப் பாடல்களும்  : -

             மண விழாவிற்குக் குறித்த நேரத்திற்கு ஒரு மணி முன்னதாகவே குருக்கள் மேடையில் வேண்டியவற்றை முறைப்படுத்தி வைக்க வேண்டும் .

1} மஞ்சள் பிள்ளையார்
2} நிறை நாழி
3}திருவிளக்கு
4} கலசகும்பங்கள்
அமைத்து அழல் ஓம்பத் தேவையான , அழல் குண்டமும் அமைத்து ஆயத்தமாகவேண்டும் .

1 } திருவிளக்கு ஏற்றுதல் : -

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே .           ( அப்பர் )

2} விநாயகர் துதி : -

பிடியதன் உருஉமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுரை இறையே .     ( சம்பந்தர் )

3}  நால்வர் துதி : - 

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
வாழிதிரு நாவலூர் வந்தொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி .


4} புனித நீர் வழிபாடு : -

களித்துக் கலந்ததோர் காதற்கசிவோடு காவிரிவாய்க்
குளித்துக் தொழுது முன் நின்ற இப்பத்தரை கோதில் செந்தேன்
தெளித்துச் சுவையமுது ஊட்டி அவர்கள் சூழிருப்ப
அளித்துப் பெருஞ்செல்வமாக்கும் ஜயாறன் அடித்தலமே .

கடல்களின் அரசே வருணா போற்றி
நன்னீர்ப் பெருங்கடல் பொன்னே போற்றி
நீருக்கதிபதி நிறைவே போற்றி
மகரவாகனம் மகிழ்ந்தாய் போற்றி
புனிதன் சடைஅமர் வனிதை போற்றி
கங்கையென்னும் மங்கை போற்றி
யமுனை நதியெனும் நல்லாய் போற்றி
நருமதை நதியாம் நல்லருள் போற்றி
சிந்து நதியின் சிறப்பே போற்றி
காவிரி நதியாய்க் காப்பாய் போற்றி
துங்கா நதி நங்கா போற்றி
ஆன் பொருனை அரசி போற்றி
தண் பொருனைத் தாயேபோற்றி .

5 } திருக்குட ( கலசம் ) வழிபாடு : -

                          திருக்குடங்களில் சிவனையும் உமையம்மையையும் எழுந்தருளச் செய்தல் ( ஆவாகனம் ) .மணவிழா நடத்தும் குருக்கள் தம்மிரு கைகள் நிறைய மலர் எடுத்துத் தலைக்குமேல் கைகுவித்து , இறைவனையும் ,
இறைவியையும் திருக்குடங்களில் எழுந்தருளுமாறு வேண்டிக் கைகளை தம் மார்புக்கு நேராகக் கொண்டு வந்து , கீழ்வரும் பாடல் பாடியவுடன்
   
        இடம் கொண்டருள்க இறைவா போற்றி
        வடிவத்துறை வள்ளலே போற்றி
        அருள் ஒளி தருக அம்மையே போற்றி

திருக்குடங்களின் மேல் தன்கையில் உள்ள மலரைத் தூவ வேண்டும் .


6 ) மணமகன் மேடைக்கு வருகை : -

                                தெய்வ வழிபாடு : ( மாதா , பிதா , குரு , தெய்வம் )

பெற்றோர் வழிபாடு : -

                                மேடைக்கு அருகில் வடபுறம் , இரு நாற்காலிகளில் தாயையும்  தந்தையையும் அமரச்செய்து , ஒரு தாம்பாளத்தில் தந்தையின் வலப்பாதமும்  
தாயின் இடப்பாதமும் வைத்து மணமகன் , அவர்களின் பாதங்களில் நீர் ஊற்றி நன்கு கழுவி , பால் ஊற்றி , மலர்தூவி , கற்பூர ஒளி காட்டவும் .

பாடல் :-

அரவனையான் சிந்தித்து அரற்றும் அடி
அருமறையான் சென்னிக்கு அணியாம் அடி
சரவணத்தான் கைதொழுது சாரும் அடி
சார்ந்தார்கட்கெல்லாம் சரணாம் அடி
பரவுவார் பாவம் பறைக்கும் அடி
பதினெண் கணங்களும் பாடும் அடி
திரைவிரவு தென்கெடில் நாடன் அடி
திரு வீரட்டானத்து எம்செல்வன் அடி .               ( அப்பர் )





No comments:

Post a Comment